/indian-express-tamil/media/media_files/2025/03/23/J71PrzdXIZ29bj9LoWjS.jpg)
Today Latest News Updates:பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- Aug 15, 2025 22:05 IST
அண்ணா சாலை மேம்பாலப் பணிகள் தீவிரம்: அக் 17 முதல் சென்னையில் போக்குவரத்து மாற்றம்
சென்னை அண்ணா சாலையில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகளுக்காக தேனாம்பேட்டையில் ஆக.17ம் தேதி முதல் சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்படவுள்ள போக்குவரத்து மாற்றங்களை வெளியிட்டுள்ளது போக்குவரத்து காவல்துறை. அதன்படி, அண்ணா சாலையில் உள்ள சைதாப்பேட்டையிலிருந்து அண்ணா மேம்பாலம் நோக்கிச் செல்லும் வாகனங்கள் அண்ணா சாலை, எல்டாம்ஸ் சாலை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி தியாகராய சாலை, மா.போ.சி. சந்திப்பு, வடக்கு போக் சாலை (வலதுபுறம் திரும்பி), விஜயராகவ சாலை சந்திப்பு, விஜயராகவ சாலை வழியாக அண்ணா சாலையை அடையலாம்.
அண்ணா சாலையிலிருந்து தி.நகர் நோக்கிச் செல்லும் வாகனங்கள் அண்ணா சாலை, எல்டாம்ஸ் சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்பி தியாகராய சாலை நோக்கிச் சென்று தங்கள் இலக்கை அடையலாம். தி.நகரிலிருந்து அண்ணா சாலை நோக்கிச் செல்ல விரும்பும் வாகனங்கள் தியாகராய சாலையில் உள்ள மா.போ.சி சந்திப்பில் இடதுபுறம் திரும்பி வடக்கு போக் சாலை, விஜயராகவ சாலை வழியாக சென்று அண்ணா சாலையை அடையலாம்.
தெற்கு போக் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் மா.போ.சி. சந்திப்பில் வலதுபுறம் திரும்ப அனுமதிக்கப்படாது. அதற்கு பதிலாக, அவ்வாகனங்கள் நேராக வடக்கு போக் சாலையை நோக்கிச் சென்று பின்னர் விஜயராகவ சாலையை அடைந்து பின்னர் அண்ணா சாலையை அடையலாம். அண்ணா சாலையில் உள்ள அண்ணா மேம்பாலத்திலிருந்து வரும் வாகனங்கள் விஜயராகவ சாலை நோக்கி வலதுபுறம் திரும்ப அனுமதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, - Aug 15, 2025 21:55 IST
50 ஆண்டுகள் நிறைவு: வாழ்த்து சொன்ன பிரதமருக்கு நன்றி சொன்ன ரஜினிகாந்த்
மரியாதைக்குரியவர் நரேந்திரமோடி ஜி, உங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நான் நீண்ட காலமாக மிகவும் மதிக்கும் ஒரு தலைவரிடமிருந்து வாழ்த்தை பெறுவது உண்மையிலேயே ஒரு மரியாதை. உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி. தமிழ் ஜெய்ஹிந்த் என ரஜினிகாந்த் பிரதமர் மோடிக்கு நன்றி கூறியுள்ளார்.
Respected @narendramodi Modi ji, I am deeply grateful for your warm wishes. It is truly an honour to receive them from a leader I have long held in the highest regard. Thank you for your kind words. 🙏🏻 Jai Hind 🇮🇳 https://t.co/2dEGOhxD8j
— Rajinikanth (@rajinikanth) August 15, 2025 - Aug 15, 2025 20:23 IST
நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 41 லட்சம்+ திறன் சான்றிதழ்கள்!
1 லட்சத்துக்கும் மேற்பட்ட கல்லூரி ஆசிரியர்களுக்கு தொழில் சார்ந்த புதிய பயிற்சிகள்,12ம் வகுப்பிற்கு பிறகு உயர் கல்வியை தொடர முடியாமல் இருந்த 77,752 மாணவர்களுக்கு மீண்டும் உயர்கல்வி வாய்ப்பு, Microsoft, IBM, Oracle, Google, Cisco, HCL, Infosys, AWS, Siemens, FANUC, Dassault, L&T போன்ற முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து, AI, மெஷின் லெர்னிங், IoT, Big Data, Industry 4.0, Digital Marketing, EV Technology உள்ளிட்ட துறைகளில் பயிற்சி பெற்றுள்ளனர்.
மேலும், 2,68,419 மாணவர்களுக்கு தங்களுக்கு பொருத்தமான உயர் கல்வி பாடப் பிரிவுகள் தேர்வு செய்ய ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. 2024-ல், 25 மாணவர்கள் இங்கிலாந்தின் Durham பல்கலைக்கழகத்தில் AI, Data Science பயிற்சி பெற்றவர்களில் சிலர் BNY, Citicorp, Zoho, HCL போன்ற நிறுவனங்களில் ₹10–31 லட்சம் ஆண்டு ஊதியத்தில் பணி.
IndiaSkills 2020–22 தேசிய திறன் போட்டியில் 23 பதக்கங்களுடன் 10வது இடத்தில் இருந்த தமிழ்நாடு, 2022–24 இல் 40 பதக்கங்களுடன் 3வது இடத்திற்கு முன்னேற்றம். 2024-ல் 57 பேர் UPSC தேர்ச்சி. அதில் பெரும்பாலும் நான் முதல்வன் பயனாளிகள் என்று தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Aug 15, 2025 20:19 IST
உயர்நீதிமன்ற உத்தரவால்தான் நடவடிக்கை: திருமாவளவன்
“தூய்மைப் பணியாளர்கள் 13 நாட்கள் அனுமதி இல்லாத இடத்தில் தொடர்ந்து போராட்டம் நடத்த அரசு அனுமதித்தது. யாரையும் தொல்லை செய்யவில்லை.. உயர்நீதிமன்ற உத்தரவால்தான் நடவடிக்கை எடுத்தார்கள் என சேலத்தில் விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
- Aug 15, 2025 19:06 IST
பஞ்சாப் வாகா எல்லையில் கலை நிகழ்ச்சிகள்
79-வது சுதந்திர தினத்தை ஒட்டி பஞ்சாப் வாகா எல்லையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. ராணுவ வீரர்களின் அணிவகுப்பை காண ஏராளமான பார்வையாளர்கள் வாகா எல்லையில் குவிந்துள்ளனர். 1959ம் ஆண்டு முதல் வாகா எல்லையில் பாதுகாப்பு படையின் கொடியிறக்க நிகழ்வு நடைபெற்று வருகிறது. ராணுவ வீரர்களின் பைக் சாகசம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை கண்டு பார்வையாளர்கள் கரவொலி எழுப்பி உற்சாகமடைந்தனர்.
- Aug 15, 2025 18:55 IST
அட்டாரி- வாகா எல்லையில் கொடியிறக்க நிகழ்வு
தேசியக்கொடியேந்தி இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த வீரர்கள், மிடுக்குடன் பாதுகாப்பு படையினர் அணிவகுப்பு நடைபெறுகிறது. இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் மக்கள் குவிந்துள்ளனர்.
- Aug 15, 2025 18:54 IST
தூய்மை பணியாளர்கள் மீதான வழக்கு - அ.தி.மு.க பரபர தகவல்
அ.தி.மு.க ஐ.டி விங் எக்ஸ் தள பக்கத்தில், "தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுநல வழக்கு தொடர்ந்த தேன்மொழி யார் தெரியுமா? தி.மு.க சென்னை கிழக்கு மாவட்டநிர்வாகி. இவர் தொடர்ந்த வழக்கில் கூறப்பட்டிருக்கும் “தனம் சாரிடபிள் டிரஸ்ட்” யாருடையது தெரியுமா? பணி நிரந்தர வாக்குறுதியை நாங்கள் கொடுக்கவே இல்லை என பச்சை பொய் சொன்ன அமைச்சர் சேகர்பாபு உடையது. [துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சொல்லியிருக்கிறார்]
இப்போது தெரிந்ததா தூய்மைப் பணியாளர்களை வெளியேற்றியது யார் என்று? யாருக்கும் தொந்தரவு செய்யாமல், அமைதியாக போராடி வந்த எளிய மக்களின் மீது கரிசனம் கொள்ளாமல் வெறுப்பை உமிழ்ந்து, காட்டில் இரையை வேட்டையாடும் மனோபாவத்தோடு , நரி தந்திரம் செய்து, அவர்களை நடுஇரவில். காவல்துறையை வைத்து அடித்து வெளியேற்றியுள்ளது திமுக. தூய்மைப் பணியாளர்களை வெறுத்து ஒதுக்கும் அளவிற்கு, அவர்களை இடையூறாக கருதிய இந்த திமுக ஆட்சியை மக்கள் குப்பையில் வீசத் தான் போகிறார்கள். அதை நீங்கள் பார்க்கத் தான் போகிறீர்கள்." என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Aug 15, 2025 18:29 IST
சட்டசபைத் தேர்தலில் போட்டியா?: நடிகை கஸ்தூரி பதில்
"சட்டசபைத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என நினைக்கவில்லை. தி.மு.க-வை வீழ்த்த பா.ஜ.க - அ.தி.மு.க-வுடன் தே.மு.தி.க, பா.ம.க இணைய வேண்டும்" என்று இன்று பா.ஜ.க-வில் தன்னை இணைத்துக் கொண்ட நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
- Aug 15, 2025 18:25 IST
டெல்லியில் தர்காவின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து!
டெல்லி நிஜாமுதின் பகுதியில் உள்ள புராதானச் சின்னமான ஹுமாயூன் கல்லறை வளாகத்தில் உள்ள தர்காவின் மேற்கூரை இடிந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இடிபாடுகளில் 10 பேர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது.
- Aug 15, 2025 18:07 IST
தினமும் ஒரு வங்காள மொழி திரைப்படம் - மம்தா பானர்ஜி உத்தரவு
திரையரங்குகளில் தினமும் ஒரு வங்காள மொழி திரைப்படம் கட்டாயம் திரையிடப்பட வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். வங்க மொழி மற்றும் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் வகையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தினமும் மாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரை, ஒரு வங்கமொழி திரைப்படத்தையாவது திரையிட வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தொடங்கிய 'வங்க மொழி இயக்கத்தின் ஒரு பகுதியாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
- Aug 15, 2025 17:44 IST
பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது - ஸ்டாலின் பதிவு!
தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், "பெண் கல்வியில் சிறந்து விளங்குவதிலும், தொழிலாளர் பங்கேற்பில் நாட்டுக்கே முன்னணியாக உள்ள மாநிலம் தமிழ்நாடு" என்று ஆங்கில நாளிதழில் வெளியான அமைச்சர் கீதா ஜீவன் கட்டுரையை மேற்கொள்காட்டி முதல்வர் பெருமிதம் தெரிவித்துள்ளார். மேலும் நாட்டிலேயே அதிக அளவு பெண்கள் பணிபுரியும் மாநிலமாக உள்ளது தமிழ்நாடு. பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
- Aug 15, 2025 17:22 IST
ஆளுநர் தேநீர் விருந்து - அ.தி.மு.க, பா.ஜ.க பங்கேற்பு
சுதந்திர தினத்தை ஒட்டி கிண்டி ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் முருகானந்தம், சென்னை காவல் ஆணையர் அருண் பங்கேற்றுள்ளனர். தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி காட்சிகள் புறக்கணித்துள்ள நிலையில், அ.தி.மு.க, பாஜக, பா.ம.க, தே.மு.தி.க, த.மா.கா உள்ளிட்ட கட்சிகளும் ஆளுநர் அழைப்பை ஏற்று பங்கேற்றுள்ளனர்
- Aug 15, 2025 17:01 IST
வரலாறு படைத்த நடிகை ஸ்வேதா மேனன்!
கேரளநடிகர்சங்கத்தலைவர்பதவிக்கானதேர்தலில்ஸ்வேதாமேனன்வெற்றிபெற்றார். 31 ஆண்டுசங்கத்தின்வரலாற்றில்முதல்முறையாகபெண்ஒருவர்தலைவரானார். சமீபத்தில்நிதிஆதாயத்திற்காகஆபாசத்திரைப்படங்களில்நடித்ததாகஇவர்மீதுவழக்குப்பதிவுசெய்யப்பட்டது. அதற்குஎதிராகவழக்குத்தொடர்ந்துஇடைக்காலத்தடைவாங்கியுள்ளார்.
- Aug 15, 2025 16:37 IST
ராஜஸ்தானில் சமஸ்கிருத மொழிப் பாடம் கட்டாயம்
ராஜஸ்தானில் மழலையர் பள்ளிகளில் கே.ஜி வகுப்பு மாணவர்களுக்கு சமஸ்கிருத மொழிப் பாடத்தை கட்டாயப் பாடமாக அறிமுகப்படுத்த மாநில அரசு முடிவு எடுத்துள்ளது. இதற்கு என்.சி.இ.ஆர்.டி ஒப்புதல் அளித்துள்ள நிலையில் அடுத்த ஆண்டு முதலே இத்திட்டத்தை ராஜஸ்தான் அரசு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
- Aug 15, 2025 16:34 IST
தவெக மாநாட்டு பணிகள்
தவெக 2வது மாநில மாநாட்டில் விநியோகிக்க தேவையான தண்ணீர் பாட்டில்கள், ‘மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் விஜய்’ என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட கொண்டு வரப்பட்டுள்ளன. குழாய் குடிநீருடன் சேர்த்து, பாட்டில் தண்ணீரும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநாட்டுக்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.
- Aug 15, 2025 16:07 IST
ஆளுநருக்கு தமிழர்களின் மீது என்ன வெறுப்பு? - கனிமொழி
தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் 2022 ஆம் ஆண்டு அறிக்கையின்படி இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் பட்டியலில் முஹ்டல் மூன்று இடங்களைப் பிடித்திருக்கும் மாநிலங்கள் உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மூன்றுமே பாஜக ஆளும் மாநிலங்கள். பட்டியலில் பத்து இடங்களுக்குள் கூட வராத தமிழ்நாட்டின் மீது பழி போடும் ஆளுநருக்கு அப்படி என்ன தமிழந்களின் மீது வெறுப்பு? அவர் பொறுப்பு வகிப்பது ஆளுநராகவா? இல்லை பாஜக தலைவராகவா என திமுக எம்.பி.கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
- Aug 15, 2025 16:05 IST
‘ஆர்.என். ரவி பொறுப்பு வகிப்பது ஆளுநராகவா? இல்லை பா.ஜ.க தலைவராகவா?’ - கனிமொழி கேள்வி
தி.மு.க எம்.பி கனிமொழி: “தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் 2022-ம் ஆண்டு அறிக்கையின்படி, இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் பட்டியலில் முதல் மூன்று இடங்களைப் பிடித்திருக்கும் மாநிலங்கள் உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான். மூன்றுமே பா.ஜ.க ஆளும் மாநிலங்கள். பட்டியலில் பத்து இடங்களுக்குள் வராத தமிழ்நாட்டின் மீது பழி போடும் ஆளுநருக்கு அப்படி என்ன தமிழர்களின் மீது வெறுப்பு? அவர் பொறுப்பு வகிப்பது ஆளுநராகவா? இல்லை பா.ஜ.க தலைவராகவா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
- Aug 15, 2025 16:00 IST
தூய்மை பணியை தனியார்மயமாக்கியதே அ.தி.மு.க தான் - திருமா
தூய்மைப் பணியாளர்களின் பிரச்சனையில் ஆரம்பத்தில் இருந்தே விசிக குரல் கொடுத்து வருகிறது; தூய்மைப் பணியை தனியார்மயமாக்கும் முடிவை கைவிட முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதை வைத்து அரசியல் செய்வது அற்பமானது; 11 மண்டலங்களை தனியார்மயமாக்கியதே அதிமுகதான் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
- Aug 15, 2025 15:59 IST
ஆர்.எஸ்.எஸ் குறித்து மோடியின் பேச்சுக்கு கண்டனம் - முத்தரசன்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன்: “சுதந்திர தினத்தில் தியாகிகள் குறித்து பேச வேண்ட பிரதமர் மோடி, சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்காத விடுதலைக்கு எதிரான அமைப்பான ஆர்.எஸ்.எஸ் பற்றி பேசியுள்ளார். சாதி, மதங்களால் மக்களப் பிளவுபடுத்தும் அமைப்பு ஆர்.எஸ்.எஸ்” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
- Aug 15, 2025 15:43 IST
சுங்கக் கட்டண Fastag Pass அமல்
தேசியநெடுஞ்சாலைகளில்பயணிக்கும்வாகனங்களுக்குஓராண்டுக்குரூ.3000க்குபாஸ்வழங்கும்திட்டம்இன்றுமுதல்அமலுக்குவந்தது. ரூ.3000 கட்டணத்தில் 12 மாதங்கள்அல்லது 200 டோல்பயணங்கள்வரைஇலவசமாகச்செல்லாமல்தனியார்கார், ஜீப், வேன்களுக்குமட்டுமேஇச்சலுகைபொருந்தும்எனவும்தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Aug 15, 2025 15:27 IST
மேக வெடிப்பு - ஜம்மு காஷ்மீரில் இந்திய விமானப்படை
ஜம்மு காஷ்மீர், கிஸ்த்வார் மாவட்டம் சிசோட்டி பகுதியில் மேகவெடிப்பால் பெரும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மீட்பு பணிகளை மேற்கொள்ள இந்திய விமானப்படை தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தகுந்த வானிலைக்காக காத்திருப்பு இரண்டு Mi-17 ஹெலிகாப்டர்கள் மற்றும் ஒரு மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர் (ALH) தயார் நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- Aug 15, 2025 15:04 IST
புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் தேநீர் விருந்து புறக்கணிப்பு - தி.மு.க எம்.எல்.ஏ சிவா
துச்சேரியிலும் ஆளுநரின் சுதந்திர தின விழா தேநீர் விருந்தை திமுக புறக்கணிக்கிறது என்று தி.மு.க எம்.எல்.ஏ சிவா அறிவித்துள்ளார்.
- Aug 15, 2025 14:52 IST
ரஜினிகாந்தின் ‘கூலி’ திரைப்படம் ரிலீஸான முதல் நாளில் உலகளவில் ரூ.151 கோடி வசூல்
நடிகர் ரஜினிகாந்தின் ‘கூலி’ திரைப்படம் ரிலீஸான முதல் நாளில் உலகளவில் ரூ.151 கோடி வசூலைக் குவித்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. ரிலீஸ் நாளில் அதிகபட்ச வசூலைக் குவித்த தமிழ் திரைப்படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது.
- Aug 15, 2025 14:44 IST
ஆர்.எஸ்.எஸ்-க்கு மோடி பாராட்டு ஏற்புடையதல்ல - திருமாவளவன்
வி.சி.க தலைவர் திருமாவளவன், “ஜி.எஸ்.டி சீர்திருத்த அறிவிப்பு மகிழ்ச்சி, சுதந்திர தின விழாவில் ஆர்.எஸ்.எஸ்-ஐ பிரதமர் பாராட்டியது ஏற்புடையதல்ல. தூய்மை பணிகளை தனியார் மயமாகும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
- Aug 15, 2025 14:43 IST
பாஜகவில் இணைந்தார் நடிகை கஸ்தூரி
நயினார்நாகேந்திரன்முன்னிலையில்நடிகை கஸ்தூரிபாஜகவில் இணைந்தார்.
- Aug 15, 2025 14:41 IST
திமுக கூட்டணியை உடைக்க முயற்சி - திருமா பேட்டி
தூய்மைப் பணியாளர்கள் பிரச்னையை பயன்படுத்தி திமுக கூட்டணியை உடைக்க முயற்சி நடப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார்.
- Aug 15, 2025 14:38 IST
கூலி வசூல்
நடிகர் ரஜினிகாந்தின் ‘கூலி’ திரைப்படம் ரிலீஸான முதல் நாளில் உலகளவில் ரூ.151 கோடி வசூலைக் குவித்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. ரிலீஸ் நாளில் அதிகபட்ச வசூலைக் குவித்த தமிழ் திரைப்படம் என்ற சாதனையைப் படைத்து அதிரடி காட்டியுள்ளது.
- Aug 15, 2025 12:54 IST
கொட்டும் மழையில் தேசிய கொடிக்கு ராகுல் காந்தி மரியாதை
டெல்லியில் மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி கொட்டும் மழையில் நின்று தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினார். சுதந்திர தினத்தையொட்டி டெல்லி காங்கிரஸ் தலைமையகத்தில் மல்லிகார்ஜுன் கார்கே தேசிய கொடியை ஏற்றினார்.
- Aug 15, 2025 12:45 IST
புதிய திட்டங்கள் அறிவிப்பு: மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த தூய்மைப் பணியாளர்கள்
தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச காலை உணவு, பணியின்போது மரணமடைந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம் உள்ளிட்ட 6 புதிய அறிவிப்புகளை தமிழ்நாடு அரசு நேற்று வெளியிட்டது. இதற்கு தூய்மைப் பணியாளர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர்.
- Aug 15, 2025 12:22 IST
கடின உழைப்புக்கு ஈடு இணை எதுவும் இல்லை - அப்துல் கலாம் விருது பெற்ற இஸ்ரோ தலைவர் நாராயணன்
அப்துல் கலாம் விருது பெற்ற இஸ்ரோ தலைவர் நாராயணன் பேட்டி: “இது சந்தோஷமான தருணம், ரொம்ப பெருமையா நினைக்கிறேன். கடின உழைப்புக்கு ஈடு இணை எதுவும் இல்லை. ககன்யான் திட்டம் நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது.” என்று கூறினார்.
- Aug 15, 2025 12:16 IST
‘தமிழ்நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பா.ஜ.க ஆட்சிக்கு வர வேண்டும்’ - நயினார் நாகேந்திரன்
பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்: “தமிழ்நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பா.ஜ.க ஆட்சிக்கு வர வேண்டும்; தி.மு.க ஆட்சியில் போதைப் பொருள் நடமாட்டம் பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளது” என்று கூறியுள்ளார்.
- Aug 15, 2025 11:55 IST
50 ஆண்டு கால திரையுலகப் பயணம்; வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு ரஜினிகாந்த் நன்றி
50 ஆண்டு கால திரையுலகப் பயணத்தை ஒட்டி வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்
- Aug 15, 2025 11:40 IST
அமெரிக்காவின் வரி உயர்வு மிரட்டலுக்கு மோடி பதிலடி
நமது விவசாயிகள், பால் உற்பத்தியாளர்கள் மற்றும் மீனவர்களுக்கு எதிரான எந்தவொரு கொள்கையையும் எதிர்த்து நான் ஒரு தடுப்பு சுவராக நிற்கிறேன். பாரதம் அதன் விவசாயிகளுடன் ஒருபோதும் சமரசம் செய்யாது என சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
- Aug 15, 2025 11:15 IST
கிருஷ்ணரின் சுதர்சன சக்ரா திட்டம் செயல்படுத்தப்படும் - மோடி
எதிரிகளிடம் இருந்து இந்தியாவை பாதுகாக்க 'சுதர்சன சக்ரா திட்டம்' செயல்படுத்தப்படும். மகாபாரதத்தில், கிருஷ்ணர் சூரியனின் கதிர்களை மழுங்கடிக்க சுதர்சன சக்ராவைப் பயன்படுத்தினார் கிருஷ்ணரின் சுதர்சன சக்கரம் போல, சுதர்சன சக்ரா திட்டம் எதிரிகளை அழித்து மக்களை பாதுகாக்கும் என சுதந்திர தினவிழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார்
- Aug 15, 2025 10:52 IST
நிதிப் பகிர்வில் மாநில அரசின் பங்கை மீட்டெடுத்திட சட்டபூர்வமான நடவடிக்கையே ஒரே தீர்வு - ஸ்டாலின்
நிதிப் பகிர்வில் மாநில அரசின் பங்கை மீட்டெடுத்திட அரசியல் சட்டபூர்வமான நடவடிக்கை எடுப்பதுதான் ஒரே தீர்வு என சுதந்திர தின உரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்
- Aug 15, 2025 10:30 IST
பாரா ஒலிம்பிக் வீரர் மாரியப்பனுக்கு மாநில இளைஞர் விருது
சுதந்திர தின விழாவில் பாரா ஒலிம்பிக் வீரர் மாரியப்பனுக்கு முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
- Aug 15, 2025 10:01 IST
காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருது
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருதை, ரூ. 10 லட்சத்துக்கான காசோலை, சான்றிதழ் ஆகியவற்றை மு.க.ஸ்டாலின் வழங்கினார். இஸ்ரோ தலைவர் நாராயணனுக்கு அப்துல் கலாம் விருது செல்வி, துளசிமதி முருகேசனுக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டது.
- Aug 15, 2025 09:59 IST
சுதந்திர தின விழாவில் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட 9 புதிய அறிவிப்புகள்
*விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் உயர்வு.. *மாற்றுத்திறனாளிகளுக்கு விடியல் பயணம் விரிவாக்கம்
சுதந்திர தின விழாவில் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட 9 புதிய அறிவிப்புகள்
Video: Sun News
#WATCH | விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் உயர்வு.. மாற்றுத்திறனாளிகளுக்கு விடியல் பயணம் விரிவாக்கம்
— Sun News (@sunnewstamil) August 15, 2025
- சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட 9 புதிய அறிவிப்புகள்#SunNews | #IndependenceDay2025 | #CMMKStalinpic.twitter.com/1loJu4CXK8 - Aug 15, 2025 09:34 IST
செங்கோட்டையில் இருந்து புறப்பட்டார் மோடி
டெல்லி: 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி, நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பின்னர் பிரதமர் நரேந்திர மோடி புறப்பட்டார்.
#WATCH | Delhi: Prime Minister Narendra Modi leaves from the ramparts of the Red Fort after hoisting the national flag and addressing the nation on 79th #IndependenceDay.
— ANI (@ANI) August 15, 2025
(Video Source: DD) pic.twitter.com/1T18rpcfAi - Aug 15, 2025 09:27 IST
ஆர்.எஸ்.எஸ் 100 ஆண்டுகள் சேவை: பிரதமர் மோடி
இன்று, 100 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த ஒரு அமைப்பை - ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்.) - பெருமையுடன் குறிப்பிட விரும்புகிறேன். தேசத்திற்கு 100 ஆண்டுகள் சேவை என்பது ஒரு பெருமைக்குரிய, பொன்னான அத்தியாயம். (தனிநபரை உருவாக்குவதன் மூலம் தேசத்தை உருவாக்குதல்) என்ற உறுதியுடன், பாரத தாயின் நலன் என்ற இலக்குடன், ஸ்வயம்சேவகர்கள் நமது தாய்நாட்டின் நலனுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளனர். ஒரு வகையில், ஆர்.எஸ்.எஸ். உலகின் மிகப்பெரிய அரசு சாரா அமைப்பு ஆகும். இதற்கு 100 ஆண்டுகால அர்ப்பணிப்பு வரலாறு உண்டு. வறுமை என்றால் என்ன என்பதை நான் புத்தகங்களில் படித்துத் தெரிந்து கொள்ளவில்லை, அது என்னவென்று எனக்குத் தெரியும். நான் அரசாங்கத்திலும் சேவை செய்திருக்கிறேன், அதனால்தான் அரசாங்கம் கோப்புகளுக்குள் மட்டும் முடங்கிவிடாமல், குடிமக்களின் வாழ்க்கையைச் சென்றடைய வேண்டும் என்பதை உறுதி செய்ய நான் எப்போதும் முயற்சி செய்கிறேன். ஒரு காலத்தில், ஏழைகள், விளிம்புநிலையினர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்கள் உரிமைகளுக்காக, ஒரு அரசு அலுவலகத்திலிருந்து இன்னொரு அரசு அலுவலகத்திற்கு அலைந்து திரிந்து தங்கள் வாழ்க்கையைக் கழித்தனர். இன்று, அரசாங்கம் உங்கள் வீட்டு வாசலுக்கே வந்து, திட்டங்களை நேரடியாக பயனாளிகளுக்கு வழங்குகிறது.
பிரதமர் நரேந்திர மோடி 79-வது சுதந்திர தின உரை
- Aug 15, 2025 09:25 IST
இன்று முதல் பிரதம மந்திரி விக்சித் பாரத் ரோஜ்கார் யோஜனா திட்டம் அமல்
எதிர்காலத்தில், பெரும் சமூக சீர்திருத்தவாதியான மகாத்மா ஜோதிபா பூலே அவர்களின் 200வது பிறந்தநாள் வர இருக்கிறது. அந்த ஆண்டு விழாவிற்கான நிகழ்வுகளை நாம் தொடங்க உள்ளோம். மகாத்மா ஜோதிபா பூலே அவர்களின் கொள்கைகள் மற்றும் அவர் கொடுத்த மந்திரங்களில், பின்தங்கியவர்களுக்கு முன்னுரிமை அளிப்பது என்பது நமக்கு ஒரு உத்வேகமாக அமைந்துள்ளது. ஏழைகளுக்கு முன்னுரிமை அளித்து, மாற்றத்தின் உச்சத்தை நாம் எட்ட விரும்புகிறோம். என் நாட்டின் இளைஞர்களே, இன்று ஆகஸ்ட் 15, இந்த நல்ல நாளில் நமது நாட்டின் இளைஞர்களுக்காக ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தை நாம் தொடங்குகிறோம். இன்று முதல் பிரதம மந்திரி விக்சித் பாரத் ரோஜ்கார் யோஜனா திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ், தனியார் துறையில் முதல் வேலை பெறும் இளம் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு அரசாங்கத்திடமிருந்து ரூ.15,000 கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் நிறுவனங்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படும். பிரதம மந்திரி விக்சித் பாரத் ரோஜ்கார் யோஜனா, இளைஞர்களுக்கு கிட்டத்தட்ட 3.5 கோடி புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.
பிரதமர் நரேந்திர மோடி 79-வது சுதந்திர தின உரை
- Aug 15, 2025 09:20 IST
விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் உயர்வு: ஸ்டாலின்
விடுதலை போராட்ட வீரர்களுக்கான மாதாந்திர ஓய்வுதியம் ரூ. 22 ஆயிரமாக உயர்த்தப்படும். விடுதலை போராட்ட தியாகிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஓய்வுதியம் ரூ. 12 ஆயிரமாக உயர்த்தப்படும்
சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்றி வைத்த பின் ஸ்டாலின் அறிவிப்பு
- Aug 15, 2025 09:08 IST
தேசியக் கொடி ஏற்றி வைத்தார் மு.க.ஸ்டாலின்
சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்றி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- Aug 15, 2025 09:02 IST
ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த தூய்மை பணியாளர்கள்
தூய்மை பணியாளர்களுக்கு சிறப்புத் திட்டங்களை அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக 200க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பதாகைகள் ஏந்தி பேரணி சென்றனர். அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா அவர்களை அமரவைத்து காலை உணவு பரிமாறினர்.
Video: Sun News
#WATCH | முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து சென்னை பெரம்பூரில் தூய்மைப் பணியாளர்கள் பேரணி#SunNews | #CMMKStalin | #SanitaryWorkers | #Chennaipic.twitter.com/3QZ5KFztJN
— Sun News (@sunnewstamil) August 15, 2025 - Aug 15, 2025 08:59 IST
முப்படை வீரர்கள் அணிவகுப்பு மரியாதை ஏற்றார் ஸ்டாலின்
79வது சுதந்திர தின விழா: சென்னை கோட்டை கொத்தளத்திற்கு வருகை தந்து, முப்படை வீரர்கள் அணிவகுப்பு மரியாதை ஏற்றார் மு.க.ஸ்டாலின்.
Video: Sun News
#Watch | 79வது சுதந்திர தின விழா: சென்னை கோட்டை கொத்தளத்திற்கு வருகை தந்து, முப்படை வீரர்கள் அணிவகுப்பு மரியாதை ஏற்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!#SunNews | #IndependenceDay2025 | #CMMKStalin | #Chennaipic.twitter.com/AF2aAxfY3A
— Sun News (@sunnewstamil) August 15, 2025 - Aug 15, 2025 08:53 IST
தீபாவளியில் மக்களுக்கு மிகப் பெரிய பரிசு காத்திருக்கிறது- பிரதமர் மோடி
இந்த தீபாவளியை, உங்களுக்காக இரட்டை மகிழ்ச்சியாக மாற்றப் போகிறேன். கடந்த எட்டு ஆண்டுகளில், ஜிஎஸ்டியில் பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்களை நாங்கள் கொண்டு வருகிறோம். இது நாடு முழுவதும் வரிச் சுமையைக் குறைக்கும். கடந்த பத்தாண்டுகளாக, இந்தியா சீர்திருத்தம், செயல்பாடு மற்றும் மாற்றம் என்ற மூன்று நிலைகளைக் கடந்துள்ளது. இப்போது, நாம் மேலும் அதிக வலிமையுடன் முன்னேற வேண்டும். அண்மையில், அந்நிய நேரடி முதலீடு (FDI), காப்பீட்டுத் துறை மற்றும் உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் செயல்பட அனுமதிப்பது போன்ற பல சீர்திருத்தங்களை நாம் செயல்படுத்தியுள்ளோம்.
பிறருடைய கோட்டைச் சிறிதாக்க, நம் ஆற்றலை நாம் வீணடிக்கக் கூடாது. நம்முடைய கோட்டை முழு ஆற்றலுடன் நீளமாக்க வேண்டும்'. அப்படி நாம் செய்தால், உலகம் நம் வலிமையை ஏற்றுக்கொள்ளும். இன்றைய உலகச் சூழலில், பொருளாதாரத் சுயநலம் அதிகரித்து வரும் நிலையில், நாம் அந்த நெருக்கடிகளைப் பற்றி அழுது கொண்டிருக்காமல், துணிச்சலுடன் நம் கோட்டை நீளமாக்க வேண்டும். இந்த வழியை நாம் பின்பற்றினால், எந்தவொரு சுயநலமும் நம்மை சிக்க வைக்க முடியாது.
- Aug 15, 2025 08:51 IST
பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
நாம் இப்போது 'சமுத்திர மந்தன்' என்ற இலக்கை நோக்கிச் செல்கிறோம். இதை முன்னெடுத்து, கடலுக்கு அடியில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களை கண்டறியும் நோக்கில், ஒரு இயக்கமாக (Mission Mode) செயல்பட இருக்கிறோம். இதற்காக, இந்தியா தேசிய ஆழ்கடல் ஆய்வு இயக்கத்தை (National Deep Water Exploration Mission) தொடங்க இருக்கிறது.
#ஆபரேஷன்சிந்தூர்-ல், 'மேட் இன் இந்தியா' சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. எதிரிகளின் ஆயுதங்கள் சில நொடிகளில் அழிக்கப்பட்டதை கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். நாம் தற்சார்புடன் இல்லையென்றால், இத்தகைய சாதனையை செய்திருக்க முடியுமா? கடந்த 10 ஆண்டுகளில், தற்காப்புத் துறையில் தற்சார்பு அடைவதை இலக்காகக் கொண்டு செயல்பட்டதன் பலனை இன்று காண்கிறோம்.
விண்வெளித் துறையில் நமது சாதனைகள் நம் அனைவருக்கும் பெருமையைத் தருகின்றன. விண்கல வீரர் (Group Captain) சுபன்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து (ISS) திரும்பி, இன்னும் சில நாட்களில் இந்தியா வரவுள்ளார். தற்சார்பு பாரதத்தின் ஒரு பகுதியாக, நாம் ககன்யான் திட்டத்திற்கு தயாராகி வருகிறோம். மேலும், நம் சொந்த விண்வெளி நிலையத்தை அமைக்கவும் திட்டமிட்டு வருகிறோம். விண்வெளித் துறையில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் செயல்படுவதைக் கண்டு நான் பெருமைப்படுகிறேன். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் முழுத் திறமையுடன் இதில் ஈடுபட்டுள்ளனர். இது நம் நாட்டின் இளைஞர்கள் மீது நமக்குள்ள நம்பிக்கை மற்றும் அவர்களின் வலிமை.
- Aug 15, 2025 08:23 IST
இந்த ஆண்டு இறுதிக்குள், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட செமிகண்டக்டர் சிப் சந்தையில் கிடைக்கும்
பல்வேறு அம்சங்களைப் பற்றி நாம் பேசும்போது, செமிகண்டக்டர்கள் குறித்த ஒரு உதாரணத்தின்பால் உங்கள் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன். எந்த ஒரு அரசையும் விமர்சிப்பதற்காக நான் செங்கோட்டையில் இல்லை; அதை நான் செய்ய விரும்பவில்லை. ஆனால், நாட்டின் இளைஞர்களுக்கு இது பற்றி தெரிந்திருக்க வேண்டும். செமிகண்டக்டர்களுக்கான கோப்பு வேலைகள் 50-60 ஆண்டுகளுக்கு முன்பே நம் நாட்டில் தொடங்கப்பட்டன. செமிகண்டக்டர் தொழிற்சாலைக்கான யோசனை 50-60 ஆண்டுகளுக்கு முன்பு எழுந்தது. செமிகண்டக்டர் குறித்த இந்த யோசனை 50-60 ஆண்டுகளுக்கு முன்பே கருவிலேயே அழிக்கப்பட்டது என்பதை நீங்கள் அறிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். நாம் 50-60 ஆண்டுகளை இழந்துவிட்டோம். நாங்கள் தற்போது செமிகண்டக்டர்கள் குறித்து இயங்குமுறை (Mission Mode) அடிப்படையில் பணியாற்றி வருகிறோம்... இந்த ஆண்டு இறுதிக்குள், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட செமிகண்டக்டர் சில்லுகள் சந்தையில் கிடைக்கும். எண்ணற்ற மக்கள் சுதந்திரத்திற்காக தங்கள் உயிர்களை தியாகம் செய்தனர், தங்கள் இளமையை சிறைகளில் கழித்தனர், அடிமைத்தனத்தின் சங்கிலிகளை உடைப்பதற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தனர். இன்று, நான் இளம் விஞ்ஞானிகள், திறமையான இளைஞர்கள், பொறியாளர்கள், வல்லுநர்கள் மற்றும் அரசாங்கத்தின் அனைத்து துறையினரையும் கேட்டுக்கொள்வது என்னவென்றால், நமது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட போர் விமானங்களுக்கு நம்முடைய சொந்த ஜெட் என்ஜின்கள் இருக்க வேண்டும்.
பிரதமர் நரேந்திர மோடி 79-வது சுதந்திர தின உரை
- Aug 15, 2025 08:10 IST
என் சொந்த நாட்டின் நிலமும் தாகத்தில் தவித்து வருகின்றது- மோடி
நாட்டு மக்கள் சிந்து நதி ஒப்பந்தம் எவ்வளவு அநீதியானது, ஒருதலைப்பட்சமானது என்பதை நன்கு புரிந்து கொண்டுள்ளனர். இந்தியாவில் உற்பத்தியாகும் நதிகளின் நீர் நமது எதிரிகளின் வயல்களுக்கு நீர்ப்பாசனம் செய்து வரும் நிலையில், என் சொந்த நாட்டின் விவசாயிகளும், நிலமும் தண்ணீர் இல்லாமல் தாகத்தில் தவித்து வருகின்றது. கடந்த ஏழு தசாப்தங்களாக என் நாட்டு விவசாயிகளுக்கு ஈடு செய்ய முடியாத பாதிப்பை ஏற்படுத்திய ஒரு ஒப்பந்தம் இது. இனி தண்ணீரின் உரிமை இந்திய விவசாயிகளுக்கு மட்டுமே உண்டு.
பிரதமர் நரேந்திர மோடி 79-வது சுதந்திர தின உரை
- Aug 15, 2025 08:07 IST
சிறந்த மாநகராட்சி விருது
சுதந்திர தின விழாவையொட்டி கோட்டை கொத்தளத்தில் முதல்வரால் வழங்கப்படும் விருதுகளில் சிறந்த மாநகராட்சிகளுக்கான பட்டியலில், ஆவடி, நாமக்கள் மாநகராட்சிகள் இடம்பெற்றுள்ளன.
ஆவடி மேயர் ஜி.உதயகுமார், நாமக்கல் மேயர் டி.கலாநிதி ஆகியோரிடம் விருதுகள் வழங்கப்படும்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.