Tamil News Today Live: தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 18-ம் தேதி நடந்து முடிந்தது. அதோடு காலியாக இருக்கும் 24 சட்ட மன்றத் தொகுதிகளில் 20 தொகுதிகளுக்குமான இடைத்தேர்தலும் நடைபெற்றது.
மீதமுள்ள 4 தொகுதிகளான சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளுக்கு வரும் மே 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இதற்காக, முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
20 தொகுதிகளுக்கான சட்ட மன்ற இடைத் தேர்தல் நடந்து முடிந்ததையடுத்து, மீதமுள்ள 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் மே 19-ம் தேதி நடைபெறுகிறது.
இந்நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
Web Title:Tamil news today live updates
ஆசிரியர் தகுதித்தேர்வு முடிக்காத 1,500 ஆசிரியர்களுக்கும், மனிதாபிமான அடிப்படையில் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் - தமிழக அரசுக்கு ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர் மாயவன் வலியுறுத்தல்
தமிழக வேலை தமிழருக்கே என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசு பணிகளில் தொடர்ந்து தமிழகம் வஞ்சிக்கப்படுவதால், இந்த ஹேஷ்டேக்கில் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்து வருகிறார்கள் நெட்டிசன்கள்
ரயில்வே பணிகளில் தமிழர்கள் புறக்கணிக்கப் படுவதை கண்டித்து, திருச்சியில் போராட்டம்.