Tamil News Today Updates: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை அபாயகரமானது எனக் கூறி அதனை மீண்டும் திறக்க தடை விதித்தது சென்னை உயர் நீதிமன்றம். இதனை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவதாக வேதாந்தா நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் நாட்டு வெடிகுண்டு வீசி தலைமைக் காவலர் உயிரிழந்துள்ளார். அவருடன் சேர்ந்து வெடிகுண்டு வீசிய ரவுடியும் உயிரிழப்பு. உயிரிழந்த காவலர் சுப்பிரமணியன் குடும்பத்துக்கு 50 லட்சம் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என முதல்வர் அறிவிப்பு.
பி.எம்.கேர்ஸ் நிதியை தேசிய பேரிடர் நிவாரண நிதியுடன் இணைத்து உத்தரவிட, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனை பா.ஜ.க வரவேற்றுள்ள நிலையில், காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. புதுமை கண்டுபிடிப்புகளை அடிப்படையாக வைத்து கல்லூரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் சென்னை ஐஐடி-க்கு முதலிடம் கிடைத்துள்ளது. தமிழகத்தில் 20-வது நாளாக 6000-க்கும் கீழ் கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. குணமடைந்தோர் விகிதம் 82.87% ஆக இருக்கிறது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Live Blog
Tamil Nadu News Today Updates
சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “நீட் குறித்தான அச்சத்தால் கோவையில் மாணவி சுபஶ்ரீ தற்கொலை செய்து கொண்டுள்ளார். அனிதாவில் தொடங்கிய மரணம் சுபஶ்ரீ வரை தொடர்கிறது. அரசே நடத்தும் கல்விக் கொலைகள் இவை. சுபஶ்ரீயின் பெற்றோரிடம் பேசி ஆறுதல் கூறினேன். இந்த மரணத்துக்கு மத்திய - மாநில அரசுகள் பதில் சொல்லியாக வேண்டும். கொரோனா காலத்திலும் மாணவர்கள் நலன் குறித்த கவலையின்றி நீட் தேர்வை நடத்த மத்திய அரசு துடிக்கிறது. எதிர்ப்பது போலக் காட்டிக் கொண்டு மத்திய அரசு செய்வதற்கெல்லாம் கைகட்டிக் கிடக்கிறது மாநில அரசு” என்று விமர்சித்துள்ளார்.
#NEET குறித்தான அச்சத்தால் கோவையில் மாணவி சுபஶ்ரீ தற்கொலை செய்து கொண்டுள்ளார். அனிதாவில் தொடங்கிய மரணம் சுபஶ்ரீ வரை தொடர்கிறது. அரசே நடத்தும் கல்விக் கொலைகள் இவை!
சுபஶ்ரீயின் பெற்றோரிடம் பேசி ஆறுதல் கூறினேன். இந்த மரணத்துக்கு மத்திய- மாநில அரசுகள் பதில் சொல்லியாக வேண்டும்!
— M.K.Stalin (@mkstalin) August 19, 2020
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “நீட் குறித்தான அச்சத்தால் கோவையில் மாணவி சுபஶ்ரீ தற்கொலை செய்து கொண்டுள்ளார். அனிதாவில் தொடங்கிய மரணம் சுபஶ்ரீ வரை தொடர்கிறது. அரசே நடத்தும் கல்விக் கொலைகள் இவை. சுபஶ்ரீயின் பெற்றோரிடம் பேசி ஆறுதல் கூறினேன். இந்த மரணத்துக்கு மத்திய - மாநில அரசுகள் பதில் சொல்லியாக வேண்டும். கொரோனா காலத்திலும் மாணவர்கள் நலன் குறித்த கவலையின்றி நீட் தேர்வை நடத்த மத்திய அரசு துடிக்கிறது. எதிர்ப்பது போலக் காட்டிக் கொண்டு மத்திய அரசு செய்வதற்கெல்லாம் கைகட்டிக் கிடக்கிறது மாநில அரசு” என்று விமர்சித்துள்ளார்.
#NEET குறித்தான அச்சத்தால் கோவையில் மாணவி சுபஶ்ரீ தற்கொலை செய்து கொண்டுள்ளார். அனிதாவில் தொடங்கிய மரணம் சுபஶ்ரீ வரை தொடர்கிறது. அரசே நடத்தும் கல்விக் கொலைகள் இவை!
சுபஶ்ரீயின் பெற்றோரிடம் பேசி ஆறுதல் கூறினேன். இந்த மரணத்துக்கு மத்திய- மாநில அரசுகள் பதில் சொல்லியாக வேண்டும்!
— M.K.Stalin (@mkstalin) August 19, 2020
தமிழகத்தின் இன்றைய கொரோனா வைரஸ் தொற்று தினசரி அறிக்கையில், இன்று புதிதாக கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டவர்களின் 5,795 எண்ணிக்கையைவிட குணமடைந்தவர்கள் 6,384 பேர் என்ற எண்ணிக்கை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,795 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில், மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் இன்று 116 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பிதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு தேசிய வேலைவாய்ப்பு முகமை வரமாக இருக்கும். பொது தகுதி தேர்வு மூலம் ஏராளமான தேர்வுகள் விலைமதிப்பற்ற நேரம் மற்றும் செலவுகள் குறையும். வெளிப்படைத் தன்மையை ஊக்குவிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அவருடைய உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது என்று மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், அவருக்கு எக்மோ கருவி பொருத்தப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களில் 2.7 லட்சம் இ-பாஸ் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. மேலும், முதல் நாளில் 1.4 லட்சம் இ-பாஸும், 2-வது நாளில் 1.3 லட்சம் இ-பாஸ் விண்ணப்பங்களும் ஏற்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமிர்தம் அவர்களுக்கு நடந்த அநீதி இந்திய இறையாண்மைக்கு எதிரான செயல் என்று கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார். அதில்,
கும்மிடிப்பூண்டி ஆத்துப்பாக்கம் பஞ்சாயத்துத் தலைவர் திருமதி.அமிர்தம் அவர்களுக்கு நடந்த அநீதி, இந்திய இறையாண்மைக்கு எதிரான செயல்.சாதிப் பிணி ஒழிய, நம் குரல்கள் ஒன்றுபடாவிட்டால் குரலற்றவர்களின் குரல்வளை நெறிக்கப்படுவது தொடரும்.
தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்படும் வரை குரல் கொடுப்போம்.— Kamal Haasan (@ikamalhaasan) August 19, 2020
கேரள மாநிலம் மூணாறு நிலச்சரிவில் சிக்கி இறந்த தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கவும் முதலமைச்சர் எ டப்பாடி பழனிசாமிஉத்தரவு
இடிபாடுகளில் சிக்கிய 12 தொழிலாளர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் தகவல்.
கோவை மாநகராட்சி பெயரில் வெளியான மாணவர் சேர்க்கை விண்ணப்பம் போலியானது
மாநகராட்சி தரப்பில் விண்ணப்பங்கள் எதுவும் வழங்கப்பட இல்லை- மாநகராட்சி ஆணையர் ஸ்வரன்குமார் ஜடாவத் பேட்டி
மாநகராட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - ஸ்வரன்குமார் ஜடாவத்
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது
காணொலி காட்சி மூலம் நடைபெறும் கூட்டத்தில் அமைச்சர்கள் நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் பங்கேற்பு
தேசிய வேலைவாய்ப்பு அமைப்பு என்ற புதிய அமைப்பை உருவாக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி
மத்திய அரசு பணிகளில் பிரிவு 3,4-ல் பணியாளர்களை தேர்ந்தெடுக்க புதிய அமைப்பை ஏற்படுத்த அனுமதி; பொதுத்துறை வங்கி ஊழியர்களின் நியமனம் இந்த புதிய அமைப்பின் மூலம் மேற்கொள்ளப்படும்
3வது மொழியாக இந்தி படிக்க விருப்பமா என மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விண்ணப்பத்தில் கேட்கப்படவில்லை
அந்த விண்ணப்ப படிவம் நான் பதவியேற்ற பின் வெளியிடப்படவில்லை
- கோவை மாநகராட்சி பள்ளி விண்ணப்பத்தில் இந்தி பற்றிய கேள்விக்கு ஆணையர் விளக்கம்
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல் நலம் மேலும் மோசமடைந்து உள்ளதாக ராணுவ மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவருக்கு தொடர்ந்து வென்டிலேட்டர் உதவியுடன் மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அவருக்கு புதிதாக நுரையீரலில் தொற்று ஏற்பட்டிருப்பதாக மருத்துவமனை தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே பின்பற்றப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்த நிலையில், 3வது மொழியாக இந்தி படிக்க விருப்பமா? என கோவை மாநகராட்சி பள்ளியின் மாணவர் சேர்க்கை படிவத்தில் இடம்பெற்ற கேள்வியால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
பின்னணி பாடகர் எஸ்.பி.பி உடல்நலம் தேற கூட்டுப் பிரார்த்தனை. நாளை மாலை 6 மணிக்கு வீடுகளில் அமர்ந்து திரையுலக பிரமுகர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள். எஸ்.பி.பி.யின் பாடல்களை பாடி பிரார்த்தனை செய்ய இயக்குநர் பாரதிராஜா அழைப்பு விடுத்துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி பகுதியை சேர்ந்த ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் சார்பில் இந்த மனு தாக்கல். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
6 மாத காலம் பணப்பரிவர்த்தனை இல்லாத ஓய்வூதிய வங்கிக்கணக்குகளை முடக்க உத்தரவிடவில்லை எனவும், 6 மாத கால பணப்பரிவர்த்தனை இல்லாத வங்கி கணக்குகள் பற்றி கணக்கெடுக்க மட்டுமே அறிவுறுத்தியதாகவும், தமிழ்நாடு கருவூலத்துறை ஆணையர் சமயமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 27,02,742 லிருந்து 27,67,273 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 19.77 லட்சத்தில் இருந்து 20.37 லட்சமாக உயர்வு. உயிரிழந்தோர் எண்ணிக்கை 51,797 லிருந்து 52,889 ஆக அதிகரித்திருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மதுரை மாவட்டத்தை தமிழகத்தின் 2-வது தலைநகராக்க அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார். மதுரையில் ஆகஸ்ட் 21-ம் தேதி, அமைச்சர் உதயகுமார் தலைமையில் தென்மாவட்ட தொழில் வர்த்தகர்களின் கலந்தாய்வு நடைபெற உள்ளது. கலந்தாய்வில் 10 மாவட்ட தொழில் வர்த்தகர்கள் பங்கேற்கிறார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights