Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamil news update
அர்ஜென்டினா அணி சாம்பியன்
கத்தாரில் நடைபெற்ற கால்பந்து உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் பிரான்ஸை வீழ்த்தி அர்ஜென்டினா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் பெனால்டி ஷூட்-அவுட் சுற்றில் பிரான்ஸ் அணியை 4-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி வீழ்த்தியது. இதன்மூலம் 36 ஆண்டுகளுக்குப் பிறகு 3வது முறையாக கால்பந்து உலகக்கோப்பையை அர்ஜென்டினா வென்றது.
கால்பந்து விருதுகள்

உலக கோப்பை கால்பந்து தொடரில் அதிகமாக 8 கோல்கள் அடித்து கோல்டன் ஷூ விருதை பிரான்ஸ் அணியின் கைலியன் எம்பாப்பே வென்றார். அர்ஜென்டினா அணியின் மெஸ்சி கோல்டன் பந்து விருதை வென்றார்.
அர்ஜென்டினா அணியின் மார்டினெஸ், சிறந்த கோல் கீப்பருக்கான கோல்டன் க்ளவுஸ் விருதும், அஜென்டினாவின் 21 வயதான என்சோ பெர்னாண்டஸ்-க்கு சிறந்த இளம் வீரருக்கான விருது வழங்கப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
சென்னை சேலையூர் அருகே வனப்பகுதியில் கடந்த ஜூன் மாதம் பெண் போதகர் எஸ்தர் (51) சடலமாக கண்டெடுக்கப்பட்ட வழக்கில், செல்போன் மற்றும் ரூ. 700 பணத்திற்காக லோகநாதன் (20) என்பவரால் கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது. 5 மாதங்கள் தொடர்ந்து வழக்கை கண்காணித்து குற்றவாளியைப் போலீசார் கைது செய்தனர்.
டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த பிறகு கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ ட்வீட் செய்துள்ளார். அதில், “பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியாவின் தொழில்ண்டுப வளர்ச்சி மிக வேகமாக வளர்ந்து வருவதைப் பார்க்கிறேன். வருங்காலத்தில் இந்தியாவுடன் தொழில்நுட்ப ரீதியிலான நல்லுறவை எதிர்நோக்குவதாகவும், ஜி20 நாடுகளின் தலைமை பொறுப்பை ஏற்றதற்கு தனடு முழு ஆதரவு இருக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.
Thank you for a great meeting today PM @narendramodi. Inspiring to see the rapid pace of technological change under your leadership. Look forward to continuing our strong partnership and supporting India's G20 presidency to advance an open, connected internet that works for all. pic.twitter.com/eEOHvGwbqO
— Sundar Pichai (@sundarpichai) December 19, 2022
சென்னை, வானகரத்தில் அ.தி.மு.க சார்பில் கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்றார். விவசாயி கதையை சொல்லி எடப்பாடி பழனிசாமி பேசினார்.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உத்தரவின் பேரில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடி மக்களுக்கான இறுதி ஈமச்சடங்கு உதவி தொகை 15 ஆயிரத்திலிருந்து 25 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது என ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் எனக்கூறி போலியாக ரெய்டு நடத்தி ரூ. 20 லட்சம் கொள்ளை அடித்த பா.ஜ.க நிர்வாகி உள்பட 6 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
சென்னை மண்ணடியில் என்.ஐ.ஏ அதிகாரி எனக் கூறி செல்போன் கடை உரிமையாளரை மிரட்டி ரூ. 20 லட்சம் வரை பணம் பறித்த வழக்கில், பா.ஜ.க நிர்வாகி வேங்கை அமரன் என்கிற வேலு உள்பட 6 பேர் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். ராயபுரத்தைச் சேர்ந்த பா.ஜ.க நிரவகியான வேலு இந்த கொள்ளைக்கான தீட்டிகொடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் எனக்கூறி போலியாக ரெய்டு நடத்தி ரூ. 20 லட்சம் கொள்ளை அடித்த பா.ஜ.க நிர்வாகி உள்பட 6 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி: “பள்ளிகளில் ஆங்கிலம் கற்பிக்கப்படுவதை பா.ஜ.க தலைவர்கள் விரும்பவில்லை; ஆனால், அவர்களின் பிள்ளைகள் ஆங்கில வழிப் பள்ளிகளுக்குச் செல்கிறார்கள், உலகின் பிற நாட்டு மக்களிடம் பேச விரும்பினா, அங்கு இந்தி பயன்படாது; ஆங்கிலம்தான் தேவைப்படும்” என்று கூறியுள்ளார்.
13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், சிறுமியின் தாத்தா, சித்தப்பாக்கள் உள்பட 4 ஆயுள் தண்டனை விதித்து சென்னை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஜெயலலிதாவின் உடல் எடை 100 கிலோ, சர்க்கரை 220 ஆக இருந்தது. கிரியாட்டின் 68 மி.கிராம், ரத்த அழுத்தம் 120ஆக இருந்தது. அறுவை சிகிச்சை செய்யலாமா என்பதை நீங்களே சுயபரிசோதனை செய்து பாருங்கள். மடிக்கணியை வைத்துக்கொண்டு தேடிப் பாருங்கள் உங்களுக்கே முடிவு தெரியும் என்று ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தகவல் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே இளையரசனேந்தல் சாலையில் தனியார் பேருந்து – கார் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், காரில் வந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இருவர் பாளை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு கொரோனா பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. பதவியேற்ற 10 நாள்களுக்குள் அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை தீவுத் திடலில் நடைபெறவுள்ள 47ஆவது சுற்றுலா பொருள்காட்சி டெண்டரை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்யவில்லை.
கர்நாடக மாநில சட்டப்பேரவையில் இந்துத்துவ சித்தாந்தவாதியான வீர சாவர்க்கரின் உருவப் படம் திறக்கப்பட்டது.
இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.
நடிகர் விஜய் நடிப்பில் பொங்கலுக்கு திரைக்கு வரவிருக்கும் வாரிசு படத்தின் 3ஆவது பாடல் நாளை (டிச.20) மாலை வெளியாகிறது.
சென்னையில் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சிறுமியின் தாத்தா, சித்தப்பாக்கள் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சிறுமியின் சகோதரர்கள் ஒருவருக்கு 10 ஆண்டும், மற்றொருவருக்கு 5 ஆண்டும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் 2023 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு ரூ.500க்கு சமையல் எரிவாயு வழங்கப்படும் என முதலமைச்சர் அசோக் கெலாட் வாக்குறுதி அளித்துள்ளார்.
பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக நாளை (டிச.20) ஆலோசனை நடைபெறவுள்ளது.
இந்த அமைச்சரவை கூட்டத்தில் கிராம மக்களின் கருத்துகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
இக்கூட்டத்தில் அமைச்சர்கள் எ.வ. வேலு, தங்கம் தென்னரசு, தா.மோ. அன்பரசன் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.
சென்னை அடையாறில் வாகன சோதனையின் போது போதை மாத்திரை வைத்திருந்தவர கோகுல் என்பவரை போலீசார் கைது செய்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்திக்கு பதில் ஆங்கிலம் கற்க வேண்டும் என ராஜஸ்தான் மக்களிடம் ராகுல் காந்தி பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே அங்கன்வாடிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய 2 வயது குழந்தை குளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளது.
வருகின்ற ஏப்ரல் மாதம் முதல் ரேஷனின் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம் செய்யப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்
அரசின் செலவினங்களுக்கு கூடுதலாக ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கப்படுகிறது அரசின் செலவினங்களுக்கான கூடுதல் நிதியை மத்திய அரசு எங்கிருந்து பெறப்போகிறது? என அரசின் செலவினங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கக்கோரும் மசோதா மீது மாநிலங்களவையில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேசியுள்ளார்
“புலம்பெயர் தமிழர் நல வாரியம்” தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தலைவராக திருப்பூரை சேர்ந்த கார்த்திகேய சிவசேனாபதியை நியமனம் செய்யப்பட்டுள்ளார். வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களின் நலன் காக்க “புலம்பெயர் தமிழர் நல வாரியம்” அமைக்கப்பட்டுள்ளது
புதுக்கோட்டை, அறந்தாங்கி அரசு மருத்துவமனை மருத்துவர், செவிலியர், உதவியாளர், பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தவறான சிகிச்சை புகாரில் பொதுமக்கள் நடத்திய போராட்டத்தால் இணை இயக்குனர் இந்த நடவடிக்கை எடுத்துள்ளார்
கர்நாடக சட்டப்பேரவையில் சாவர்க்கரின் முழு உருவப்படத்தை அம்மாநில சபாநாயகர் விஸ்வேஸ்வர் ஹெக்டே காகேரி திறந்துவைத்தார்
கரூர், அதிமுக நிர்வாகி திரு.வி.க கடத்தப்பட்ட விவகாரத்தில் திமுக – அதிமுகவினர் மோதல்
இருதரப்பினர் மாறி மாறி செருப்பு வீச்சு. சம்பவ இடத்திற்கு எஸ்.பி. வருகை
முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கார் கண்ணாடி உடைப்பு
கடலூர், திட்டக்குடி அருகே மீண்டும் மருந்தகத்தில் கருக்கலைப்பு மாத்திரை சர்ச்சை
கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்ட பெண் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி
அதே பகுதியில் மருந்தகம் நடத்திய சுரேஷ் என்கிற போலி மருத்துவர் கைது
கரூர் மாவட்ட துணைத்தலைவர் வேட்பாளர் கடத்தப்பட்டதால், தேர்தலுக்கு தடை விதிக்க கோரிக்கை
மதுரை உயர்நீதிமன்றத்தில் வேட்பாளர் தரப்பில் முறையீடு
நெல்லை எஸ்.பி. சரவணனை கைது செய்து ஆஜர்படுத்த பிறப்பித்த உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் தடை
மாநில எஸ்.சி., எஸ்.டி. ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை
சென்னை குரோம்பேட்டையில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை
போன் செய்தால் எடுக்க இவ்வளவு நேரமா? என தாய் கண்டித்ததாக கூறப்படுகிறது .
பேசிக்கொண்டிருந்த போதே அழைப்பை துண்டித்துவிட்டு மாணவி சென்ற நிலையில் தற்கொலை
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வாகனம் மீது தாக்குதல்
திண்டுக்கல் மாவட்டம் நாகம்பட்டி அருகே சென்ற போது காரில் வந்த மர்ம நபர்கள் தாக்குதல்
4 கார்களில் வந்த மர்ம நபர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர் காரின் கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு
திண்டுக்கல்லில் இருந்து கரூருக்கு சென்ற போது கார் மீது தாக்குதல்
கரூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தேர்தல் தொடர்பான விவகாரத்தில் தாக்குதல் என தகவல்
நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம்
உப்பெனா என்ற தெலுங்கு படத்தை தமிழில் ரீமேக் செய்ய விஜய் சேதுபதிக்கு தடை விதிக்கக் கோரி டல்ஹவுசி பிரபு என்ற உதவி இயக்குனர் வழக்கு
உலக மகன் என்ற தனது கதையை திருடி உப்பெனா உருவாக்கப்பட்டதாக மனு.
உப்பெனா படத்தை தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை வாங்கவில்லை – நடிகர் விஜய் சேதுபதி தரப்பு விளக்கம்
விஜய் சேதுபதியின் விளக்கத்தை ஏற்று வழக்கை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்
நம்பர் 1 தமிழ்நாடு என்ற கனவு நிறைவேறி உள்ளது
அரசுப் பள்ளிகளை தனியார் பங்களிப்போடு மேம்படுத்தும் முன்னோடி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளை மேம்படுத்த மக்களும் அரசுடன் கைகோர்க்க வேண்டும்.
'நம்ம ஸ்கூல்' திட்டத்தை துவக்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை.
சென்னை, கிண்டியில் அரசு பள்ளிகளை தத்தெடுக்கும் வகையில் தமிழக அரசின் 'நம்ம ஸ்கூல்' திட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் ஆகியோர் பங்கேற்பு
சென்னை, தலைமைச் செயலகத்தில் நாளை அமைச்சர்கள் குழு ஆலோசனை. பரந்தூர் விமான நிலையம் அமைக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசனை அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன் தலைமையிலான குழு ஆலோசனை
டெல்லி, பஸ்சிம் விஹாரில் 'டிஜிட்டல் பூட்டு' கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் டிஜிட்டல் பூட்டை கைப்பற்றி விசாரணை
பொங்கல் தொகுப்பு மற்றும் ரூ. 1,000 வழங்குவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனையில் அமைச்சர்கள் சக்கரபாணி, பெரிய கருப்பன் ஆகியோர் பங்கேற்பு
திருப்பூர், அலகுமலையில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக் கூடாது என கோரி மனு தமிழக அரசு, மாவட்ட ஆட்சியர் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, நுங்கம்பாக்கம் பள்ளிக்கல்வித்துறை அலுவலக வளாகத்திற்கு பேராசிரியர் க.அன்பழகன் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
கட்சியின் அமைப்பு செயலாளராக முன்னாள் எம்.பி. மைத்ரேயன் நியமிக்கப்பட்டுள்ளதாக ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து காஞ்சிபுரம், ஏகனாபுரத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி சென்ற கிராம மக்கள் பேரணி தடுத்து நிறுத்தப்பட்டது. பேரணியாக வந்த கிராம மக்களுடன் ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் சரவண கண்ணன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
புயல் எச்சரிக்கை காரணமாக, தூத்துக்குடியில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஹிமாச்சல் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அந்தமானுக்கு அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிய நிலையில், ராமேஸ்வரம் கடற்பகுதிக்கு செல்ல மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ், உதயநிதி பங்கேற்கும் மாநாடு என பொய் சொல்லி, மாநிலம் முழுவதும் பகுதி நேர ஆசிரியர்களிடம் வசூல் செய்ததாக லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கால்பந்து உலகக்கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
This will be remembered as one of the most thrilling Football matches! Congrats to Argentina on becoming #fifaworldcup Champions! They’ve played brilliantly through the tournament. Millions of Indian fans of Argentina and Messi rejoice in the magnificent victory! @alferdez
— Narendra Modi (@narendramodi) December 18, 2022
மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவையின் 10-வது கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில், பொங்கல் பரிசுத் தொகுப்பு உள்ளிட்ட தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.
கத்தாரில் நடைபெற்ற கால்பந்து இறுதி போட்டியை மலையாள நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால் நேரில் கண்டு ரசித்தனர்.
At Lusail Stadium, joining the world to witness the clash of the titans and partake in the world's favourite madness!Awaiting a phenomenal and entertaining game from the bests, just like you all!#fifaworldcup #argentinavsfrance pic.twitter.com/3t3g26YVor
— Mohanlal (@Mohanlal) December 18, 2022
Witnessing the biggest sporting spectacle !What an atmosphere..What a moment !!#fifaworldcup #argentinavsfrance pic.twitter.com/MJAzPoQ6Es
— Mammootty (@mammukka) December 18, 2022
FIFA உலகக்கோப்பையில் வெற்றி பெற்ற அர்ஜென்டினா அணிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து ட்வீட்
What an absolute humdinger of a match! The never-say-die attitude of #france & #mbapp's Hat-trick made it one of the best world cup finals ever. Congratulations to #argentina & #goat #messi on winning the #fifaworldcup. Special word of appreciation must go to Martinez. pic.twitter.com/7LiEdY1k4P
— M.K.Stalin (@mkstalin) December 18, 2022