Advertisment

News Highlights: எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க மேலும் ஒரு அமைச்சர் ஆதரவு!

Tamil News Today: ஸ்டாலின் செயல்பாடுகள் பூஜ்யத்தில் இருப்பதாக அமைச்சர் உதயகுமார் விமர்சித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
News Highlights: எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க மேலும் ஒரு அமைச்சர் ஆதரவு!

Tamil Nadu News Today Live Updates :  தமிழக மக்களின் நம்பிக்கை நாயகராக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திகழ்கிறார் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

Advertisment

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பணியையும், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பணியையும் ஒப்பிட்டு பார்த்தால் ஸ்டாலின் செயல்பாடுகள் பூஜ்யத்தில் இருப்பதாக அமைச்சர் உதயகுமார் விமர்சித்துள்ளார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் மோடியுடன் காணொளி மூலம் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இந்த சந்திப்பில் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. நீலகிரி மாவட்டத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49-ஆக உயர்ந்துள்ளது. மழை காரணமாக மீட்புப் பணிகள் சவாலாக இருப்பதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தைத் தாண்டியது. புதிதாக தமிழகத்தில் 5914 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதே நேரத்தில் உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியைத் தாண்டியது. இதிலிருந்து 1.30 கோடி பேர் மீண்டிருக்கிறார்கள்.

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Live Blog

Tamil Nadu News Today Live Updates

சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.



























Highlights

    22:18 (IST)11 Aug 2020

    சென்னையில் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது

    தாம்பரம், வண்டலூர், அண்ணாசாலை, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி கிண்டி, வடபழனி, அம்பத்தூர், பாடி,  மாதவரம், ரெட்ஹில்ஸ், புழல் , ராயபுரம், வண்ணாரப்பேட்டை பகுதிகளில் பலத்த  மழை பெய்து வருகிறது.  

    22:04 (IST)11 Aug 2020

    எடப்பாடிதான் முதல்வர் வேட்பாளர்: ராஜேந்திர பாலாஜியை அடுத்து உதயகுமார் ஆதரவு

    வரும் சட்டமன்றத் தேர்தலை எடப்பாடி பழனிசாமி தலைமயில் தான் சந்திப்போம் என்று உதயகுமார் தெரிவித்தார். அதிமுக முதல்வர் வேட்ப்ளார் எடப்பாடி. பழனிசாமி தான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றும் தெரிவித்தார்.   

    21:01 (IST)11 Aug 2020

    திராவிடத்தால் வாழ்ந்தோம், பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை குறித்து கனிமொழி

    பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை என்ற சட்டத்தை இன்று உச்சநீதிமன்றம் உறுதிசெய்தது. இதுகுறித்து கருத்து தெரிவத்த திமுக எம்.பி கனிமொழி, தனது ட்வீட் செய்தியில், "ஒட்டுமொத்த இந்திய நாட்டிற்கே முன்னோடியாக 30 ஆண்டுகளுக்கு முன்னர் தலைவர் கலைஞர் பிறப்பித்த பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை என்ற சட்டத்தை இன்று உச்சநீதிமன்றம் உறுதிசெய்துள்ளது. இதுதான் திராவிடம் ! திராவிடத்தால் வீழவில்லை. திராவிடத்தால் வாழ்ந்தோம்" கருத்து தெரிவித்தார்.  

    21:01 (IST)11 Aug 2020

    திராவிடத்தால் வாழ்ந்தோம், பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை குறித்து கனிமொழி

    பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை என்ற சட்டத்தை இன்று உச்சநீதிமன்றம் உறுதிசெய்தது. இதுகுறித்து கருத்து தெரிவத்த திமுக எம்.பி கனிமொழி, தனது ட்வீட் செய்தியில், "ஒட்டுமொத்த இந்திய நாட்டிற்கே முன்னோடியாக 30 ஆண்டுகளுக்கு முன்னர் தலைவர் கலைஞர் பிறப்பித்த பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை என்ற சட்டத்தை இன்று உச்சநீதிமன்றம் உறுதிசெய்துள்ளது. இதுதான் திராவிடம் ! திராவிடத்தால் வீழவில்லை. திராவிடத்தால் வாழ்ந்தோம்" கருத்து தெரிவித்தார்.  

    20:34 (IST)11 Aug 2020

    லெபனான் பிரதமர்  அஸன் டையப் பதவி விலகினார்

    லெபனான் வெடிவிபத்து சம்பவத்திற்கு பொறுப்பேற்று, அந்நாட்டின் பிரதமர்  அஸன் டையப் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த வெடிவிபத்தால் ஏராளமான கட்டிடங்கள் சேதம் அடைந்ததோடு உயிரிழப்பும் ஏற்பட்டதை அடுத்து, கவனக் குறைவாக நடந்து கொண்ட அரசைக் கண்டித்து அந்நாட்டில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வந்தன.

    20:01 (IST)11 Aug 2020

    கோவாக்ஸின் தடுப்பூசியின் 2-ம் கட்ட சோதனை இன்று தொடங்கியது

    கோவிட்-19-க்கு உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு வரும் கோவாக்ஸின் தடுப்பூசியின் 2-ம் கட்ட சோதனை இன்று நாக்பூரில் தொடங்கியுள்ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோ டெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்துடன் இணைந்து இந்த தடுப்பு மருந்தை தயாரித்து வருகிறது.

    19:33 (IST)11 Aug 2020

    என்எல்சி ஒப்பந்த ஊழியர்களுக்கு ரூ.4,000 வரை ஊதிய உயர்வு அறிவிப்பு

    என்எல்சி இந்தியா ஒப்பந்த ஊழியர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.3,600 முதல் ரூ.4,000 வரை ஊதிய உயர்வை என்.எல்.சி நிர்வாகம் அறிவித்தது.  

    18:28 (IST)11 Aug 2020

    தமிழகத்தில் இன்று மட்டும் 5,834 பேருக்கு கொரோனா பாதிப்பு,118 பேர் உயிரிழப்பு

    தமிழகத்தில் இன்று மட்டும் 5,834 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாநிலத்தின் மொத்த பாதிப்புய் எண்ணிக்கை 3,08,649 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 6,005 -பேர் கொரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியதாக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம், 2,50,680 -பேர் இதுநாள் வரையில் கொரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்

    18:18 (IST)11 Aug 2020

    அனைத்து மருத்துவ சேவைகளும் 24 மணி நேரமும் அளிக்கப்பட்டு வருகிறது

    அரசு மருத்துவமனைகளில் கோவிட்-19 நோய் தொற்று அல்லாத பிற நோய்களுக்கும் எவ்வித தங்குதடையுமின்றி அவசரகால மருத்துவ சேவை உள்ளிட்ட அனைத்து மருத்துவ சேவைகளும் 24 மணி நேரமும் அளிக்கப்பட்டு வருகிறது  என்று சுகாதாரத் துறை அமைச்சர்  விஜயபாஸ்கர் தெளிவுபடுத்தினர்.

    17:58 (IST)11 Aug 2020

    பயணிகள் மற்றும் புறநகர் ரயில் சேவை ரத்து நீட்டிப்பு

    பயணிகள் மற்றும் புறநகர் ரயில் சேவை ரத்து நீட்டிப்பு

    புதிய அறிவிப்பு வரும் வரை பயணிகள் மற்றும் புறநகர் ரயில் சேவை ரத்து நீட்டிக்கப்படுவதாக ரயில்வே அறிவிப்பு

    தற்போது இயக்கப்பட்டு வரும் 230 சிறப்பு ரயில்கள் தொடர்ந்து இயங்கும்

    மும்பையில் மட்டும் தேவைக்கு ஏற்ப உள்ளூர் மின்சார ரயில்கள் இயக்கப்படும்

    17:53 (IST)11 Aug 2020

    ரஷ்ய தடுப்பூசி - தேசிய நிபுணர் குழு ஆலோசனை

    ரஷ்யாவில் இருந்து கொரோனாவுக்கான தடுப்பூசி பெறுவது குறித்து மத்திய அரசு அமைத்த தேசிய நிபுணர் குழு ஆலோசனை

    மாநில அரசுகள், தடுப்பூசி உற்பத்தியாளர்களுடன் தேசிய நிபுணர் குழு தொடர்பில் இருக்கும்: மத்திய சுகாதாரத்துறை

    17:45 (IST)11 Aug 2020

    ஊதிய உயர்வு அறிவிப்பு

    என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு

    மாதம் ஒன்றுக்கு ரூ.3,600 முதல் ரூ.4,000 வரை ஊதிய உயர்வு அறிவிப்பு

    வீட்டு வாடகை, செலவு படி, உணவு படி போன்ற இதர சலுகைகள் - தலா இரண்டு செட் சீருடை வழங்கவும் உத்தரவு.

    இந்த ஊதிய உயர்வு மற்றும் சலுகைகள் 2026ம் ஆண்டு டிசம்பர் வரை அமலில் இருக்கும்

    இதன்மூலம் 14000 ஒப்பந்த தொழிலாளர்கள் பயன் பெறுவார்கள்

    இந்த ஊதிய உயர்வு மற்றும் சலுகைகள் அனைத்தும் முன்தேதியிட்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியில் இருந்து வழங்கப்படுகிறது.

    - என்எல்சி நிர்வாகம்

    17:27 (IST)11 Aug 2020

    வழிகாட்டு நெறிமுறைகள்

    உடற்பயிற்சி கூடங்களில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

    17:15 (IST)11 Aug 2020

    முதல்வர் பழனிசாமி ட்வீட்

    முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி விரைந்து குணமடைய வேண்டுகிறேன் என்று முதல்வர் பழனிசாமி ட்வீட் செய்துள்ளார்.

    17:13 (IST)11 Aug 2020

    விசாரணையை தொடங்கியது அமலாக்கத்துறை

    கேரள தங்க கடத்தல் வழக்கில் விசாரணையை தொடங்கியது அமலாக்கத்துறை

    ஓராண்டிற்குள் ரூ. 100 கோடிக்கு மேல் தங்கம் கடத்தியது விசாரணையில் அம்பலம்

    சுவப்னா சுரேஷ், சந்தீப் நாயர், சரித் ஆகியோரை காவலில் எடுத்து அமலாக்கத்துறை விசாரணை

    16:57 (IST)11 Aug 2020

    இழப்பீட்டு தொகையில் முரண்பாடு

    "இ-பாஸ் வழங்குவதில் முறைகேடு நடைபெறுவதால் முற்றிலுமாக தடை செய்ய வேண்டும்;

    கொரோனா முன் களப் பணியாளர்களுக்கான அறிவித்த இழப்பீட்டு தொகையில் முரண்பாடு!"

    - இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் பேட்டி!

    16:46 (IST)11 Aug 2020

    எந்த மொழியும் திணிக்கப்படாது

    எந்த மொழியும் எந்தவொரு மாநிலத்தின் மீதும் திணிக்கப்படாது என்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறியுள்ளார். புதிய கல்விக் கொள்கை குறித்து திமுக சார்பில் டி.ஆர்.பாலு மனு அளித்த நிலையில் அமைச்சர் விளக்ககம் அளித்துள்ளார்.

    16:37 (IST)11 Aug 2020

    நியூசிலாந்தில் 102 நாட்களுக்கு பிறகு 4 பேருக்கு கொரோனா பாதிப்பு!

    நியூசிலாந்தில் 102 நாட்களுக்கு பிறகு 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அங்கு இத்தனை நாட்களுக்கு பிறகு உள்ளூர் மக்களுக்கு கொரோனா தொற்று உறுதியாவது இதுவே முதல்முறை. இதனையடுத்து அந்தப் பகுதிக்கு மட்டும் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    ஆக்லாந்தில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாகவும், ஆனால் யாரிடம் இருந்து தொற்று பரவியது என்பது தொடர்பான தகவல்கள் இல்லை என்றும் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்துள்ளார். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு தீவிரமாக போராடி வருவதாகவும் தெரிவித்துள்ளார். இனி வரும் சூழ்நிலைகளை எதிர்கொள்வதற்கும் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    16:32 (IST)11 Aug 2020

    5.09 கோடி பேர் புறநோயாளிகளாக சிகிச்சை

    தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில் இதுவரை அரசு மருத்துவமனைகளில் 5.09 கோடி பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றுள்ளனர்.

    தமிழகத்தில் இதுவரை 1.80 லட்சம் பிரசவங்களும் 68,479 சிசேரியன் அறுவை சிகிச்சைகளும் நடைபெற்றுள்ளன

    உள்நோயாளிகளாக 27.30 லட்சம் பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்

    - அமைச்சர் விஜயபாஸ்கர்

    16:06 (IST)11 Aug 2020

    10 மாநிலங்களில்...

    தமிழ்நாடு உள்ளிட்ட 10 மாநிலங்களில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்தால் தேசிய அளவில் நாம் வெற்றி பெறலாம்

    - பிரதமர் மோடி

    15:57 (IST)11 Aug 2020

    மும்பை இல்லத்தில் விமானி டி.வி. சாத்தே உடல் - முழு அரசு மரியாதை உடன் இறுதி சடங்கு

    கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்த விமானி டி.வி. சாத்தே உடல், மும்பையில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு முழு அரசு மரியாதை உடன் இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டன.

    15:34 (IST)11 Aug 2020

    கொரோனா தடுப்பு ஊசியை கண்டு பிடித்தது ரஷ்யா

    உலகில் முதல் முறையாக கொரோனா தடுப்பு ஊசியை கண்டு பிடித்தது ரஷ்யா

    அதிபர் புதின் மகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு சோதனை வெற்றி பெற்றதாக தகவல்

    மாஸ்கோவில் உள்ள ஹேமாலயா இன்ஸ்டிடியுட் மற்றும் ரஷ்ய ராணுவ ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து சாதனை

    செப்டம்பர் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் எனவும் அறிவிப்பு

    15:05 (IST)11 Aug 2020

    இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது

    ஆண் வாரிசை போலவே பெண் பிள்ளைகளுக்கும் சொத்தில் சம உரிமை உண்டு என்று பெண்களுக்கு சொத்துரிமையில் சமபங்கு வழங்குவது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியது.

    இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முதல்வர் பழனிசாமி, "சமூக நீதியை காப்பாற்றும் விதமாக வந்திருக்கும் இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது” என்று குறிப்பிட்டுள்ளார். 

    14:56 (IST)11 Aug 2020

    அடித்தளம் அமைக்கும் தீர்ப்பு

    ஆண் வாரிசை போலவே பெண் பிள்ளைகளுக்கும் சொத்தில் சம உரிமை உண்டு என்று பெண்களுக்கு சொத்துரிமையில் சமபங்கு வழங்குவது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியது.

    இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஸ்டாலின் "உரிமை கொண்டவர்களாக பெண்ணினம் உயர அடித்தளம் அமைக்கும் தீர்ப்பு" என்று பாராட்டியுள்ளார்.

    14:35 (IST)11 Aug 2020

    பள்ளிகள் திறக்க சாத்தியக்கூறு இல்லை

    பள்ளிகள் திறக்க தற்போது சாத்தியக்கூறு இல்லை. கொரோனா தாக்கம் குறைந்த பிறகே பள்ளி திறப்பு குறித்து ஆலோசிக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

    14:03 (IST)11 Aug 2020

    17ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை

    அரசுப் பள்ளிகளில் 1,6,9ஆம் வகுப்புகளுக்கு வரும் 17ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும்

    - அமைச்சர் செங்கோட்டையன்

    13:59 (IST)11 Aug 2020

    ஒவ்வொரு மாநிலமும் போராடி வருகிறது

    கொரோனாவை தடுக்க ஒவ்வொரு மாநிலமும் போராடி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் ஒவ்வொரு மாநிலத்தின் பங்கும் மிகவும் முக்கியமானது. குணமடைவோர் எண்ணிக்கை அதிகரிப்பது நாம் சரியான பாதையில் செல்வதை காட்டுகிறது. கொரோனா தடுப்பு-சரியான திசையில் நகர்ந்து கொண்டிருக்கிறோம். சுகாதார பணியாளர்கள் ஒவ்வொரு நாளும் புதிய சவால்களை எதிர்கொள்கின்றனர். COVID19 பரவல் நேரம் ஓடிக்கொண்டிருக்கிறது-புதிய சூழலும் உருவாகிறது

    - பிரதமர் மோடி

    13:46 (IST)11 Aug 2020

    மூணாறு நிலச்சரிவு பலி எண்ணிக்கை அதிகரிப்பு

    மூணாறு நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது. 12 பேர் மீட்கப்பட்ட நிலையில் மீதமுள்ள 15 பேரை தேடும் பணி தொடர்கிறது. தேசிய பேரிடர் மீட்புக் குழு மீட்பு பணியில் தீவிரம் காட்டி வருகிறது. 

    12:59 (IST)11 Aug 2020

    சூர்யா வேண்டுகோள்

    12:37 (IST)11 Aug 2020

    டிசம்பர் வரை பள்ளி கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை

    கொரோனா பாதிப்பு காரணமாக இந்தாண்டு டிசம்பர் வரை பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்க வாய்ப்பில்லை என மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். 

    12:01 (IST)11 Aug 2020

    ஜம்மு-காஷ்மீரில் 4ஜி சேவை

    ஜம்மு-காஷ்மீரில் சோதனை முயற்சியாக ஆகஸ்ட் 15-க்கு பிறகு 4ஜி இணையதள சேவை வழங்க பரிசீலனை  உச்சநீதி செய்யப்படும் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

    11:11 (IST)11 Aug 2020

    பிரதமர் - முதல்வர் ஆலோசனை தொடங்கியது

    பிரதமர் மோடி - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலம் ஆலோசனை தொடங்கியது. கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக இந்த ஆலோசனை நடைபெறுகிறது. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்துகிறார் பிரதமர் மோடி. 

    11:03 (IST)11 Aug 2020

    தங்கம் விலை குறைவு

    சென்னையில் தங்கம் சவரனுக்கு 408 ரூபாய் குறைந்துள்ளது. 

    11:03 (IST)11 Aug 2020

    தங்கம் விலை குறைவு

    சென்னையில் தங்கம் சவரனுக்கு 408 ரூபாய் குறைந்துள்ளது. 

    11:03 (IST)11 Aug 2020

    தங்கம் விலை குறைவு

    சென்னையில் தங்கம் சவரனுக்கு 408 ரூபாய் குறைந்துள்ளது. 

    10:59 (IST)11 Aug 2020

    ராஜேந்திர பாலாஜி ட்வீட்

    Tamil News Updates: அ.தி.மு.க. ஒருங்கிணப்பாளர் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணப்பாளர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது: உலகில் தீமைகள் ஒழிந்து அறம் தழைத்தோங்கிட பகவான் மகாவிஷ்ணு கிருஷ்ணராக அவதரித்த திருநாளை ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடி மகிழும் மக்கள் அனைவருக்கும் எங்கள் இனிய ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

    ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி திருநாளன்று வீட்டில் அழகிய வண்ண கோலங்களிட்டு வாசலில் மாவிலை, தென்னங்குருத்து ஓலைகளால் ஆன தோரணங்களை கட்டி கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த வெண்ணெய், தயிர், பழவகைகள், பலகாரங்கள் போன்றவற்றை படைத்து குழந்தைகளை கண்ணனை போல் அலங்கரித்து குழந்தைகளின் பாத சுவடுகளை மாக்கோலத்தில் தங்கள் இல்லங்களுக்குள் பதித்து அந்த குழந்தை கிருஷ்ணனே தங்கள் இல்லத்திற்குள் வந்தது போல் மனதில் நினைத்து மகிழ்ச்சியுடன் இறைவனை வழிபடுவார்கள்.

    Corona Edappadi K Palaniswami Modi
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment