Tamil News : நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாள் சங்கர மடத்தில் கோ பூஜை நடைபெற்றது. நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து. பொறியியல் இறுதி ஆண்டு மாணவர்கள் தவிர்த்து மற்ற அனைவருக்கும் ஏப்ரல் வரை ஆன்-லைன் வழி வகுப்புகள் மட்டுமே நடைபெறும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு . நாள் ஒன்றுக்கு 5 வகுப்புகள் மட்டுமே நடைபெற வேண்டும் எனவும் உத்தரவு .
சிஎம்எஸ் - 01 தொலை தொடர்பு செயற்கைகோளுடன் டிச.17ல் விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி50 ராக்கெட்.
சிவகங்கை மாவட்ட ஊராட்சித் தலைவர் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 16 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களில் அதிமுக 8 இடங்களிலும், திமுக கூட்டணி 8 என சம பலத்தில் உள்ளன. 4 முறை நடைபெற்ற தேர்தலில் முடிவு ஏற்படாத நிலையில், இன்று நடந்த தேர்தலில், அதிமுக, திமுக வேட்பாளர்கள் சம வாக்குகளை பெற்றனர். ஊராட்சித் தலைவர் பதவிக்கு அதிமுகவை சேர்ந்த வேட்பாளர் மணி பாஸ்கரும், துணை தலைவர் பதவிக்கு சரஸ்வதி அண்ணாவும் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Live Blog
Tamil News Today: சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது, தற்போது 3.6 லட்சத்திற்கும் குறைவானோர் (3,59,819) பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொடர்ந்து 15-வது நாளாக புதிதாக பாதிக்கப்பட்டுள்ளவர்களை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நாட்டில் குணமடைந்தோரின் வீதம் 94.89-ஆக இன்று பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 30,006 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அச்சு ஊடகங்கள் பொது முடக்கத்தால் கடும் பாதிப்பிற்குள்ளானது. சலுகைத் திட்டங்களை அறிவிக்கும்படி இந்திய பத்திரிகைகள் சங்கம் தொடர்ச்சியாக அரசின் கதவுகளைத் தட்டிக்கொண்டே இருக்கிறது. மத்திய அரசின் பாராமுகம் ஏற்புடையதல்ல. ஜனநாயகத்தின் நான்காவது தூண் காக்கப்பட வேண்டும் என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.
சென்னை சுராணா நிறுவனத்தில் இருந்து சிபிஐ பறிமுதல் செய்த தங்கத்தில் 103 கிலோ மாயம் தொடர்பான வழக்கில் துறை ரீதியான விசாரணைக்கு சிபிஐ உத்தரவிட்டது.
முன்னதாக, இந்த வழக்கில் எஸ்.பி. தகுதிக்கு குறையாத அதிகாரியைக் கொண்டு விசாரித்து ஆறு மாதங்களில் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என சி.பி.சி.ஐ.டிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
மாநிலங்களின் மூலதன செலவினங்களுக்கான சிறப்புத் திட்டத்தின் பயன்களை தமிழகம் தவிர நாட்டிலுள்ள மற்ற அனைத்து மாநிலங்களும் பெற்றுள்ளன. இந்தத் திட்டத்தை தற்சார்பு இந்தியா நலத் தொகுப்பின் ஒரு பகுதியாக மத்திய நிதியமைச்சர் கடந்த அக்டோபர் மாதம் அறிவித்திருந்தார்.
நிதி அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "இந்தத் திட்டத்திற்கு மாநிலங்களிடையே சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவரை 27 மாநிலங்களுக்கு ரூ. 9,879.61 கோடி மூலதன செலவினங்களுக்கு மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் ஏற்கனவே முதல் தவணையாக ரூ. 4,939.81 கோடி மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. சுகாதாரம், ஊரக மேம்பாடு, தண்ணீர் விநியோகம், நீர்ப்பாசனம், எரிசக்தி, போக்குவரத்து, கல்வி, நகர்ப்புற மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மூலதன செலவினங்களுக்கான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டது.
கைவினைப் பொருட்கள் மேம்பாட்டு ஆணையத்தில் பதிவு செய்துள்ள கலைஞர்கள் தயாரிக்கும் மற்றும் விற்பனை செய்யும் பொருட்கள், இந்திய தர நிர்ணய அமைப்பின் தரக் குறியீட்டை உபயோகப் படுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கும் பொம்மைகள் (தரக்கட்டுப்பாடு) இரண்டாவது திருத்தப்பட்ட ஆணை 2020, வரும் ஜனவரி 1 முதல் அமலுக்கு வரவிருக்கிறது.
மேலூம், இந்திய பொம்மை தரக் கட்டுப்பாட்டை பின்பற்றுவதிலிருந்தும், தரக்குறியீட்டை பயன்படுத்துவதிலிருந்தும் புவிசார் குறியீடுகள் கொண்ட பொருட்களுக்கு திருத்தப்பட்ட ஆணை விலக்கு அளிக்கிறது
எட்டுவழிச் சாலை என்ற பெயரில் ஆயிரக்கணக்கான கோடிகள் கொள்ளை லாபத்திற்காக விவசாய நிலங்களை அழிக்கத் துடிக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு வேளாண் மசோதாக்களால் தமிழகத்திற்கு என்ன பாதிப்பு என்று எப்படிப் புரியும்? என்று கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கேள்வி எழுப்பினார்.
அதிமுக ஆட்சியில் பேரிடர் நிதியாகக் கேட்கப்பட்ட ரூ. 1.14 லட்சம் கோடியில் வெறும் ரூ.6,187 கோடிதான் கிடைத்திருக்கிறது என்றும் தனிப்பட்ட நலனுக்காக பாஜகவுடன் கூட்டணியா என்றும் முக ஸ்டாலின் அறிக்கை
அதிமுக ஆட்சியில் பேரிடர் நிதியாகக் கேட்கப்பட்ட ரூ. 1.14 லட்சம் கோடியில் வெறும் ரூ.6,187 கோடிதான் கிடைத்திருக்கிறது.
தனிப்பட்ட அரசியல் நலனுக்காக மட்டுமே பாஜகவிடம் நெருக்கமா?#CycloneNivar-ல் பாதிக்கப்பட்ட விவசாயிகளை நட்டாற்றில் விட்டுவிடாமல் ஏக்கருக்கு ரூ. 30000 வழங்க வேண்டும்! pic.twitter.com/4kNdHySkTQ
— M.K.Stalin (@mkstalin) December 12, 2020
ஐக்கிய நாடுகள் சபையில் காலநிலை இலக்கு மாநாட்டில் பேச இருக்கிறார் பிரதமர் மோடி. பாரீஸ் ஒப்பந்தத்தின் 5ம் ஆண்டை முன்னிட்டு இந்த நிகழ்வு நடைபெற உள்ளது. ஐக்கிய நாடுகள் சபை, இங்கிலாந்து, ஃபிரான்ஸ், சிலி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளும் இந்நிகழ்வில் பங்கேற்கின்றன.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஆந்திராவில் இடதுசாரி கட்சியினர் கிருஷ்ணா மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மூன்று சட்டங்களையும் அரசு கைவிட வேண்டும். இது இந்திய விவசாயத்தை தனியார் நிறுவனங்களுக்கு தாரைவார்த்துவிடும் என்று கவலை தெரிவித்தனர்.
Andhra Pradesh: Left party members join in support of farmer unions protest against Centre's new farm laws in Krishna District
"We ask the central govt. to withdraw these three anti-people laws. These laws will transfer Indian agriculture to the corporates," says a union member pic.twitter.com/L3IrwUPioe
— ANI (@ANI) December 12, 2020
இன்று இந்த பருவத்திற்கான முதல் பனிப்பொழிவை சந்தித்தது ஜம்மு ஜாஷ்மீர். உதம்பூரில் அமைந்திருக்கும் பட்னிடாப் பகுதியில் இன்று காலை காணப்பட்ட காட்சி.
Jammu and Kashmir: Various parts of the Union Territory receive snowfall. Visuals from Patnitop in Udhampur. pic.twitter.com/SeXhl1vPlA
— ANI (@ANI) December 12, 2020
ஸ்டாலினுடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது . புதுச்சேரியில் ஆட்சி கவிழ்ப்பு வேலையை ஆளுநர் கிரண்பேடி செய்து வருகிறார் .புதுச்சேரியில் காங்கிரஸ்-திமுக கூட்டணி இடையே எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை என்று ஸ்டாலின் உடனான சந்திப்புக்கு பின்பு நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
கொரோனா பெருந் தொற்று பிரச்சனைக்கு தீர்வுக் காண எம்.ஆர்.என்.ஏ. அடிப்படையிலான தடுப்பூசிகள் அறிவியல் பூர்வமாக சிறந்த தீர்வாக கருதப்படுகிறது என்றும், இது மிகவும் பாதுகாப்பானது எனவும், இவற்றை குறைந்த செலவில் விரைவாக உற்பத்தி செய்ய முடியும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஊரடங்கு காரணமாக திருப்தியில் 65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் குழந்தைகளை தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது,. இதனைத்தொடர்ந்து பக்தர்கள் கோரிக்கை ஏற்று மூத்த குடிமக்கள் மற்றும் குழந்தைகள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது,. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கொரோனா தடுப்பு வழிமுறைகளுடன், டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து 65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களும் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளும் தரிசனம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
அமெரிக்காவிலிருந்து வெளிவரும் "டைம்' இதழ் 2020 ஆம் ஆண்டின் சிறந்த நபராக ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிசை தேர்வு செய்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் அதிபராக இருக்கும் குடியரசு கட்சியின் டொனால்டு டிரம்பை தோற்கடித்த ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிசை, டைம்ஸ் இதழ் தன்னுடைய அட்டைப் படத்தில் 'அமெரிக்காவின் கதை மாறுகிறது' என்ற தலைப்புடன் வெளியிட்டுள்ளது
தமிழக அரசு தொடர்ந்த 9 அவதூறு வழக்குகளை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம் .சுப்பிரமணிய சாமி, செந்தில் பாலாஜி, செல்வகணபதி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்குகள் ரத்து
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights