Tamil News Updates: விவசாய சங்க பிரதிநிதிகளுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா நடத்திய பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. வேளாண் திருத்த சட்டங்கள் எழுத்துப்பூர்வமாக இன்று விவசாயிகளிடம் வழங்கப்படுகிறது. அரசுடன் இன்று ஆறாம் கட்ட பேச்சு வார்த்தை நடைபெறாது என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். வேளாண்மை திருத்த சட்டங்களை எதிர்க்கும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன. வட இந்தியாவில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்பில் 20% இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தார். கடலூரில் மழை பாதித்த இடங்களை நேரில் ஆய்வு செய்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. புரெவி புயல் குறித்து கணக்கிட மத்திய குழுவுக்கு அழைப்பு விடுக்கப்படும் என அவர் தெரிவித்தார். இந்தியாவில் முதற்கட்டமாக 1 கோடி சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு திட்டம்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Live Blog
Tamil News Today: சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
பொதுத்தரவு அலுவலகங்களின் மூலம் பொது வை-ஃபை வலைப் பின்னல்களை அமைப்பதற்கான தொலைத்தொடர்புத் துறையின் திட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் மூலம், எந்தவித உரிமக் கட்டணமும் இல்லாமல் பொது இடங்களில் அகண்ட அலைவரிசை வை-ஃபை வசதிகளை நாடு முழுவதும் உள்ள பொதுத்தரவு அலுவலகங்களின் வாயிலாக வழங்க முடியும்.
நாட்டில் பொது வை-ஃபை வலைப் பின்னல்களின் வளர்ச்சியை இத்திட்டம் ஊக்கப்படுத்தும். இதனால் அகண்ட அலைவரிசை இணைய வசதியின் வீச்சு அதிகமாகி, வருமானமும், வேலைவாய்ப்புகளும் பெருகி மக்களுக்கு நன்மைகள் கிடைக்கும்.
நீர்வள மேலாண்மையில் சிறப்பான பங்கை ஆற்றி வரும் தனிநபர்களையும், அமைப்புகளையும் ஊக்குவித்து அங்கீகாரம் அளிக்கும் நோக்கத்தில், தேசிய தண்ணீர் விருதுகள் 2020-க்கான விண்ணப்பங்களை மத்திய ஜல்சக்தி அமைச்சகம் வரவேற்றுள்ளது.
https://mygov.in என்ற தளத்தில் மேலும் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
டிசம்பர் 14 ம் தேதி நாடு முழுவதும் பாஜக அலுவலகங்களை முற்றுகையிட விவசாய சங்கங்கள் முடிவு செய்துள்ளனர். மேலும், நாடு முழுவதும் ரிலையன்ஸ் / அதானி / அம்பானி நிறுவனங்கள் / தயாரிப்புகள் புறக்கணிப்படும் என்றும் எச்சரிகை விடுத்தனர்.
காலமுறை ஊதிய உயர்வு உள்ளிட்ட அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை அதிமுக அரசு கண்டுகொள்ளவே இல்லை. மத்திய அரசு மருத்துவரின் 4 ஆண்டு ஊதிய உயர்வைப் பெற தமிழக அரசு மருத்துவருக்கு 15 ஆண்டுகள் ஆகிறது! தன்னலமற்ற மருத்துவர்களை கொரோனா காலத்திலும் முதல்வர் புரிந்து கொள்ளாதது ஏன்? என்று மு. க ஸ்டாலின் தெரிவித்தார்.
சுய சார்பு இந்தியா இயக்கத்தின் கீழ் வேலை வாய்ப்பு வழங்கும் திட்டத்திற்காக நடப்பு நிதியாண்டில்1,584 கோடிரூபாய் ஒதுக்கீடு செய்வதற்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.
லட்சத் தீவு-கொச்சி இடையே நீர்முழ்கி கம்பிவடத் தடத்தை ஏற்படுத்தும் திட்டத்திற்கும் ஒப்புதளித்துள்ளது.
இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்விச்சாலைகள் திறக்கப்பட்டுள்ளன. சென்னை புறநகர் ரயில்களில் மாணவர்களுக்கு அனுமதி இல்லை. ஏழை மாணவர்கள் நகருக்குள் வந்து செல்ல நம்பி இருப்பது புறநகர் ரயில்களையே. அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
— Kamal Haasan (@ikamalhaasan) December 9, 2020
சென்னையில் இன்று காலை முதியவர் உயிரிழந்த விவகாரத்திற்கு மாநகராட்சி மறுப்பு தெரிவித்துள்ளது. மழைநீர் தேங்கிய பள்ளத்திலோ, கழிவுநீர் கால்வாயிலோ விழுந்து உயிரிழக்கவில்லை, மாரடைப்பால் உயிரிழந்திருக்கலாம் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் இன்று (09.12.2020) பிரார்த்தனை மேற்கொண்டேன். pic.twitter.com/5PoySdLmya
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) December 9, 2020
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights