Advertisment

News Highlights: ரேஷனில் இலவச வினியோகம் நிறுத்தம்- அரிசி, சீனி, பருப்புக்கு இனி விலை

today news in tamil : கொரோனா  ஊரடங்கு காரணமாக ரேசனில் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு வந்த நிலையில், அது தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Tamil Nadu News Today Live Updates

Tamil Nadu News Today Live Updates

Tamil news today: கொரோனா  ஊரடங்கு காரணமாக ரேசனில் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு வந்த நிலையில், அது தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இன்னும் மக்களின் வாழ்வாதாரத்திற்கு விடிவு கிடைக்காத நிலையில், பணம் கொடுத்து மக்கள் பொருட்கள் வாங்கவேண்டும் என்பதால் மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

Advertisment

 

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீனுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 80 வயதான அவருக்கு கடந்த சில தினங்களாக காய்ச்சல் மற்றும் சளி இருந்து வந்துள்ளது. இதையடுத்து பரிசோதனை செய்து பார்த்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதை தொடர்ந்து திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் காதர் மொய்தீன் சிகிச்சை பெற்று வருகிறார்.

Tamil news today news in tamil : லைவ் அப்டேட்ஸ்

பெய்ரூட்டில் உள்ள துறைமுகம் அருகே, இந்திய நேரப்படி நேற்று மாலை 6 மணியளவில் பயங்கர சத்தத்துடன் வெடி வெடித்தது. முதலில் வெடிகுண்டு தாக்குதல் என அச்சம் நிலவியது. ஆனால், துறைமுகப் பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்பு சேமித்து வைக்கப்பட்டிருந்த 2750 டன் எடையிலான அம்மோனியம் நைட்ரேட் உள்ளிட்ட வெடி பொருட்கல் வெடித்தது உறுதி செய்யப்பட்டது. இந்த விபத்தில் 73 பேர் உயிரிழந்தனர். 3 ஆயிரத்து 700க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அயோத்தி புறப்பட்டார் பிரதமர் மோடி – பிற்பகல் 12.30 மணிக்கு பூமி பூஜை துவங்கும்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Live Blog

Tamil nadu news today updates : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.



























Highlights

    23:03 (IST)05 Aug 2020

    6 மணி வரை போக்குவரத்து நிறுத்தம்

    நீலகிரி மாவட்டத்தில் கனமழை எதிரொலி : உதகை - கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் நாளை காலை 6 மணி வரை போக்குவரத்து நிறுத்தம்

    23:02 (IST)05 Aug 2020

    தமிழக அரசு அரசாணை

    கொரோனாவால் உயிரிழந்த 28 முன்கள பணியாளர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் வழங்குவதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு.

    21:51 (IST)05 Aug 2020

    ஆகஸ்ட் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் - ரேஷன் கடைகளில் இன்று முதல் விநியோகம்

    சென்னையில் இன்று முதல் ஆகஸ்ட் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள், விநியோகம் செய்யப்படுகிறது. ஊரடங்கு காரணமாக கடந்த ஜூலை மாதம் வரை ரேஷன் கடைகளில் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு வந்த நிலையில் இம்மாதம் முதல் பொருட்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகரின் பெரும்பாலான நியாய விலைக் கடைகளில் இன்னும் இலவச முக கவசங்கள் வழங்கப்படவில்லை.

    21:15 (IST)05 Aug 2020

    உதவி ஆணையர்கள் இடமாற்றம்

    சென்னையில் 5 காவல் உதவி ஆணையர்களை இடமாற்றம் செய்து டிஜிபி திரிபாதி உத்தரவு

    எண்ணூர் சரக டிஎஸ்பி உக்கிர பாண்டியன் தாம்பரம் உதவி ஆணையராகவும், திருவள்ளூர் சமூக நீதி மற்றும் மனித உரிமை டிஎஸ்பி பிரகாஷ்குமார், புளியந்தோப்பு உதவி ஆணையராக நியமனம்.

    21:14 (IST)05 Aug 2020

    வசைபாடுவோருக்கு காலம் பதில் சொல்லும்

    தமிழர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கக்கூடிய வகையில் புதிய கல்விக்கொள்கை உள்ளது

    பல்வேறு சிறப்பம்சம் கொண்ட புதிய கல்விக்கொள்கையை வரவேற்காமல் வசைபாடுவோருக்கு காலம் பதில் சொல்லும்.

    அதிமுக - பாஜக வெவ்வேறு அரசியல் கட்சிகள் என்பதுடன் கொள்கைகளில் வேறுபாடு இருக்கலாம்

    அதிமுக கொடியிலிருந்து அண்ணா படத்தை நீக்க வேண்டும் என்ற எஸ்.வி.சேகரின் பதிவு அவரது தனிப்பட்ட கருத்து

    - சி.பி.ராதாகிருஷ்ணன்

    20:43 (IST)05 Aug 2020

    கனமழையால் பல இடங்களில் மண் சரிவு

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் மண் சரிவு!

    8 ஆம் தேதி வரை பொதுமக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

    20:18 (IST)05 Aug 2020

    50 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு

    கர்நாடக மாநிலம் கபினி அணையில் இருந்து 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் காவிரியில் உபரிநீர் திறப்பு

    20:03 (IST)05 Aug 2020

    தமிழகத்தைச் சேர்ந்த அனைவருக்கும் வாழ்த்துகள்

    சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த அனைவருக்கும் வாழ்த்துகள்

    எளிய குடும்பங்களை சேர்ந்த பலர் சாதனை புரிந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது

    மாற்றுத்திறனாளிகளான பூரணசுந்தரி, பாலநாகேந்திரன் வெற்றி பெற்றது பலருக்கும் ஒளிவிளக்காக திகழும்

    -டிடிவி தினகரன்

    19:51 (IST)05 Aug 2020

    "சினிமா படபிடிப்பு : தற்போது வாய்ப்பில்லை" - அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்

    சினிமா படபிடிப்புக்கு அனுமதி வழங்க தற்போது வாய்ப்பு இல்லை என செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் 15 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள சித்த மருத்துவமனை கட்டடத்தை திறந்து வைத்து பேசிய அவர், திரையரங்குகள் திறப்பு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை, மத்திய அரசு வெளியிடவில்லை எனக் கூறினார்.

    19:13 (IST)05 Aug 2020

    தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு

    திருப்பூர்: அமராவதி அணையில் இருந்து நாளை முதல் தண்ணீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு

    ஆற்று மதகு வழியாக ஆக.16 வரை ஆயக்கட்டு பகுதிகளுக்கு 1,210 மில்லியன் கனஅடி நீர் திறக்க வேண்டும்

    19:00 (IST)05 Aug 2020

    தற்காலிக அங்கீகாரம் நீட்டிப்பு

    உரிய அங்கீகாரம் பெறாமல் இயங்கி வரும் தனியார் பள்ளிகளுக்கு, அடுத்த 2 ஆண்டுகளுக்கு தற்காலிக அங்கீகாரம் நீட்டிப்பு

    மாணவர்களின் கல்விச் சான்றிதழ் செல்லாதாகிவிடும் என்பதால் அங்கீகாரம் வழங்க நடவடிக்கை - பள்ளிக் கல்வித்துறை

    18:59 (IST)05 Aug 2020

    திமுகவுக்கு எந்த இடர்பாடும் இல்லை

    எம்ஜிஆர், சம்பத், வைகோ போன்றவர்கள் பிரிந்து சென்றபோது, திமுக சிறிய இடர்பாடுகளை தான் சந்தித்தது

    வி.பி.துரைசாமி, கு.க.செல்வம் போன்றவர்களால் திமுகவுக்கு எந்த இடர்பாடும் இல்லை - திமுக பொருளாளர் துரைமுருகன்

    18:43 (IST)05 Aug 2020

    மாவட்ட வாரியாக இன்று கொரோனா பாதிப்பு - பகுதி 2

    தி.மலை - 112

    மதுரை -106

    தஞ்சை- 79

    விழுப்புரம் -77

    திண்டுக்கல்-71

    சிவகங்கை- 69

    நாகை- 52

    கரூர்-50

    ஈரோடு - 40

    நீலகிரி - 36

    அரியலூர்- 36

    ராமநாதபுரம்- 32

    நாமக்கல்- 31

    திருப்பூர்- 27

    நெல்லை- 26

    திருவாரூர்- 21

    பெரம்பலூர் -20

    க.குறிச்சி- 18

    தர்மபுரி - 17

    கிருஷ்ணகிரி- 13

    திருப்பத்தூர்-12

    18:42 (IST)05 Aug 2020

    மாவட்ட வாரியாக இன்று கொரோனா பாதிப்பு

    சென்னை- 1044

    செங்கல்பட்டு- 487

    திருவள்ளூர்- 472

    காஞ்சிபுரம்- 342

    விருதுநகர்- 67

    ராணிப்பேட்டை- 143

    தேனி- 278

    வேலூர் -179

    கடலூர்-170

    குமரி -175

    தூத்துக்குடி-173

    சேலம்-159

    புதுக்கோட்டை- 150

    திருச்சி-136

    தென்காசி- 121

    கோவை - 112

    18:16 (IST)05 Aug 2020

    6,031 பேர் டிஸ்சார்ஜ்

    தமிழகத்தில் இன்செய்யப்பட்டுள்ளனர்.று மட்டும் 6,031 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

    18:09 (IST)05 Aug 2020

    5,175 பேருக்கு கொரோனா

    தமிழகத்தில் புதிதாக 5,175 பேருக்கு கொரோனா பாதிப்பு

    தமிழகத்தில் இன்று கொரோனாவால் 112 பேர் உயிரிழப்பு

    தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 2,73,460 ஆக உயர்வு

    17:54 (IST)05 Aug 2020

    "தி.மு.க.விலிருந்து என்னை நீக்கினாலும் கவலையில்லை" - எம்.எல்.ஏ. கு.க. செல்வம்

    திமுகவிலிருந்து தம்மை நீக்கினாலும் கவலையில்லை என்று அக்கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ள எம்.எல்.ஏ. கு.க. செல்வம் தெரிவித்துள்ளார். சென்னையில் பாஜக தலைமையமான கமலாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், ராமர் படத்திற்கு மலர்தூவி வணங்கினார். பாஜக மூத்த நிர்வாகிகள், கு.க. செல்வத்திற்கு பொன்னாடை அணிவித்து வரவேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கு.க. செல்வம் தி.மு.க.வில் வாரிசு அரசியல் குடும்ப அரசியலாக மாறியுள்ளது என்று குற்றம் சாட்டினார். பொது மக்களுக்கு உழைக்கவே, தான் எம்.எல்.ஏவாக ஆனதாக கு.க. செல்வம் தெரிவித்தார்.

    17:53 (IST)05 Aug 2020

    வாக்குப் பதிவு நிறைவு

    இலங்கை நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு நிறைவு

    இலங்கை முழுவதும் மாலை 4 மணி நிலவரப்படி 55% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தகவல்

    17:27 (IST)05 Aug 2020

    139 பேருக்கு கொரோனா

    விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 139 பேருக்கு கொரோனா தொற்று - வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 9,685 ஆக உயர்வு

    17:27 (IST)05 Aug 2020

    பாதித்தோர் எண்ணிக்கை 16,637

    செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 620 பேருக்கு கொரோனா தொற்று - வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 16,637 ஆக உயர்வு

    17:09 (IST)05 Aug 2020

    மனித உரிமை ஆணையம் உத்தரவு

    டெங்கு கொசு உற்பத்தியை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரிய புகார்

    விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சி ஆணையருக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவு

    17:09 (IST)05 Aug 2020

    மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

    தருமபுரி: ஒகேனக்கல் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

    ஆலம்பாடி, ஊட்டமலை பகுதிகளில் தாழ்வாக வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தல்

    - மாவட்ட நிர்வாகம்

    17:01 (IST)05 Aug 2020

    அதிமுக எம்.எல்.ஏ பவுன்ராஜுக்கு கொரோனா

    பூம்புகார் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ பவுன்ராஜுக்கு கொரோனா தொற்று உறுதி!

    சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி..

    16:53 (IST)05 Aug 2020

    10ம் தேதி முதல் உடற்பயிற்சி கூடங்களுக்கு அனுமதி - முதல்வர் பழனிசாமி உத்தரவு

    இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் 50 வயதுக்கு குறைவானவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். மேலும், உடற்பயிற்சி கூடங்கள் செயல்படுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார். தமிழக உடற்பயிற்சி கூட உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

    16:51 (IST)05 Aug 2020

    உச்சநீதிமன்றம் கவலை

    அதிகரித்து வரும் காவல்நிலைய மரணங்கள் குறித்து உச்சநீதிமன்றம் கவலை

    * காவல் நிலைய மரணங்கள் குறித்து பதிலளிக்க தேசிய மனித உரிமை ஆணையம், மற்றும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

    16:51 (IST)05 Aug 2020

    விதிகள் எதுவும் உருவாக்கப்படவில்லை

    "பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் தொடர்பாக விதிகள் எதுவும் உருவாக்கப்படவில்லை"

    * தமிழக அரசு தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தகவல்

    15:50 (IST)05 Aug 2020

    நடிகர் கருணாசுக்கு கொரோனா தொற்று உறுதி

    நடிகரும், எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் -க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.   மருத்துவர்களின் அறிவுரைப்படி,  திண்டுக்கல் வீட்டில் கருணாஸ் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். 

    15:27 (IST)05 Aug 2020

    கொரோனா பாதிப்பு: மாநிலம் வாரியான தகவல்

    15:19 (IST)05 Aug 2020

    மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் முதல்வர் ஆய்வு

    மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் நாளை மதியம் நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் தமிழக முதல்வர் பங்கேற்க உள்ள நிலையில் அமைச்சர்கள் செல்லுார் ராஜீ, உதயகுமார் ஆகியோர் அங்கு ஆய்வு மேற்கொண்டனர்.

    15:17 (IST)05 Aug 2020

    ஜெயங்கொண்டம் காவல் நிலையம் ஒரு வாரத்திற்கு மூடல்

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் 3 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் காவல் நிலையம் ஒரு வாரத்திற்கு மூடப்பட்டது.

    13:34 (IST)05 Aug 2020

    எம்.எல்.ஏ., கு.க.செல்வம் விடுவிப்பு!

    திமுக தலைமை நிலைய அலுவலக செயலாளர் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் ஆகிய பொறுப்புகளில் இருந்து எம்.எல்.ஏ., கு.க.செல்வம் விடுவிப்பு . திமுக தலைவர் ஸ்டாலின் நடவடிக்கை. கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிக இடை நீக்கம். அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஏன் நீக்க கூடாது என விளக்கம் கேட்டு கு.க.செல்வத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 

    13:32 (IST)05 Aug 2020

    எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கொரோனா!

    பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

    13:31 (IST)05 Aug 2020

    ஆளுநருக்கு கொரோனா சிகிச்சை

    கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

    12:06 (IST)05 Aug 2020

    காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

    வடக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது வடமேற்கு மற்றும் வடக்கு ஒடிஷா, மேற்குவங்கம் அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலைகொண்டுள்ளது. 

    11:09 (IST)05 Aug 2020

    உதயநிதி ஸ்டாலின் பதிவு!

    கொரோனாவால் தமிழகத்தில் அதிக மருத்துவர்கள் பலியானதாக வந்த செய்தியை அமைச்சர் விஜயபாஸ்கர் மறுத்துள்ளதை சட்டிக் காட்டி, உதயநிதி ஸ்டாலின், சமூகவலை தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த செய்தி பொய்யாக இருக்கவே தானும் விரும்புவதாக குறிப்பிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின், கொரோனா பணியில் உயிர்த் தியாகம் செய்த அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட முன்கள வீரர்கள் பற்றிய முழு விவரங்களை வெளியிடுமாறு வலியுறுத்தி உள்ளார். 

    10:57 (IST)05 Aug 2020

    ஓபிஎஸ் ட்வீட்!

    பிரதமர் மோடிக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்துக்களின் நெடுநாளைய கனவு நிறைவேறும் வண்ணம், வரலாற்றுச் சிறப்பு மிக்க 'அயோத்தியில் ராமர் கோவில்' கட்டுவதற்கான பூமிபூஜை விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்து, அடிக்கல் நாட்டவுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என, தமது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். 

    09:57 (IST)05 Aug 2020

    ரூபா, உள்துறை செயலாளராக நியமனம்!

    கர்நாடகாவில் உயர் காவல் அதிகாரிகள் 17 பேரை அம்மாநில அரசு பணி இடமாற்றம் செய்துள்ளது. அதன்படி, ரயில்வே ஐ.ஜி.யாக இருந்த பெண் அதிகாரி ரூபா, உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த பதவியை ஏற்கும் முதல் பெண் அதிகாரி இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. 

    09:56 (IST)05 Aug 2020

    பிளாஸ்மா சிகிச்சை!

    தனியார் மருத்துவமனைகளில் பிளாஸ்மா சிகிச்சைக்கு அரசு அனுமதியளிக்க வேண்டும் இந்திய மருத்துவ சங்கத்தின் மாநில தலைவர் சி.என்.ராஜா  கோரிக்கை விடுத்துள்ளார்,ந்த ஒரு தனியார் மருத்துவமனைகளும் அதிக கட்டணம் வசூலித்தாலும் அவர்கள் மீது பாரபட்சம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  தமிழகம் முழுவதும் தளர்வுகள் கொண்ட ஊரடங்கு தான் தற்போது தேவை என்றும் சி.என்.ராஜா  கூறினார்.

    Tamil news today news in tamil : அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை சிறப்பாக நடைபெற, முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 1992-ம் ஆண்டு நடைபெற்ற தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டத்தில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தாக கூறியுள்ளார். உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் படி, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டமைக்கு மனமார்ந்த பாராட்டு தெரிவித்துள்ளார். பூமி பூஜையில் பங்கேற்கும் பிரதமர் மோடிக்கு முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    டெல்லியில் பாஜக தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்த ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ கு.க.செல்வம் ராகுலுடனான உறவை துண்டித்து கொள்ள வேண்டும் என்று ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்தார். திமுகவில் உட்கட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், முடிந்தால் திமுக தலைமை தன் மீது நடவடிக்கை எடுத்து கொள்ளட்டும் என்றார்..

    மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட கோரிய வழக்கில் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து குழு அமைத்து 3 மாதங்களில் அறிவிப்பு வெளியிடுமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் ஓ.பி.சி. இட ஒதுக்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. அந்த மனுவில் மருத்துவ படிப்பில் ஓ.பி.சி. பிரிவினருக்கு நடப்பாண்டே 50 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

    Tamilnadu Corona Coronavirus
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment