Tamil News Today Updates : தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாகவும், சென்னை மணப்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இருப்பினும் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை. 8 நாட்கள் முன்னதாகவே நாடளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் முடிவுக்கு வந்தது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டன.
கொரோனா தொற்றால் ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்கடி மரணமடைந்தார். அவரின் மறைவுக்கு, குடியரசுத் தலைவர், பிரதமர், ரயில்வே அமைச்சர் உள்ளிட்டோர் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக 3000 கோடி நிதி வழங்கிடுக என பிரதமருடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Live Blog
சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
நாளை வெளியிடப்படுவதாக இருந்த பொறியியல் தரவரிசைப் பட்டியல் இரண்டாவது முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பொறியியல் தரவரிசைப் பட்டியல் செப்டம்பர் 28ம் தேதி வெளியிடப்படும் என உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் அறிவித்துள்ளார்.
அகில இந்திய சித்தா மையம் தமிழகத்தில் அமைக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். மேலும், சென்னை அருகே ரயில், சாலை போக்குவரத்து வசதியுடன் போதுமான நிலம் அடையாளம் காணப்பட்டிருப்பதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
பாடகர் எஸ்.பி.பி உடல்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்றும் உயிர்காக்கும் கருவிகளுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், எஸ்.பி.பி உயிருக்கு மிக ஆபத்தான கட்டத்த்தில் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர்: “வேளாண் மசோதாக்கள் மூலம் விவசாயிகள் அதிக சுதந்திரம் மற்றும் நியாயமான விலையை பெறுவார்கள். காங்கிரஸ் விவசாயிகளை தவறாக வழிநடத்தி, தனது கட்சியையும் நாட்டையும் பலவீனப்படுத்துகிறது. குறைந்தபட்ச ஆதார விலை அரசாங்கத்தின் கொள்கை முடிவு, அது தொடரும். விவசாயிகள் தங்கள் பொருட்களை மண்டியின் எல்லைக்கு வெளியே விற்க முடியும்” என்று தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் 2020-ஐ பற்றி மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் திரு பிரகலாத் ஜோஷி வெளியிட்டுள்ள அறிக்கையில், மழைக்காலக் கூட்டத்தொடரின் போது மக்களவையின் செயல்திறன் சுமார் 167 சதவீதமாக இருந்ததாகவும், மாநிலங்களவையின் செயல்திறன் சுமார் 100.47 சதவீதமாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தக் கூட்டத்தொடரின் போது 22 மசோதாக்கள் (மக்களவையில் 16 மற்றும் மாநிலங்களவையில் 6) அறிமுகப்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார். மக்களவையும், மாநிலங்களவையும் தனித்தனியாக தலா 25 மசோதாக்களை நிறைவேற்றின. இரு அவைகளும் 27 மசோதக்களை நிறைவேற்றியுள்ள நிலையில், இது வரை இல்லாத அளவில் ஒரே நாளில் அதிக எண்ணிக்கையில் மசோதாக்கள் நிறைவற்றப்பட்டுள்ளன.
No, Deano. No. I am speechless. And in shock. And refusing to accept.
— Harsha Bhogle (@bhogleharsha) September 24, 2020
நான் பேச்சற்று உள்ளேன். கடும் வருத்தத்தில் உள்ளேன். என்னால் இதை நம்ப முடியவில்லை என்று கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போகல் இரங்கல் தெரிவித்தார்.
கோவாவில் நவம்பர் 20ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெறவிருந்த, 51வது இந்திய சர்வதேச திரைப்பட விழா, 2021 ஜனவரி 16ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழா மெய்நிகர் மற்றும் நேரடியான நிகழ்ச்சியாக நடத்தப்படும். சர்வதேச திரைப்பட விழா வட்டாரத்தில் சமீபத்தில் நடந்த விழாக்களில் பின்பற்றியபடி, கொவிட் தொடர்பான அனைத்து நெறிமுறைகளும் கடுமையாக அமல்படுத்தப்படும்.
புதுச்சேரி நீங்கலாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்ட மற்றும் இதர நீதிமன்றங்களில் வழக்கமான முறையில் வழக்கு விசாரணைகள் நடைபெறும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது. மனுதாரர், இனி நேரில் நீதிமன்றங்களில் ஆஜாராக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கோவிட்-19 பெருந்தொற்றின் பரவலால் சமூக இடைவெளி விதிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டி , பல்வேறு மாவட்ட மற்றும் இதர நீதிமன்றங்களில் மெய்நிகர் மூலம் விசாரணைகள் நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.
உடல் நலிவுற்று ஓய்விலுள்ள 117வது வ.செயலாளர் அண்ணன் பழக்கடை சேகர் அவர்களை இன்று சந்தித்து நலம் விசாரித்தேன். தலைவர் @mkstalin அவர்களுக்காக ஆயிரம் விளக்கு தொகுதியில் அண்ணன்கள் அன்புதுரை, சம்பத், சேகர் உடன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்த நினைவுகளை பகிர்ந்துகொண்டோம். @nchitrarasu pic.twitter.com/N1ytf9y60d
— Udhay (@Udhaystalin) September 24, 2020
கோவிட்-19 பெருந்தொற்று பரவலுக்குப் பிந்தைய காலகட்டத்தில், இந்தியா - இலங்கை இடையேயான ஒத்துழைப்புகளை மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகளை, இருநாடுகளும் ஆராய வேண்டியது அவசியமென பிரதமர் நரேந்திரமோடி வலியுறுத்தியுள்ளார். இந்தியா – இலங்கை நட்புறவு குறித்து, பிரதமர் நரேந்திரமோடி, இலங்கை பிரதமர் மஹிந்தா ராஜபக்சே-வுடன் நாளை மறுதினம், காணொளிக்காட்சி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இதையொட்டி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இந்தியா – இலங்கை இடையேயான இருதரப்பு நட்புறவு குறித்து விரிவாக விவாதிப்பதை ஆவலுடன் எதிர்நோக்கியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் அங்கடி மறைவுக்கு மத்திய அமைச்சரவை இரங்கல் தெரிவித்து 2 நிமிடங்கள் மவுனம் அனுசரித்தது. அவரை பிரிந்துவாடும் குடும்பத்தினருக்கு மத்திய அரசு மற்றும் ஒட்டுமொத்த நாட்டின் சார்பில் மத்திய அமைச்சரவை ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிக்கிறது.
தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனர் கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்கள் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி அறிந்து, இன்று காலை அவரது மனைவியும், அக்கட்சியின் பொருளாளருமான திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்களிடம்,
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) September 24, 2020
நண்பர் விஜயகாந்த் அரசியல் கட்சிக்கு அப்பாற்பட்டு, மிகச் சிறந்த மனிதர் என்று இயக்குநர் பாரதிராஜா ட்வீட் செய்துள்ளார்.
வணக்கம்
நண்பர் விஜயகாந்த் அரசியல் கட்சிக்குஅப்பாற்பட்டு,மிகச் சிறந்த மனிதர்.அவருக்கு coronaதொற்றுஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்கிறசெய்தி
கவலையளிக்கிறது.
அவர்தொற்றில்இருந்துபூரண குணமடைந்து விரைவில்வீடு திரும்ப பிரார்த்திப்போம்.
அன்புடன்
பாரதிராஜா @iVijayakant pic.twitter.com/I16qh3O7Dh— Bharathiraja (@offBharathiraja) September 24, 2020
மத்திய இணையமைச்சர் சுரேஷ் அங்கடியின் மறைவு செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தேன். சுரேஷ் அங்கடியை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை கூறிக்கொள்கிறேன் என முதல்வர் பழனிசாமி ட்வீட் செய்துள்ளார்.
CM Tamilnadu was shocked to hear of the sad and untimely demise of Union Minister of State for Railways @SureshAngadi_ ji. He convey’s his heartfelt condolences to the grieved family members.
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) September 24, 2020
விஜயகாந்த் விரைவில் நலம் பெற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தே.மு.தி.க. தலைவரும் அருமை நண்பருமான @iVijayakant அவர்கள் உடல்நலக் குறைவினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை அறிந்தேன்.
அவர் விரைவில் முழுநலம் பெற்று பொதுப்பணியில் மீண்டும் முழு உற்சாகத்துடன் செயல்பட வேண்டும் என்ற எனது பெருவிருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
— M.K.Stalin (@mkstalin) September 24, 2020
உடல் நலக்குறைவால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மதிப்பிற்குரிய அன்பு சகோதரர் தேமுதிக தலைவர் திரு. விஜயகாந்த் அவர்கள் விரைவில் குணமாகி நல்ல உடல் நலத்துடன் வீடு திரும்ப வேண்டுமென எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.@iVijayakant
— SP Velumani (@SPVelumanicbe) September 24, 2020
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் தேமுதிக தலைவர் அன்புச் சகோதரர் திரு.விஜயகாந்த் @iVijayakant அவர்கள் விரைவில் பூரணமாக குணமடைந்து இயல்புநிலை திரும்பிட இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
— O Panneerselvam (@OfficeOfOPS) September 24, 2020
விஜயகாந்த் பூரண உடல் நலத்துடன் இருப்பதாக தேமுதிக தலைமைக்கழகம் தெரிவித்துள்ளது.
— Vijayakant (@iVijayakant) September 24, 2020
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights