Chennai News Live Updates: கடலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

Tamil Nadu Latest Live News Update in Tamil 11 September 2025: இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

Tamil Nadu Latest Live News Update in Tamil 11 September 2025: இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil nadu rains today

Today Latest Live News Update in Tamil 11 September 2025: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.80 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.39 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.சி.என்.ஜி. ஒரு கிலோ கிராம் ரூ.91.50 காசுகளுக்கு விற்பனையாகிறது. 

Advertisment
  • Sep 12, 2025 07:07 IST

    கடலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

    மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை முதல் வரும் 17-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம்



  • Sep 11, 2025 21:13 IST

    மறைந்த வேதமூர்த்தியின் உடலுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

    முதல்வர் மு.க.ஸ்டாலினின் சம்மந்தியும், சபரீசனின் அப்பாவுமான வேதமூர்த்தி மரணமடைந்த நிலையில் அவரது உடலுக்கு முதலவர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.



  • Advertisment
    Advertisements
  • Sep 11, 2025 20:42 IST

    நேபாள சிறையில் இருந்து இந்தியாவுக்குள் நுழைய முயன்ற 60 கைதிகள் கைது

    நேபாள சிறையில் இருந்து இந்தியாவுக்குள் நுழைய முயன்ற 60 கைதிகளை பிடித்த எஸ்.எஸ்.பி பாதுகாப்பு படையினர், அவர்களை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனால் இந்திய எல்லை பகுதிகளில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக்கியுள்ளனர்.



  • Sep 11, 2025 20:05 IST

    விஜய் பிரசாரம் - 21 நிபந்தனைகளுடன் அனுமதி

    "பிரசாரத்தின்போது ஒலி அளவானது பொதுமக்களுக்கு இடையூறு தராத வகையில் இருக்க வேண்டும். பிரசாரத்தின்போது ஆம்புலன்ஸ் வாகனங்கள் சென்று வர எவ்வித தடங்கலும் இல்லாததை உறுதி செய்ய வேண்டும். உரிய அனுமதியின்றி பேனர்கள், அலங்கார வளைவுகள், கொடிக்கம்பங்கள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நிபந்தனைகளை மீறினால் பிரசாரத்தை இடையிலேயே நிறுத்த காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது." என்று காவல்துறை தெரிவித்துள்ளது. 



  • Sep 11, 2025 20:00 IST

    காசா நகர் மீது இஸ்ரேல் தாக்குதல் 

    காசா நகரத்தில் இருந்து கடந்த சில வாரங்களில் மட்டும் சுமார் 2 லட்சம் மக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். தொடர் தாக்குதலில் ஈடுபட்டுள்ள இஸ்ரேல், காசா நகரை முழுமையாக கைப்பற்ற திட்டம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Sep 11, 2025 19:23 IST

    எம்.பி நவாஸ் கனி மீது சொத்துகுவிப்பு புகார் - சி.பி.ஐ பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

    ராமநாதபுரம் தொகுதி எம்.பி நவாஸ் கனிக்கு எதிரான சொத்து குவிப்பு புகாரில் விசாரணை நடத்த கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், ஒரு வாரத்திற்குள் சி.பி.ஐ.  பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 



  • Sep 11, 2025 19:02 IST

    சென்னை மெட்ரோ ரயில் சேவையில் சிறிய மாற்றம்

    வரும் 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை 5 நாட்களில், காலை 5 மணி முதல் 6 மணி வரை கோயம்பேடு - அசோக் நகர் இடையே மெட்ரோ ரயில் சேவை இருக்காது. மேற்குறிப்பிட்ட நேரத்தில், விமான நிலையம்/ செயிண்ட் தாமஸ் மவுண்டில் இருந்து புறப்படும் ரயில்கள் அசோக் நகர் வரை மட்டுமே இயங்கும். அதேபோல, சென்ட்ரலில் இருந்து புறப்படும் ரயில்கள் கோயம்பேடு வரை மட்டுமே செல்லும். பயணிகள் வசதிக்காக அந்த நேரத்தில் மட்டும் கோயம்பேடு - அசோக்நகர் இடையே 10 நிமிட இடைவேளையில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.



  • Sep 11, 2025 18:37 IST

    அரசியல்சாசன அமைப்புகளை பாஜக சிதைக்கிறது: ஆ.ராசா

    உச்சநீதிமன்றம், நாடாளுமன்றம், தேர்தல் ஆணையம் என அரசியல்சாசன அமைப்புகளையும் பாஜக சிதைக்கிறது. நாடாளுமன்றத்தில் முறையாக விவாத்தித்துதான் மசோதாக்களை பாஜக நிறைவேற்றுகிறதா? என அவர் தெரிவித்தார்.



  • Sep 11, 2025 18:37 IST

    பாஜகவிடம் அதிமுக மண்டியிட்டுவிட்டது: ஆ.ராசா

    அதிமுக பாஜகவிடம் மண்டியிட்டு விட்டது; தமிழ்நாட்டையே பாஜகவிடம் அடகு வைக்கிறார்கள். மாநில சுயாட்சி, மதச்சார்பின்மை உள்ளிட்ட கொள்கைகளின் அடிப்படையில் திமுக கூட்டணி அமைந்துள்ளது என்று அவர் கூறினார்.



  • Sep 11, 2025 18:37 IST

    இயலாமையால் எடப்பாடி விமர்சனம் செய்கிறார்: ஆ.ராசா

    தன்னுடைய இயலாமையால் ஓரணியில் தமிழ்நாடு குறித்து எடப்பாடி பழனிசாமி விமர்சிக்கிறார். அ.தி.மு.க.வுக்காக அமித் ஷா முடிவெடுப்பாரா? என்றும், அதிமுகவில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்று அமித் ஷா முடிவெடுப்பாரா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மேலும், அமித் ஷாவை செங்கோட்டையன் சந்தித்து பேசியது ஏன் என்றும் ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார்.



  • Sep 11, 2025 17:47 IST

    டெட் தேர்வு விவகாரத்தில் சட்ட ரீதியாக போராடுவோம்-அமைச்சர் அன்பில் மகேஸ்

    பனியில் இருக்கும் ஆசிரியர்கள் டெட் தேர்வு எழுத வேண்டும் என்ற உத்தரவு கவலையளிக்கிறது என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 



  • Sep 11, 2025 17:45 IST

    டெட் தேர்வு - சீராய்வு மனு தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு

    டெட் தேர்வு விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஆசிரியர் பணிக்கு டெட் தேர்ச்சி கட்டாயம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்கிறது.



  • Sep 11, 2025 17:39 IST

    நேபாளத்தில் அமைதி - ஜனாதிபதி ராம் சந்திர பவுடெல் வேண்டுகோள்

    ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும், நாட்டில் அமைதியை நிலைநாட்டவும் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறேன். கிளர்ச்சி செய்யும் மக்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டில் அமைதி, ஒழுங்கை பேண நிதானத்துடன் மக்கள் ஒத்துழைக்க வேண்டும். பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும். அனைவரும் நம்பிக்கையுடன் இருங்கள் என ராம் சந்திர பவுடேல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



  • Sep 11, 2025 17:32 IST

    சென்னை ஐகோர்ட் நீதிபதியை மணிப்பூர் ஐகோர்ட் தலைமை நீதிபதியாக நியமிக்க பரிந்துரை

    சென்னை ஐகோர்ட் நீதிபதி எம்.சுந்தரை, மணிப்பூர் ஐகோர்ட் தலைமை நீதிபதியாக நியமிக்க பரிந்துரை செய்துள்ளது. கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதி சௌமன் சென்-ஐ மேகாலயா ஐகோர்ட் தலைமை நீதிபதியாக்க பரிந்துரைத்துள்ளது. பாட்னா, மேகாலயா, மணிப்பூர் உயர்நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகளை நியமிக்க பரிந்துரை செய்துள்ளது.



  • Sep 11, 2025 17:25 IST

    தன் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் கங்கனா ரணாவத் மனு

    விவசாயிகள் போராட்டம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டதற்காக தன் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பாஜக எம்.பி.யும் நடிகையுமான கங்கனா ரணாவத் மனு தாக்கல் செய்துள்ளார். பஞ்சாப், ஹரியானா உயர் நீதிமன்றங்கள் இந்த வழக்கை ரத்து செய்ய மறுத்த நிலையில், உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார். இவ்வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது



  • Sep 11, 2025 17:12 IST

    சோனியா காந்திக்கு எதிரான மனு தள்ளுபடி

    இந்திய குடியுரிமை பெறுவதற்கு முன்பே வாக்காளர் பட்டியலில் சேர்ந்ததாகக் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யக் கோரிய மனுவை டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த விவகாரத்தில், சோனியா காந்திக்கு எதிராக எப் ஐ ஆர் பதிவு செய்ய உத்தரவிட மறுப்பு தெரிவித்து நீதிபதி உத்தரவிட்டார்.



  • Sep 11, 2025 16:43 IST

    உறவாடிக் கெடுப்பது காங்.; பாஜக அல்ல - நயினார் நாகேந்திரன்

    மாநில அரசின் ஆட்சியை கவிழ்த்தது காங்கிரஸ்; இதுதான் காங்கிரசின் கலாசாரம்; எங்களுடன் கூட்டணியில் உள்ளவர்களுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கொடுத்திருக்கிறோம்; இதுதான் எங்கள் கலாசாரம்; உறவாடிக் கெடுப்பது காங்கிரஸ் கட்சி என்று பாமக உட்கட்சி பிரச்னைக்கு பாஜகதான் காரணமென்ற செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டுக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பதிலளித்துள்ளார். 



  • Sep 11, 2025 16:42 IST

    ஓசூரில் டெல்டா நிறுவனத்தின் விரிவாக்க திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்

    ஓசூரில் ரூ.450 கோடியில் அமையும் டெல்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் விரிவாக்க திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதன் மூலம் 400 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவித்துள்ளார். 



  • Sep 11, 2025 16:32 IST

    பாஜக கொள்கையோடு ஒத்துப்போய் நடப்பதுதான் திமுக ஆட்சி - சீமான்

    பாஜகவின் எல்லாக் கொள்கையோடு ஒத்துப்போய் ஒரு ஆட்சி நடக்கிறது என்றால் அது திமுக ஆட்சிதான். ஆபரேஷன் சிந்தூரை ஆதரித்து முதன்முதலில் பேரணி நடத்தியவர் நம் முதல்வர் ஸ்டாலின்தான் ஆபரேஷன் சிந்தூரை ஆதரித்து உலகநாடுகளில் பிரதிநிதியாக பேசியவர் கனிமொழி குஜராத் கலவரத்தை ஆதரித்து பேசியவர்கள், மணிப்பூர் கலவரத்தை எதிர்த்து பேசினர். குஜராத் கலவரத்தை ஐயா கருணாநிதி, மாநில பிரச்னை என்று சொன்னாரா இல்லையா? குஜராத் கலவரத்தை இந்தக் கட்சியினர் பாராளுமன்றத்தில் ஆதரித்து பேசியது இருக்கிறதா? இல்லையா? அதே கட்சி, அதே ஆட்சியால் நடந்த மணிப்பூர் கலவரம் குறித்து நீங்கள் எதிர்த்து பேசியது பாராளுமன்றத்தில் இருக்கிறதா? இல்லையா? கூட்டணியில் இருக்கும்போது ஆதரித்து பேசினீர்கள், கூட்டணியில் இல்லாதபோது எதிர்க்கிறீர்கள் என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டியளித்துள்ளார். 



  • Sep 11, 2025 16:26 IST

    எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் ஏற்றுமதியில் இந்தியாவில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது: முதல்வர் மு.க ஸ்டாலின்

    உலகளவில் முன்னணி நிறுவனமாக வளர்ந்துள்ள டெல்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துக்கு வாழ்த்துகள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். டெல்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவன விரிவாக்கம் மூலம் 400க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். எலக்ட்ரானிக்ஸ் துறையில் அளப்பரிய பங்களிப்பால் டெல்டா நிறுவனம் உலகளவில் முன்னணி நிறுவனமாக வளர்ந்துள்ளது. எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் ஏற்றுமதியில் இந்தியாவில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்று கூறியுள்ளார்.



  • Sep 11, 2025 16:18 IST

    பொறுப்பு டிஜிபி நியமிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

    தமிழ்நாடு பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமன் நியமிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் தாங்கள் தலையிட விரும்பவில்லை என்று நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். டிஜிபி பதவி காலியாக உள்ள நிலையில் பொறுப்பு டிஜிபி நியமிக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடரமுடியாது.



  • Sep 11, 2025 16:08 IST

    தியாகி இமானுவேல் சேகரனாரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

    தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவு தினத்தையொட்டி சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் அவரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார் அக்கட்சியின் தலைவர் விஜய்.



  • Sep 11, 2025 15:57 IST

    அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    சென்னை - வடபழனி முருகன் கோயிலின் வாகன நிறுத்துமிடங்களில் திருமண மண்டபம், பணியாளர் குடியிருப்பு கட்டுவதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் மனுதாரர் புகாரை விசாரித்து தேவைப்பட்டால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

     



  • Sep 11, 2025 15:04 IST

    செங்கோட்டையன் சந்திப்பு - 'அமித்ஷா சொன்னால்தான் நம்புவோம்': அ.தி.மு.க எம்.எல்.ஏ பேட்டி

    டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்ததாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறிய நிலையில் அமித்ஷா சொன்னாதான் நம்புவோம் என்று அ.தி.மு.க எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா பதிலளித்துள்ளார்.



  • Sep 11, 2025 14:15 IST

    காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு:  ஜெகன் மூர்த்திக்கு முன்ஜாமினை நீட்டித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு 

    காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன் மூர்த்திக்கு அளிக்கப்பட்ட முன்ஜாமினை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காதல் தொடர்பாக பெண் வீட்டாரும், இளைஞர் வீட்டாரும் சமரசத்தை எட்டியுள்ளதாக ஜெகன் மூர்த்தி தரப்பில் வாதிடப்பட்டது.



  • Sep 11, 2025 13:48 IST

    விஜய் வேட்டையாட வரும் சிங்கம் அல்ல வேடிக்கை காட்ட வரும் சிங்கம் - சீமான் விமர்சனம்

     

    மக்களோடு மக்களாக நிற்பவர் தான் மக்களுக்காக வந்தவர். மக்களை சந்திப்பது என்பது ரோட் ஷோ போவது அல்ல. விஜய் வேட்டையாட வரும் சிங்கம் அல்ல வேடிக்கை காட்ட வரும் சிங்கம் என்று சீமான் விமர்சித்தார்.



  • Sep 11, 2025 13:35 IST

    எல்லா அதிகாரமும் நிறுவனர் ராமதாஸிடம்தான் உள்ளது - பா.ம.க பொதுச் செயலாளர் முரளி சங்கர்

    டாக்டர் ராமதாஸ் தரப்பு பாமக பொதுச் செயலாளர் முரளி சங்கர் தைலாபுரத்தில் பேட்டி: “வழக்கறிஞர் பாலு தவறான தகவல்களைப் பொதுமக்களிடம் பரப்பி வருகின்றார். டாக்டர் ராமசுக்கு அதிகாரம் இல்லை என்று கூறும் பாலுவை வன்மையாக கண்டிக்கிறோம். எச்சரிக்கிறோம். கேவியட் மனுத் தாக்கல் செய்துள்ளோம். டாக்டர் ராமதாஸ் ஆலோசனைப்படி அடுத்தகட்ட முடிவு எடுப்போம்” என்று கூறினார்.



  • Sep 11, 2025 13:02 IST

    கோவையில் அக். 9, 10 தேதிகளில் புத்தொழில் மாநாடு - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

    ஒசூரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 
    கோவையில் அக். 9, 10 தேதிகளில் புத்தொழில் மாநாடு நடைபெறும். தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்கும் நோக்கில் இந்த மாநாடு நடத்தப்பட உள்ளதாக தெரிவித்தார். புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களையும், முதலீட்டு வாய்ப்புகளையும் இந்த மாநாடு வழங்கும் என்றும் அவர் கூறினார்.



  • Sep 11, 2025 12:56 IST

    இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு தடை விதிக்க மறுப்பு - சுப்ரீம் கோர்ட்

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் செப்.14ம் தேதி இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. இந்நிலையில், பஹல்காம் தாக்குதல் காரணமாக போட்டிக்கு தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.



  • Sep 11, 2025 12:54 IST

    ‘இதைவிட முக்கிய வேலை இருக்கிறது’; பா.ம.க-வில் இருந்து நீக்கப்பட்டது குறித்த கேள்விக்கு அன்புமணி பதில்

    பா.ம.க-வில் இருந்து நீக்கப்பட்டது குறித்த கேள்விக்கு அன்புமணி பதில் அளிக்கையில், “எல்லா கேள்விகளுக்கும் வழக்கறிஞர் பாலு பதிலளிப்பார். இதை விட முக்கியமான வேலை எனக்கு இருக்கிறது” என்று கூறினார்.



  • Sep 11, 2025 12:52 IST

    அபராதம் செலுத்தினால்தான் வாகன இன்சூரன்ஸ் புதுப்பிப்பு - காவல்துறை புதிய திட்டம்

    அபராத தொகையை செலுத்தினால் மட்டுமே வாகனங்களின் இன்சூரன்ஸை புதுப்பிக்க முடியும் என்று விதிமீறல்களில் ஈடுபடுவதை தடுக்க போக்குவரத்து காவல்துறை திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அபராதம் செலுத்தினால் மட்டுமே வாகனத்தை விற்கவோ, பெயர் மாற்றமோ செய்ய முடியும் என்பது பழைய நடைமுறை ஆகும்.



  • Sep 11, 2025 12:44 IST

    பா.ம.க விதிகளின்படி நிறுவனருக்கு, நிர்வாகத்தில் அதிகாரம் இல்லை - வழக்கறிஞர் பாலு

    சென்னையில் அன்புமணியின் ஆதரவாளர் வழக்கறிஞர் பாலு பேட்டி: “பா.ம.க விதிகளின்படி நிறுவனருக்கு, நிர்வாகத்தில் அதிகாரம் இல்லை. பா.ம.க நிறுவனர் ராமதாஸின் எந்த அறிவிப்பும் அன்புமணியைக் கட்டுப்படுத்தாது” என்று கூறியுள்ளார்.



  • Sep 11, 2025 12:15 IST

    பா.ம.க-வில் இருந்து நீக்கம்: அன்புமணி ராமதாஸ் அவசர ஆலோசனை  

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தன்னைக் கட்சியிலிருந்து நீக்கியதாக அறிவித்த நிலையில், தனது ஆதரவு நிர்வாகிகளுடன் அன்புமணி ராமதாஸ் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.

    இந்த ஆலோசனை கூட்டம் கடலூரில் நடைபெற்று வருகிறது. இதில் மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் உள்ள பா.ம.க. நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டுள்ளனர். ராமதாஸின் இந்த அதிரடி அறிவிப்பு, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



  • Sep 11, 2025 11:47 IST

    இமானுவேல் சேகரன் நினைவு நாளில், அந்த தியாகியின் நினைவைப் போற்றி வணங்குவோம் – ஸ்டாலின் புகழாரம்

    தீண்டாமை, இரட்டைக் குவளை முறை, சாதிய ஒடுக்குதல் போன்ற சமூகச் சழக்குகளுக்கு எதிராக வீரியமிகுந்த போராட்டங்களை முன்னெடுத்த சமத்துவப் போராளி தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவு நாள்! அவர் வாழ்ந்தது 32 ஆண்டுகளே... ஆனால் அவர் மறைந்தாலும் அவரது புகழ்ச்சுடர் அணையாமல் இன்றளவும் சமூகநீதிப் பாதைக்கு வழிகாட்டும் ஒளியாகத் திகழ்கிறது. அத்தீரமிகு தியாகியின் நினைவைப் போற்றி வணங்குகிறோம் என முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.



  • Sep 11, 2025 11:45 IST

    ஒரு கோடிக்கும் மேலான குடும்பங்கள் உறுதிமொழி ஏற்கும் - ஸ்டாலின்

    தமிழ்நாட்டின் மண் - மொழி - மானம் காக்க நமது ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் ஒரு கோடிக்கும் மேலான குடும்பங்கள் இணைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, தமிழ்நாட்டின் தலைமகன் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் (செப்.15) தமிழ்நாடெங்கும் 68,000+ பூத் வாரியாக உறுதிமொழி ஏற்க உள்ளனர் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



  • Sep 11, 2025 11:36 IST

    அன்புமணி பேசுவது எல்லாம் பொய், என்னையே உளவு பார்த்தவர் - ராமதாஸ்

    அன்புமணி பேசுவது எல்லாம் பொய், என்னையே உளவு பார்த்தவர் அன்புமணி. யாரை, யார் வேவு பார்ப்பது, வேவு பார்க்க என்ன உள்ளது. மகனின் செயல், தந்தையின் செயலைவிட உயர்ந்து இருக்க கூடாது. இரா. என்ற இன்சியலை மட்டும் அன்புமணி போட்டுக் கொள்ளலாம். அன்புமணியால் பா.ம.க அழிகிறதே என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தான் ஏற்பாடு செய்த கூட்டத்திற்கு அன்புமணி கட்டுப்பாடுகள் விதிப்பதா? நானே தலைவர், எனக்கே அனைத்து அதிகாரமும் உள்ளது. அன்புமணியுடன் உள்ளவர்கள் தவறை உணர்ந்தால் மன்னிக்க தயாராக இருக்கிறேன். அன்புமணி அறிவான பிள்ளைதான், தற்போது சரியில்லை. இது குடும்பம், தந்தை, மகன் சம்பந்தப்பட்டது அல்ல, கட்சி தொடர்புடையது என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்



  • Sep 11, 2025 11:22 IST

    அன்புமணி நீக்கம் பா.ம.க.,வுக்கு பின்னடைவு இல்லை – ராமதாஸ்

    அன்புமணி நீக்கப்பட்டது கட்சிக்கு பின்னடைவு இல்லை. இறுதி மூச்சுவரை கோலூன்றியாவது மக்களுக்காக பாடுபடுவேன். செயல் தலைவர் பதவியை யாருக்கு கொடுப்பது என பின்னர் முடிவு செய்யப்படும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்



  • Sep 11, 2025 11:02 IST

    அன்புமணி தனிக் கட்சி ஆரம்பித்துக் கொள்ளலாம் - ராமதாஸ்

    தேவைப்பட்டால் அன்புமணி தனிக் கட்சி ஆரம்பித்துக் கொள்ளலாம். தனி மனிதன் ராமதாஸ் ஆரம்பித்த கட்சி இந்த பா.ம.க. இதில் உரிமை கொண்டாட யாருக்கும் உரிமையில்லை. மகனாகவே இருந்தாலும் இந்தக் கட்சியை உரிமைக் கொண்டாட உரிமையில்லை. ஒரு பயிரிட்டால் களை முளைக்கத்தான் செய்யும். அதற்காக யாரும் பயிரிடாமல் இல்லை. களையை நீக்கி விட்டோம். குந்தகம் விளைப்பிப்போரை கட்சியில் இருந்து நீக்கி விட்டோம் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 



  • Sep 11, 2025 11:01 IST

    நிர்வாகிகளை மன்னிக்கத் தயார் - ராமதாஸ்

    அன்புமணியுடன் இருப்பவர்கள் மீது வருத்தம் இருந்தாலும், அவர்களை மன்னிக்க தயாராக இருக்கிறேன். அன்புமணியோடு இருந்தால் பலன் கிடைக்கும் என்று அவர்கள் அங்கு இருந்திருக்கலாம் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 



  • Sep 11, 2025 10:48 IST

    பா.ம.க நிர்வாகிகள் அன்புமணியுடன் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது - ராமதாஸ்

    பா.ம.க அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து அன்புமணி நீக்கம் செய்யப்படுகிறார். கட்சி நிர்வாகிகள் யாரும் அன்புமணியுடன் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது. மீறி தொடர்பு வைத்தால் கட்சி விரோத நடவடிக்கை எடுக்கப்படும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 



  • Sep 11, 2025 10:35 IST

    பா.ம.க.,வில் இருந்து அன்புமணி நீக்கம் – ராமதாஸ் அறிவிப்பு

    பா.ம.க.,வில் இருந்து அன்புமணியை நீக்கம் செய்து அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.



  • Sep 11, 2025 10:14 IST

    சார்லி கிர்க் படுகொலைக்கு காரணமான ஒவ்வொருவரையும் தண்டிப்பேன் - டிரம்ப் ஆவேசம்

    சார்லி கிர்க் மீதான துப்பாக்கிச்சூடு அரசியல் படுகொலை, அமெரிக்காவிற்கு இருண்ட தருணம். சார்லி கிர்க் படுகொலைக்கு காரணமான ஒவ்வொருவரையும் அடையாளம் கண்டு தண்டிப்பேன் என அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்



  • Sep 11, 2025 10:13 IST

    சார்லி கிர்க் கொலை - பராக் ஒபாமா கண்டனம்

    சார்லி கிர்க்கை சுட்டுக் கொன்ற நபரை யார் தூண்டியது என்பது எங்களுக்கு தெரியவில்லை. இழிவான வன்முறைக்கு நமது ஜனநாயகத்தில் இடமில்லை சார்லியின் குடும்பத்தினருக்காகவும், அவரது மனைவி மற்றும் 2 இளம் குழந்தைகளுக்காகவும் பிரார்த்தனை செய்வோம் என அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்



  • Sep 11, 2025 09:58 IST

    மதுரை விமான நிலையத்திற்கு பாண்டிய மன்னன் பெயர்: சீமான்

    "மதுரை விமான நிலையத்திற்கு பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனின் பெயரை வைத்தால் யாரும் எதிர்க்க மாட்டார்கள். அதுதான் எங்களுக்கும் பெருமை, நாடகத்தின் நிலைப்பாடும் இதுதான்."

    விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத்தேவர் பெயரை வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எடப்பாடி பழனிசாமி பேசியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு சீமான் இவ்வாறு பதிலளித்தார்



  • Sep 11, 2025 09:32 IST

    வாகனங்களுக்கான அபராத நிலுவைத் தொகையைச் செலுத்தினால் தான் இன்சூரன்ஸை புதுப்பிக்க முடியும்: காவல்துறை

    வாகனங்களுக்கான அபராத நிலுவைத் தொகையைச் செலுத்தினால் தான், இன்சூரன்ஸை புதுப்பிக்க முடியும் என்ற புதிய நடைமுறையை சென்னை மாநகரக் காவல்துறை கொண்டுவந்துள்ளது. போக்குவரத்து விதிமீறல்களுக்காக விதிக்கப்பட்ட அபராத நிலுவைத் தொகை சுமார் 300 கோடி ரூபாய் வரை செலுத்தப்படாமல் உள்ளதால், நிலுவைத் தொகையை வசூல் செய்யும் பொருட்டு, கம்பி வலை கொண்டு வாகனங்களை நிறுத்தி சென்னை மாநகரக் காவல்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.



  • Sep 11, 2025 09:24 IST

    டெல்லியில் 5 பயங்கரவாதிகள் கைது

    டெல்லியில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஐந்து பயங்கரவாதிகளை டெல்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து வெடிகுண்டு தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட உதிரி பாகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது



  • Sep 11, 2025 09:15 IST

    ஆசிய கோப்பை - இன்று வங்கதேசம், ஹாங்காங் மோதல்

    ஆசிய கோப்பை கிரிக்கெட் : அபுதாபியில் இன்று நடைபெறும் போட்டியில் வங்கதேசம் - ஹாங்காங் அணிகள் மோதுகின்றன. 



  • Sep 11, 2025 08:58 IST

    தலைமைச் செயலாளர் எச்சரிக்கை

    அரசு ஊழியர்கள் அனைவரும் இன்று கட்டாயம் பணிக்கு வரவேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி, இன்று ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்தவிருப்பதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து தலைமைச் செயலாளர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.



  • Sep 11, 2025 08:54 IST

    பிரதமர் நரேந்திர மோடி இன்று உத்தரகாண்ட் பயணம்

    பிரதமர் நரேந்திர மோடி இன்று உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொள்கிறார். முதலில், இந்தியா வந்துள்ள மொரீஷியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலமை வாரணாசியில் சந்தித்துப் பேசுகிறார். அதன் பின்னர், இன்று மாலை உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை விமானம் மூலம் நேரில் ஆய்வு செய்ய இருக்கிறார்.



  • Sep 11, 2025 08:52 IST

    மதுரையில் நயினார் நாகேந்திரன் பேட்டி

    அதிமுக - பாஜக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை.. செங்கோட்டையன் சந்திப்பு குறித்து எனக்கு தெரியாது. ஓ.பன்னீர்செல்வத்துடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளேன்.

    - டெல்லி செல்லும் முன் மதுரையில் நயினார் நாகேந்திரன் பேட்டி



Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: