Tamil Breaking News Highlights: சென்னையில் தொடர்ந்து 3-வது நாளாக நள்ளிரவில் பலத்த மழை

Tamil news live updates-19.10.2024- இன்று நடைபெறும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

Tamil news live updates-19.10.2024- இன்று நடைபெறும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sasa

பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் 215-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. சென்னையில் இன்று ஒரு லிட்டர்பெட்ரோல் ரூ.100.75க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.92.34க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

Advertisment

ஏரிகளின் நீர் நிலவரம் 

சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் 41.1% நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் - 36.98% ; புழல் - 74.39%  ; பூண்டி - 15.69%  ; சோழவரம் - 19.15%  ; கண்ணன்கோட்டை - 63%

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

  • Oct 19, 2024 22:57 IST

    மதுரையில் விமானக்கோளாறு பயணிகள் தவிப்பு

    மதுரையில் இருந்து துபாய் செல்ல வேண்டிய |ஸ்பைஸ் ஜெட் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 3 1/2 மணி நேரம் தாமதமானது. துபாய் செல்ல வேண்டிய 176 பயணிகள் மதுரை விமான நிலையத்தில் காத்திருந்தனர். கோளாறு சரி செய்யப்பட்டு இரவு 1.00 மணிக்கு மதுரையில் இருந்து விமானம் புறப்படும் என ஸ்பைஸ் ஜெட் நிர்வாகத்தினர் தகவல் அளித்துள்ளனர்.



  • Oct 19, 2024 21:50 IST

    நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்

    மதுரையிலிருந்து ராமநாதபுரம் நோக்கிச் சென்ற கார் திடீரென தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தபோதிலும், கார் முழுமையாக எரிந்து நாசமான நிலையில், இது குறித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



  • Advertisment
    Advertisements
  • Oct 19, 2024 20:28 IST

    மீண்டும் களமிறங்கிய புல்லட் யானை: பொதுமக்கள் அச்சம்

    நீலகிரி கூடலூரை அடுத்துள்ள பந்தலூர் பகுதியில் கடந்த மாதம் `புல்லட்' எனப்படும் காட்டு யானை குடியிருப்பு பகுதிகளில் அட்டகாசம் செய்தபோது வனத்துறையினர் அந்த யானையை விரட்டியடித்துள்ளனர். இதனிடையே தற்போது  மீண்டும் `புல்லட்' யானை சேரங்கோடு பகுதியில் இன்று நுழைந்துள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.



  • Oct 19, 2024 20:27 IST

    திருத்தணி மலைப்பாதையில் அழுகிய நிலையில் பெண் சடலம் கண்டெடுப்பு

    திருத்தணி முருகன் கோயில் செல்லும் மலைப்பாதையில் அடையாளம் தெரியாத பெண்ணின் அழுகிய சடலம் கண்கெடுக்கப்பட்டுள்ள நிலையில், அந்த பெண் கொலை செய்யப்பட்டரா அல்லது தவறி விழுந்து இறந்தாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



  • Oct 19, 2024 20:26 IST

    சிறுமியை கொன்ற சிறுத்தையை பிடிக்க குழு 

    கோவை வால்பாறையில் ஊசிமலை மட்டம் எஸ்டேட் பகுதியில் பணிபுரிந்து வரும் வடமாநில தொழிலாளியின் 4 வயது மகள் அப்சராவை சிறுத்தை தாக்கி கொன்ற நிலையில், இந்த சிறுத்தையை பிடிக்க 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.  



  • Oct 19, 2024 20:25 IST

    விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு நிதியுதவி 

    தஞ்சை பாப்பாநாடு பகுதியில் ஆளுநரின் பாதுகாப்பு பணிக்காக சென்ற காவல் ஆய்வாளர் செந்தில்குமார் லாரி மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.  தற்போது அவரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.



  • Oct 19, 2024 19:43 IST

    18 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

    காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், சிவகங்கை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், தீனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.



  • Oct 19, 2024 19:41 IST

    உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

    கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்திற்குச் சென்ற தமிழ்நாடு துணை முதலமைச்சர்  உதயநிதி ஸ்டாலினுக்கு, மாடூர் டோல்கேட் பகுதியில் ஆயிரக்கணக்கான திமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பளித்தனர்.



  • Oct 19, 2024 19:41 IST

    மெரினா லூப் சாலை மீன் அங்காடியில் இன்று முதல் மீன் விற்பனை

    “மெரினா லூப் சாலை மீன் அங்காடியில் இன்று முதல் மீன் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.. மக்களின் ஒத்துழைப்பு தேவை.. அங்காடிக்குள் வந்து மீன்களை வாங்கிச் செல்ல வேண்டும்”  என்று ஆய்வுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் கூறியுள்ளார்.



  • Oct 19, 2024 19:35 IST

    மராட்டிய சட்டசபை தேர்தல்: 10 தொகுதிகளில் வி.சி.க போட்டி

    மராட்டிய சட்டசபை தேர்தலில், ராஷ்டடரிய ஜனதா தள கட்சியுடன் கூட்டணி அமைத்து விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடுகிறது. இரு கட்சிகளும், தலா 10 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில், மற்ற தொகுதிகளில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக திருமாவளவன் கூறியுள்ளார்.



  • Oct 19, 2024 18:09 IST

    'பழங்குடியின மக்களின் வரலாறு அழிக்கப்பட்டுள்ளது' - ஜார்க்கண்டி ராகுல் காந்தி பேச்சு

    “பழங்குடியின மக்களின் வரலாறு, தத்துவம், அறிவியல், மருத்துவம், வாழ்க்கை ஆகியவற்றை பாஜக அழிக்கிறது. பட்டியல், பழங்குடியின மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களை மதிப்பேன் என கூறிக்கொண்டே, அவர்களின் உரிமைகளை பறிக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. 

    ஆம் இந்த மக்களுக்கான மரியாதையை பிரதமர் மோடி தருகிறார் அதேசமயம் உயர்கல்வி நிறுவனங்களிலிருந்து அவர்களை வெளியேற்றும் வேலையையும் பார்க்கிறார். 

    தொடர் தாக்குதலுக்கு உள்ளாகும் அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்க வேண்டும். பழங்குடியின மக்களைப் பற்றி நமது கல்வி முறை நமக்குக் கற்பிக்கத் தவறிவிட்டது. அதனால் அவர்களின் வரலாறு அழிக்கப்பட்டுள்ளது. 

    உயர் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் பட்டியலில் வெறும் 3 பேர் தான் ஓ.பி.சி பிரிவினர். நிதி அமைச்சகத்தில் பட்டியல் மற்றும் பழங்குடியின மக்களின் பிரதிநிதித்துவமே இல்லை. அயோத்தி ராமர் சிலை பிரதிஷ்டை விழாவிற்கு தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது, ஆனால் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் என்பதால் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை அழைக்க வில்லை” என்று ஜார்க்கண்டில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளார். 



  • Oct 19, 2024 17:59 IST

    இஸ்ரேல்  தாக்குதல்களில் 32 பேர் பலி 

    இன்று சனிக்கிழமை காசா பகுதி முழுவதும் இஸ்ரேல் ராணுவம் நடத்தியத் தாக்குதல்களில் குறைந்தது 32 பேர் கொல்லப்பட்டனர், பாலஸ்தீனிய சுகாதார அதிகாரிகள், என்கிளேவின் வடக்கில் உள்ள ஜபாலியாவில் உள்ள மருத்துவமனைகளைச் சுற்றி முற்றுகையிட்டனர். அல்-மக்ஸாயின் மத்திய காசா பகுதி முகாமில், ஒரு வீட்டின் மீது இஸ்ரேலிய தாக்குதல் 11 பேரைக் கொன்றது, அதே நேரத்தில் அருகிலுள்ள நுசிராத் முகாமில் நடந்த மற்றொரு தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டனர்.

    தெற்கு காஸா நகரங்களான கான் யூனிஸ் மற்றும் ரஃபா ஆகிய இடங்களில் இரண்டு வெவ்வேறு வேலைநிறுத்தங்களில் மேலும் ஐந்து பேர் கொல்லப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர், அதே நேரத்தில் வடக்கு காசா பகுதியில் உள்ள ஷாதி முகாமில் ஏழு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.

    ஹமாஸ் பயங்கரவாத உள்கட்டமைப்பு மற்றும் பயங்கரவாதிகளுக்கு எதிராக தற்போது ஜபாலியா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. "இந்த சம்பவம் குறித்து எங்களுக்குத் தெரியாது” என்று இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. 



  • Oct 19, 2024 17:22 IST

    மதுரை வடக்கு தொகுதியில் விஜய் போட்டி?

    "தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிடுகிறார்" என்று மதுரை வடக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதி முழுவதும்  த.வெ.க. நிர்வாகிகள் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு நிலவுகிறது. 



  • Oct 19, 2024 17:22 IST

    கொடைக்கானல்: ஆபத்தான முறையில் ஆற்றைக் கடக்கும் பிக் அப் வாகனங்கள்

    கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளுடன் ஆபத்தான முறையில் பிக் அப் வாகனங்கள் ஆற்றைக் கடந்து வருகின்றன. ரீல்ஸ் மோகத்தால் அசம்பாவிதம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர். 



  • Oct 19, 2024 17:20 IST

    சென்னையில் தாறுமாறாக ஓடிய கார்

    சென்னை எழும்பூர் அருகே தாறுமாறாக ஓடிய சொகுசு காரால் 4 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பியோட முயன்றவர்களை பிடித்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்துள்ளனர். 



  • Oct 19, 2024 17:04 IST

    செங்கல்பட்டு: மழை நீரில் நாற்று நடும் நூதன போராட்டம் 

    செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே 10 ஆண்டுகளுக்கு மேலாக குண்டும் குழியுமாக உள்ள சாலையைச் சரிசெய்ய வலியுறுத்தி, சாலையில் தேங்கி நிற்கும் மழை நீரில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களால் பரபரப்பு ஏற்பட்டது. சுக்கன் கொள்ளை முதல் வெள்ளபுத்தூர் கிராமம் வரை சுமார் 2 கி. மீட்டர் தூரத்திற்கு சாலை சரியில்லை என புகார் தெரிவித்துள்ளனர். 



  • Oct 19, 2024 17:02 IST

    கோவையில் கனமழை 

    கோவை பீளமேடு,  கவுண்டம்பாளையம், காந்திபுரம், ரயில் நிலையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.



  • Oct 19, 2024 16:23 IST

    'ஹமாஸ் உயிர்ப்புடன் இருக்கும்' -  ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி பேச்சு 

    ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாரின் மரணம் "எதிர்ப்பின் அச்சை" நிறுத்தாது என்றும், ஹமாஸ் "உயிருடன் இருக்கும்" என்றும் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி இன்று சனிக்கிழமை கூறியுள்ளார். 



  • Oct 19, 2024 15:59 IST

    மழையால் வீடு இழந்த தம்பதியருக்கு நிதி உதவி வழங்கிய அமைச்சர்

    திருவெறும்பூர் தொகுதியில்  மழையின் காரணமாக இடிந்த வீட்டை பார்வையிட்டு அவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  நிதியுதவி வழங்கினார்‌. 

    திருச்சி திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட  திருச்சி மாநகரம் திருவெறும்பூர்   39 வது வார்டு எல்லக்குடி பிள்ளையார் கோவில் தெரு குணா- முத்துலட்சுமி,  தம்பதியரின் வீடு மழையின் காரணமாக இடிந்தது. அதை அறிந்த அமைச்சர் அந்த வீட்டை பார்வையிட்டு அந்த தம்பதியினருக்கு நிதியுதவி வழங்கி வீட்டை மறு கட்டமைப்பு செய்வதற்கு உதவிடுமாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்டார், தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி. 

    இந்நிகழ்வில் மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன், பகுதி கழகச் செயலாளர் சிவக்குமார், வட்டக் கழகச் செயலாளர் வினோத் கனகராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

    செய்தி: க.சண்முகவடிவேல்



  • Oct 19, 2024 15:57 IST

    ஆளுநர் மாளிகை முற்றுகை: சுயேச்சை எம்.எல்.ஏ. உட்பட 50 பேர் மீது வழக்குப் பதிவு 

    புதுச்சேரி இந்திரகாந்தி சதுக்கம் அருகே பெட்டிக்கடை வியாபாரியை 3 பேர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் புதுச்சேரியில், பரபரப்பை ஏற்படுத்தியது. இதை கண்டித்து, சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு மற்றும் சமூக அமைப்பினர் நேற்று முன்தினம், பாதிக்கப்பட்ட வியாபாரிக்கு சிகிச்சை அளிப்பதில், கால தாமதம் ஏற்பட்டதாக, அவரை ஸ்டெச்சரில் வைத்து, கவர்னர் மாளிகை முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி, தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்நிலையில், போராட்டத்தில் ஈடுப்பட்ட, நேரு எம்.எல்.ஏ., உட்பட 50 பேர் மீது, பெரியக்கடை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.



  • Oct 19, 2024 15:56 IST

    புரட்டாசி மாதம் நிறைவு - புதுச்சேரியில் சூடு பிடித்த இறைச்சி, மீன் விற்பனை

    புரட்டாசி மாதத்தில் அசைவ பிரியர்களில் பெரும்பாலானோர் சைவத்துக்கு மாறி ஒவ்வொரு சனிக்கிழமையும் விரதம் இருந்து பெருமாளை வழிபட்டு வந்தனர். இதனால் மீன், இறைச்சி கடைகளில் வியாபாரம் மந்தமாக இருந்தது. மாறாக காய்கறிகளின் தேவை அதிகரித்து காய்கறிகள் விலையும் அதிகரித்தது.

    புரட்டாசி மாதம் நேற்று முன்தினம் வியாழக்கிழமையுடன் முடிந்த நிலையில், புதுச்சேரியில் இறைச்சி மற்றும் மீன் விற்பனை சூடு பிடித்துள்ளது.அதிகாலை முதலே பொதுமக்கள் அதிக அளவில் வந்து பெரிய மார்க்கெட், உப்பளம் மற்றும் நெல்லித்தோப்பு உள்ளிட்ட மார்க்கெட் பகுதிகளில் மீன்களை வாங்கிச் சென்றனர். மேலும் இறைச்சி கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.



  • Oct 19, 2024 15:51 IST

    இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வீடு மீது  ட்ரோன் தாக்குதல் - உயிரிழப்பு எதுவும் இல்லை 

    இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் சிசேரியாவில் உள்ள வீட்டை நோக்கி ஆளில்லா விமானம் ஒன்று ஏவப்பட்டது. இந்த தாக்குதலின் போது பிரதமர் நெதன்யாகு அவரது இல்லத்தில் இல்லை என்றும், உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. 

    ஹமாஸ் பணயக் கைதிகளைத் திருப்பியனுப்பினால் மற்றும் அதன் ஆயுத நடவடிக்கைகளை நிறுத்தினால் போர் உடனடியாக முடிவடையும் என்று நெதன்யாகு கூறிய ஒரு நாள் கழித்து, இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. 



  • Oct 19, 2024 15:28 IST

    லஞ்சம் பெற்ற காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்

    லஞ்சம் பெற்ற புகாரில் கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் சந்திரசேகரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கொலை வழக்கில் ஊராட்சி மன்ற தலைவரின் மகன் பெயரை சேர்க்காமல் இருக்க ரூ.3 லட்சம் லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்துள்ளது. ஊராட்சி மன்ற தலைவரிடம் ரூ.1.5 லட்சம் லஞ்சம் பெற்றுவிட்டு, மீதமுள்ள தொகையை கேட்டு மிரட்டியுள்ளார். காவல்துறை விசாரணையில் லஞ்சம் பெற்றது உண்மை என தெரியவந்ததால் சஸ்பெண்ட் செய்து விழுப்புரம் சரக டிஐஜி திஷாமிட்டல் உத்தரவிட்டுள்ளார். 



  • Oct 19, 2024 15:27 IST

    மூதாட்டி கால்களை கட்டிப்போட்டு கொடூர கொலை 

    திருப்பூர் மாவட்டம் காரணம்பேட்டையில், வீட்டில் தனியாக இருந்த 65 வயது மூதாட்டி கை, கால்களை கட்டிப்போட்டு கொடூர கொலை நடந்துள்ளது. மூதாட்டியின் கண்களில் மிளகாய் பொடி தூவி கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டுள்ளார். பின்னர் மூதாட்டியை கொலை செய்து நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 



  • Oct 19, 2024 14:57 IST

    இஸ்ரேல் பிரதமர் வீட்டில் ட்ரோன் தாக்குதல் என தகவல்

    இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். லெபனானில் 70 கி.மீ தூரத்தில் இருந்து ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இத்தாக்குதலின் போது பிரதமர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் வீட்டில் இல்லை எனவும் கூறப்படுகிறது.



  • Oct 19, 2024 14:45 IST

    புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

    வங்கக் கடலில் வரும் 21-ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மத்திய வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, 23-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.



  • Oct 19, 2024 14:41 IST

    2 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

    இன்று இரண்டு மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



  • Oct 19, 2024 14:16 IST

    ஆளுநர் எப்படி பொறுப்பேற்க முடியும்? - எல். முருகன்

    தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சைக்கு ஆளுநர் ஆர்.என். ரவி எப்படி பொறுப்பேற்க முடியுமென மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.சென்னையின் மழை வெள்ளத்தை திசை திருப்பவே தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம் கையில் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.



  • Oct 19, 2024 13:48 IST

    கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க அரசாணை வெளியீடு

    கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. குறிப்பாக ரூ. 247 கோடி ஊக்கத்தொகை வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் பயனைடைவார்கள் எனக் கூறப்படுகிறது.



  • Oct 19, 2024 13:42 IST

    6 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

    இன்று மாலை 4 மணி வரை ஆறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திருச்சி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 



  • Oct 19, 2024 13:06 IST

     கடவுளுக்கு மேலானவர்களா தீட்சிதர்கள்? - நீதிமன்றம் கேள்வி

    கடவுளுக்கு மேலானவர்களா தீட்சிதர்கள்? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. குறிப்பாக, சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் ஆணவத்துடன் நடந்து கொள்வது நல்லதல்ல எனவும், தீட்சிதர்கள் தங்களை கடவுளுக்கு மேலானவர்களாக கருதுகின்றனர் எனவும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி தெரிவித்துள்ளார்



  • Oct 19, 2024 12:44 IST

    தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை - தமிழக அரசு உத்தரவு

    தமிழகத்தில் தீபாவளிக்கு மறுநாளான நவம்பர் 1-ஆம் தேதியன்று விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அன்றைய தினம் அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஈடுசெய்யும் விதமாக நவம்பர் 9-ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    TN GOVT



  • Oct 19, 2024 12:31 IST

    அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி பூங்கா

    ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளை ஊக்குவிக்கும் விதமாக கோவை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி பூங்கா அமைக்கப்படவுள்ளது. ரூ. 90 லட்சம் செலவில் பல்கலைக்கழக ஆராய்ச்சி பூங்கா அமைக்க  தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் சார்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது.



  • Oct 19, 2024 12:27 IST

    100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு பணி - துணை முதல்வர்

    100 விளையாட்டு வீரர்களுக்கு விரைவில் அரசு பணி வழங்கப்படுமென துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். குறிப்பாக, கடந்த 2 ஆண்டுகளில் 513 விளையாட்டு வீரர்களுக்கு ரூ. 10 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். தமிழகத்தில் மட்டும் தான் விளையாட்டு வீரர்களுக்கு இந்த அளவிற்கு பரிசு தொகை வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.



  • Oct 19, 2024 12:14 IST

    திருவண்ணாமலையில் சர்வதேச ஹாக்கி மைதானம்

    திருவண்ணாமலை மாவட்டத்தில் ஓராண்டுக்குள் சர்வதேச ஹாக்கி மைதானம் அமைக்கப்படுமென துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழாவில், உதயநிதி ஸ்டாலின் இவ்வாறு தெரிவித்துள்ளார் 



  • Oct 19, 2024 12:01 IST

    சென்னையில் இயல்பை விட 187% கூடுதல் மழை

    சென்னையில் வடகிழக்கு பருவமழை  01.10.2024 முதல் இன்று காலை வரை இயல்பை விட 187% கூடுதலாக பெய்துள்ளது.  தமிழ்நாட்டில் இயல்பை விட 70% கூடுதலாக பெய்துள்ளது. - சென்னை வானிலை ஆய்வு மையம் 

     



  • Oct 19, 2024 11:52 IST

    விசாரணைக்கு ஆஜராகாத தனுஷ் - ஐஸ்வர்யா

    நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா பரஸ்பரம் விவாகரத்து கோரிய வழக்கில் இருவரும் நேரில் ஆஜராகாததால் வழக்கு விசாரணை நவம்பர் 2ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.



  • Oct 19, 2024 11:26 IST

    இந்தியா - நியூசி. டெஸ்ட் மழையால் நிறுத்தம்

    இந்தியா - நியூசி. டெஸ்ட் மழையால் நிறுத்தம். இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 344 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. 

    இந்திய முன்னிலை பெற இன்னும் 12 ரன்கள் தேவை. NZ 402 | IND 46 & 344/3 (71) எடுத்துள்ளன. 



  • Oct 19, 2024 11:06 IST

    கிரைம் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் தமிழகம் சிறந்து விளங்குகிறது

    சமூக வலைதளங்களில் வதந்திகளை கட்டுப்படுத்தி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். கிரைம் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் தமிழகம்
    சிறந்து விளங்குகிறது - தென் மாநில காவல்துறை இயக்குநர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

     



  • Oct 19, 2024 10:08 IST

    புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

    வங்கக்கடலில் வரும் 22-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.
    24ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைகிறது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 



  • Oct 19, 2024 10:02 IST

    தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சம் 

    ஒரு சவரன் தங்கம் விலை ரூ.58,000 ஐ கடந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 அதிகரித்து ரூ.58,240க்கும் ஒரு கிராம் தங்கம் ரூ.7,280க்கும் விற்பனை செய்யப்படுகிறது.



  • Oct 19, 2024 09:33 IST

    விழுப்புரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

    கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 



  • Oct 19, 2024 08:56 IST

    விடுதலைக் கழகத்தினர் இன்று ஆர்ப்பாட்டம்

    தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை ஆளுநருக்கு எதிராக விடுதலைக் கழகத்தினர் இன்று ஆர்ப்பாட்டம்

    தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிடநல் திருநாடும் என்ற வார்த்தையை புறக்கணித்த ஆளுநர் ரவிக்கு அந்த வரி அடங்கிய 1000 அஞ்சல் அட்டைகளை அனுப்பி திராவிடர் விடுதலை கழகத்தினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். 



  • Oct 19, 2024 08:49 IST

    சென்னையில் நள்ளிரவில் வெளுத்து வாங்கிய மழை

    சென்னையில் 2வது நாளாக நள்ளிரவில் வெளுத்து வாங்கிய கனமழை. அண்ணா சாலை, தியாகராயர் நகர், ராயப்பேட்டை, நுங்கம்பாக்கம், அண்ணாயநகர், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது. இதனால் சென்னை முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. 



  • Oct 19, 2024 08:24 IST

    ஆளுநருக்கு ஸ்டாலின் கேள்வி

    தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம் - ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் கேள்வி. 

    முழுமையாகப் பாடப்படாத தமிழ்த்தாய் வாழ்த்தை உடனே மேடையிலேயே கண்டித்திருக்க வேண்டாமா? அதனை ஏன் செய்யவில்லை?

    'பெருமையோடு துல்லியமாகப் பாடுவேன்' என விளக்கம் கொடுக்கும் ஆளுநர் - உரிமையோடு அந்த இடத்திலேயே தவற்றைச் சுட்டிக்காட்டியிருக்கலாமே!  

     சரியாகப் பாடும்படி பணித்திருக்கலாமே? துல்லியமாக அந்தச் செயலை நீங்கள் செய்திருந்தால் எதிர்வினை ஏற்பட்டிருக்குமா?  


    தமிழ் எங்கள் இனம்! அது எங்கள் உயிர்மூச்சு! தமிழ்மொழியைக் காக்க உயிர்களை நெருப்புக்குக் கொடுத்தவர்கள் தமிழர்கள்.   

    முதல் அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்திற்கு அடிகோலியதோடு, இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின் வரலாறுகளைத் தாங்கி நிற்கும் மண் இது  

    இந்த மண்ணின் தாய்மொழிப் பற்றினை இனவாதம் என்றால் அது எங்களுக்குப் பெருமைதான்!  

    தமிழைத் தலையில் தூக்கிப் போற்றுவதாக நீங்கள் கூறும் மோடி அரசு தமிழ்மொழிக்கு என்ன செய்தது?

     'திராவிட மாடல் காலாவதியான கொள்கை' என ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டி அளித்த வெறுப்புதானே, இன்றைக்குத் தமிழ்த்தாய் வாழ்த்து வரை வந்து நிற்கிறது?  

    திராவிட இனத்தையே கொச்சைப்படுத்திப் பேசி வருவது எந்த வகை அரசியல் நாகரிகம்? எந்த வகை கண்ணியம்?  

    ஆளுநர் பதவியில் தொடர நினைத்தால், பிளவுவாத சக்திகளிடமிருந்து விடுவித்துக்கொண்டு, அரசியல்சட்ட நெறிமுறைகளின்படி கடமையை ஆற்ற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்



  • Oct 19, 2024 07:51 IST

     21 மாவட்டங்களில் மழை

    அடுத்த 3 மணி நேரத்தில் 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

    சென்னை,  திருவள்ளூர்,  காஞ்சிபுரம்,  செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை,  ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கடலூர், மயிலாடுதுறை,  தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை. விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

     



Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: