Advertisment

News Highlights: ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை தமிழகத்தில் நுழையவிடாமல் தடுப்பதே கூட்டணி நோக்கம்- ராகுல் காந்தி

Tamil news : சசிகலா உணவு எடுத்து கொள்கிறார்" மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை

author-image
WebDesk
New Update
News Highlights: ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை தமிழகத்தில் நுழையவிடாமல் தடுப்பதே கூட்டணி நோக்கம்- ராகுல் காந்தி

Tamil news today: மூன்று நாள்கள் தேர்தல் பரப்புரைக்காக, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வந்திருக்கிறார்

Advertisment

கோவையில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.நாட்டின் அடித்தளம் வேற்றுமையில் ஒற்றுமை. அனைத்து கலாச்சாரங்கள் மீது மரியாதை, வரலாறுகளை பற்றிய மரியாதை வேண்டும். ஆனால் ஆர்.எஸ்.எஸ் , பி.ஜே.பி போன்றவை ஓரே நாடு, ஓரு மொழி, ஓரே கலாச்சாரம் என்கின்றனர்.இதை நாம் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது என்றார்.

தி.மு.க.வின் அடுத்தகட்ட பிரசாரத்தை எந்த வகையில் முன்னெடுத்து செல்வது? மக்களுக்கு கொடுக்கப்போகும் முக்கிய வாக்குறுதிகள் என்னென்ன? என்பதை இன்று (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு, சென்னை கோபாலபுரத்தில் உள்ள மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதியின் இல்லத்தில் வைத்து மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் அறிவிக்கிறார்.

எனது ஆதரவாளர்கள் விரும்பினால் எம்.எல்.ஏ., அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயார். புதுச்சேரி காங்கிரஸ் அதிருப்தி அமைச்சர் நமச்சிவாயம் பேட்டி.

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 22 காசுகள் அதிகரித்து ₨88.29-க்கும், டீசல் விலை லிட்டருக்கு 24 காசுகள் அதிகரித்து ₨81.14-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையை தேர்தல் ஆணையம் இன்று அறிமுகம் செய்கிறது.

குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, சென்னை புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில், ரயில்வே போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். இந்த ஒத்திகையில் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் உதவுடன் நடைமேடைகளில், தீவிர சோதனை மேற்கொண்டனர். மேலும், மொத்தமாக 300 ரயில்வே போலீசார், சுழற்சி முறையில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

Live Blog

News In Tamil : இன்றைய முக்கியச் செய்திகள் தொடர்பான தமிழ் லைவ் பிளாக் இது. இதில் தமிழகம், இந்தியா, உலகம் சார்ந்த முக்கிய செய்திகளின் அப்டேட்டை உடனுக்குடன் தமிழில் காணலாம்.



























Highlights

    21:40 (IST)25 Jan 2021

    எஸ்பிபி, சாலமன் பாப்பையாவுக்கு பத்ம விருதுகள்

    பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையாவுக்கும் , மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியனுக்கும்  பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டது.      

    21:09 (IST)25 Jan 2021

    உள்ளாட்சி ஜனநாயகத்தின் குரல்வளை மீண்டும் நெறிக்கப்பட்டுள்ளது - மு. க ஸ்டாலின் கண்டனம்

    குடியரசு தினத்தில் நடைபெற வேண்டிய கிராமசபை கூட்டங்களை ரத்துசெய்து - உள்ளாட்சி ஜனநாயகத்தின் குரல்வளையை மீண்டும் நெறித்திருக்கும் அதிமுக அரசுக்கு கடும் கண்டனம் என மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.   

    20:52 (IST)25 Jan 2021

    நாளை கிராம சபை கூட்டங்களை நடத்த தமிழக அரசு தடை

    தமிழகம் முழுவதும் நாளை கிராம சபை கூட்டங்களை நடத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது.  கோவிட் 19 தொற்று பரவலை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக  ஊரக வளர்ச்சித்துறை உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.   

    20:49 (IST)25 Jan 2021

    பெருந்தொற்றை முறியடிக்க நாட்டு மக்கள் குடும்பமாக இணைந்து செயல்பட்டனர் - குடியரசு தலைவர்

    72வது குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களிடம் உரையாற்றினார். நாட்டு மக்கள் அனைவருக்கும் 72-வது குடியரசுத் தின வாழ்த்துக்கலைத் தெரிவித்த "பெருந்தொற்றை முறியடிக்க தங்கள் இன்னுயிரையும் பொருட்படுத்தாமல் நாட்டிற்காகவும், மக்களுக்காகவும் சேவையாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அனைத்து தரப்பிலும் பாடுபட்ட நல்ல உள்ளங்களை இந்நாளில் நினைவு கூர்கிறேன். கோவிட்_19 பெருந்தொற்றை முறியடிக்க நாட்டு மக்கள் குடும்பமாக இணைந்து செயல்பட்டனர். நமது விஞ்ஞானிகள் குறுகிய காலத்தில் தடுப்பு மருந்தை கொண்டு வந்து வரலாற்று சாதனை படைத்துள்ளனர்" என தனது குடியரசு உரையில் தெரிவித்தார்.  

    18:50 (IST)25 Jan 2021

    அதிமுக ஆட்சியில் மக்கள் படும் துயரங்களுக்கு முடிவு கட்ட வேண்டும் - மு. க ஸ்டாலின்

    10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் மக்கள் படும் துயரங்களுக்கு முடிவு கட்ட வேண்டும் என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார். திருவொற்றியூரில் நடைபெற்றுவரும்  மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் பொதுக்கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்தார். 

    18:48 (IST)25 Jan 2021

    தேசியவாதி என்று மக்களை ஏமாற்றி கொண்டுள்ளார் மோடி - ராகுல் குற்றச்சாட்டு

    நாட்டின் ராணுவ ரகசியங்களை ஊடகவியலாளருக்குப் பகிர்ந்து விட்டு தான் ஒரு தேசியவாதி என்று மக்களை ஏமாற்றி கொண்டுள்ளார் மோடி என தேர்தல் பரப்புரையில் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.  

    18:19 (IST)25 Jan 2021

    பெரியார் பேருந்து கட்டுமான பணியில் மணலுக்கு பதில் களிமண் : பழனிவேல் தியாகராஜன்

    மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மற்றொரு முறைகேடு!

    இத்திட்டத்தின் கீழ் நடைபெறும் பெரியார் பேருந்து கட்டுமான பணியில் மணலுக்கு பதில் களிமண் பயன்படுத்தப்படுகிறது. மக்கள் வரிப்பணத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களில் இவ்வித முறைகேடுகள் நடைபெறுவதற்கு அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும் என மதுரை மத்தி தொகுதி எம். எல். ஏ பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.     

    18:02 (IST)25 Jan 2021

    தற்போது 13வது வாரத் தவணையாக மாநிலங்களுக்கு ரூ.6,000 கோடி வழங்கப்பட்டது

    ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதன் காரணமாக மாநிலங்களுக்கு ஏற்பட்ட வருவாய் குறைப்புக்கு மத்திய அரசு இழப்பீட்டுத் தொகை வழங்கி வருகிறது. தற்போது 13வது வாரத் தவணையாக மாநிலங்களுக்கு ரூ.6,000 கோடி வழங்கப்பட்டது. இதிலிருந்து  23 மாநிலங்களுக்கு  ரூ. 5,516.60 கோடியும்,  தில்லி, ஜம்மு காஷ்மீர், புதுச்சேரி ஆகிய மூன்று யூனியன் பிரதேசங்களுக்கு ரூ. 483.40 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ஐந்து மாநிலங்கள், அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், மிசோரம், நாகலாந்து, சிக்கிம் ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டி அமலாக்கத்தால் வருவாய் பற்றாக்குறை ஏற்படவில்லை என மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.   

    17:55 (IST)25 Jan 2021

    அண்ணாத்த திரைப்படம் நவம்பர் 4ம் தேதி ரிலிஸ் - சன் நிறுவனம்

    ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த திரைப்படம் வரும் நவம்பர் 4ம் தேதி திரையில் வெளியாகும் என்று சன் நிறுவனம் அறிவித்தது.      

    17:51 (IST)25 Jan 2021

    நாளை மறுநாள் சசிகலா விடுதலையாகிறார் - டிடிவி தினகரன்

    சசிகலா நாளை மறுநாள் 27.01.2021 அன்று விடுதலையாகிறார் என டிடிவி தினகரன் தெரிவித்தார் . கொரோனா தொற்றினால் ஏற்பட்ட பாதிப்பு வெகுவாக குறைந்து அவர்கள் உடல்நிலை தேறி வருவதால், மருத்துவர்களின் உரிய ஆலோசனை பெற்று பெங்களூரு மருத்துவமனையில் இருந்து வரும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.  

    17:32 (IST)25 Jan 2021

    வேல் போருக்கும் உரியது மற்றும் யாருக்கும் உரியது- வைரமுத்து

    வேல் என்பது கடவுளின்

    கைப்பொருள் மட்டுமில்லை

    இரும்புக் காலத்தில் 

    மனிதன் கண்டறிந்த

    வேட்டைக் கருவிகளுள் ஒன்று வேல்

    தமிழர்களின்

    ஆதி ஆயுதம் வேல்

    அது வேட்டைக்கும் உரியது

    வழிபாட்டுக்கும் உரியது

    போருக்கும் உரியது

    மற்றும்

    யாருக்கும் உரியது

    என கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டரில் பதிவிட்டார்.  

    17:30 (IST)25 Jan 2021

    மின்னணு வாக்காளர் அடையாள அட்டை - ரவிசங்கர் பிரசாத் தொடங்கி வைத்தார்

    மின்னணு வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை ரவிசங்கர் பிரசாத் தொடங்கி வைத்தார்.

    17:29 (IST)25 Jan 2021

    ஆளுநர் பன்வாரிலால் ப்ரோஹித் தமிழக மக்களுக்கு குடியரசு தின வாழ்த்து

    72 -வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, ஆளுநர் பன்வாரிலால் ப்ரோஹித் தமிழக மக்களுக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

    17:27 (IST)25 Jan 2021

    ஆர்எஸ்எஸ் சிந்தாந்தங்களை  தமிழகத்தில் நுழைய விடாமல் தடுப்பதே கூட்டணியின் நோக்கம் - ராகுல் காந்தி

    ஆர்எஸ்எஸ் சிந்தாந்தங்களை  தமிழகத்தில் நுழைய விடாமல் தடுப்பதே வரும் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணியின் முக்கிய நோக்கம் என காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.     

    16:47 (IST)25 Jan 2021

    தமிழ்நாடு காவல் துறையின் 20 அலுவலர்களுக்கு இந்திய குடியரசுத் தலைவர் விருது

    இந்திய அரசு 2021 -ஆம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு காவல் துறையின் 20 அலுவலர்களுக்கு இந்திய குடியரசுத் தலைவர் விருதுகளை அறிவித்துள்ளது.

    16:12 (IST)25 Jan 2021

    ராஜினாமா செய்வது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது!

    சுயநலத்திற்காக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று  புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். நமச்சிவாயம், தீப்பாஞ்சான் ராஜினாமா விவகாரத்தில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி  கருத்து. 

    15:56 (IST)25 Jan 2021

    சசிகலா விடுதலை உறுதி!

    சொத்து வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, நாளை மறுநாள் விடுதலை ஆவது உறுதியாகி உள்ளது..சசிகலாவை, திட்டமிட்டபடி, 27 ஆம் தேதி விடுதலை செய்ய்பபடுவதற்கான பூர்வாங்க பணிகள், நிறைவடைந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நாளை குடியரசு தினம் என்பதால் நன்னடத்தை கைதிகளை விடுதலை செய்யும் பணிகள் அதிகம் இருக்கும் என்பதால் சசிகலாவின் விடுதலை தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் இன்றைய தினமே தயார் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    15:49 (IST)25 Jan 2021

    ஆறுமுகசாமி ஆணையத்துக்கு  அவகாசம்!

    ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு  மேலும் 6  மாதம் அவகாசம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

    15:47 (IST)25 Jan 2021

    20 காவல்துறை அதிகாரிகளுக்கு விருது!

    மிகச் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கான குடியரசுத் தலைவர் விருது. தமிழகத்தை சேர்ந்த 20 காவல்துறை அதிகாரிகளுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

    15:45 (IST)25 Jan 2021

    9ஆம் வகுப்பிற்கு பாடத்திட்டங்கள் குறைப்பு. !

    10 மற்றும் 12ஆம் வகுப்புகளை தொடர்ந்து, 9ஆம் வகுப்பிற்கு பாடத்திட்டங்கள் குறைப்பு. 9 ஆம் வகுப்பிற்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் தற்போது வெளியீடு . 9ஆம் வகுப்பிற்கு 50% வரை பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது.  

    15:43 (IST)25 Jan 2021

    எம்.எல்.ஏ. சுதர்சனம் கொலை மற்றும் கொள்ளை வழக்கு!

    முன்னாள் எம்.எல்.ஏ. சுதர்சனம் கொலை மற்றும் கொள்ளை வழக்கு தலைமறைவாக உள்ள பவாரியா கொள்ளை கும்பலை சேர்ந்த முக்கிய குற்றவாளியை கைது செய்ய மூன்று வார அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. கைது நடவடிக்கைகளை துரிதப்படுத்த காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

    15:38 (IST)25 Jan 2021

    பழைய 100, 10, 5 ரூபாய் நோட்டுகள்!

    பழைய 100, 10, 5 ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தை நிறுத்துவதாக பரவும் தகவல் உண்மையில்லை என்று ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. 

    15:10 (IST)25 Jan 2021

    கிராம சபை கூட்டங்கள் நடத்த வேண்டாம்!

    "கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, கிராம சபை கூட்டங்கள் நடத்த வேண்டாம்" தமிழக அரசு உத்தரவு .அனைத்து மாவட்ட ஆட்சியர்களும், மறு உத்தரவு வரும் வரை, கூட்டங்களை நடத்த அனுமதிக்க வேண்டாம் என அறிவுறுத்தல். 

    15:09 (IST)25 Jan 2021

    புதுச்சேரியில் 2 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா!

    புதுச்சேரி காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நமச்சிவாயம், வில்லியனூர் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். நமச்சிவாயத்திற்கு ஆதரவாக ஊசுடு தொகுதி எம்.எல்.ஏ. தீப்பாஞ்சானும் ராஜினாமா செய்தார் 

    09:21 (IST)25 Jan 2021

    நேபாள பிரதமர் கட்சியில் இருந்து நீக்கம்!

    நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஆளுங்கட்சியின் நிர்வாகக் குழு தலைவர் புஷ்பகமல் தஹார் பிரசந்தா-சர்மா ஒலி இடையே அதிகாரப் போட்டி நிலவி வருகிறது. 

    09:07 (IST)25 Jan 2021

    புதுக்கோட்டை எஸ்.பி எச்சரிக்கை!

    தடையை மீறி டிராக்டர் பேரணி நடத்தினால் மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுக்கோட்டை எஸ்.பி பாலாஜி சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

    08:43 (IST)25 Jan 2021

    வேதா நிலையம் திறப்பு!

    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு இல்லமான வேதா நிலையத்தை வரும் 28 ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைக்கிறார் .ஜன. 28 ஆம் தேதி காலை நடைபெறும் திறப்பு விழாவிற்கு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் முன்னிலை வகிக்கிறார்.

    08:42 (IST)25 Jan 2021

    மதிமுக ஆர்ப்பாட்டம்!

    இலங்கை கடற்பகுதியில் தமிழக மீனவர்கள் உயிரிழந்ததை கண்டித்து இன்று மதிமுக ஆர்ப்பாட்டம் .சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் இலங்கை மற்றும் மத்திய அரசை கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்கிறார். 

    Tamil news today : இந்தியாவில் இதுவரை 16 லட்சம் சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 61,720 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்.

    நேற்றைய செய்திகள்

    குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கும் கலைஞர்கள் மற்றும் என்.எஸ்.எஸ். தன்னார்வலர்கள் உடன் பிரதமர் மோடி உரையாடல். குடியரசு தின அணிவகுப்பு, நமது அரசியலமைப்புக்கு செலுத்தும் மரியாதை.

    Tamil Nadu
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment