news today : புதிய கல்வி கொள்கை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கல்வித்துறை உயர் அதிகாரிகள் ஆகியோர் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர்.
பிரசாத் ஸ்டுடியோ உரிமை தொடர்பாக இரு தரப்புக்கும் இடையிலான வழக்கு, நிலுவையில் உள்ளது. இந்நிலையில், அங்குள்ள தனது பிரத்யேக அறையில் இருந்து விலை உயர்ந்த இசை கருவிகள், இசை குறிப்புகள் திருடி கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக இசையமைப்பாளர் இளையராஜா, சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளனர். தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முழுமையாக எதிர்க்க வேண்டும் என அதில் வலியுறுத்தல்
தேசிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் செயல்படுத்த மறுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தனியார் தொலைக்காட்சிகள் மூலம் இன்று முதல் பாடங்கள் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. வீட்டுக்கல்வி என்ற முறையில் ஒன்று முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. குழந்தைகளுக்கு ஆன்-லைன் மூலம் வகுப்பு நடத்தக்கூடாது என்றும் பள்ளிக் கல்வித் துறை கூறியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Live Blog
Tamil nadu news today updates : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
மும்மொழிக் கொள்கையில் இந்தி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று பாஜகவின் எஸ்.ஆர்.சேகர் தெரிவித்துள்ளார்.
#நேர்படப்பேசு: மும்மொழிக் கொள்கையில் இந்தி என்ற பேச்சுக்கே இடமில்லை - எஸ்.ஆர்.சேகர் (பா.ஜ.க.)#NEP2020 | #ThreeLanguagePolicy | #TNPolitics | #NerpadaPesu pic.twitter.com/EWsJbzWnBp
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) August 3, 2020
சமூக இடைவெளியை காரணம் காட்டி மாணவர்களுக்கு முட்டை வழங்க முடியாது என்றால், மதுக்கடைகளை ஏன் மூடக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கொரோனா காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கு சத்துணவு மற்றும் முட்டை வழங்க வலியுறுத்தி, தமிழக மகிளா காங்கிரஸ் தலைவரும் வழக்கறிஞர் சுதா வழக்கு தொடர்ந்திருந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தனிமனித இடைவெளி பிரச்னை ஏற்படும் என்பதால், பள்ளிகள் மூலம் மாணவர்களுக்கு முட்டை வழங்க முடியாது என்று தெரிவித்தார்.
இதை கேட்ட நீதிபதிகள், அப்படியானால் மதுக்கடைகளை மூட அரசு ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என கேள்வி எழுப்பினர். மேலும், பள்ளிகளில் வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது இரு முறையோ எப்படியாவது முட்டை வழங்க வேண்டும் என்றும், எப்படி வழங்குவது என்பது குறித்து அரசுதான் முடிவெடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர்.
உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கியை காட்டி கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்டவரை குண்டர் சட்டத்தில் அடைத்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது பீஹார், ஜார்கண்ட், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் இருந்து தமிழகத்தில் ரவுடிகள், அரசியல்வாதிகளுக்கு துப்பாக்கி சப்ளை செய்யப்படுவதாகவும், அரசு உரிய நடவடிக்கை எடுத்து இதனை தடுக்க வேண்டும் என நீதிபதிகள் வலியுறுத்தினர்.
மேலும் வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்கள் விற்பனை செய்யப்படுகிறதா? தமிழகத்தில் எத்தனை பேருக்கு துப்பாக்கி உரிமம் வழங்கப்பட்டுள்ளது, உரிமம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்ததாக எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று நீதிபதிகள் அடுக்கடுக்காக கேள்விகளை முன்வைத்தனர். இது குறித்து 2 வாரங்களில் தமிழக அரசு பதிலளிக்கவும் உத்தரவிட்டனர்.
புதிய கல்விக் கொள்கை குறித்து முதல்வரின் அறிக்கையில், மும்மொழிக் கொள்கை ஏற்றுக் கொள்ளப்படாது என்று தெரிவித்துள்ளார். அப்படியெனில், மற்ற கருத்துக்களை தமிழக அரசு ஏற்றுக் கொள்கிறதா? சந்தேகங்களை தெளிவுபடுத்துங்கள் - முதல்வருக்கு திருச்சி சிவா எம்.பி வேண்டுகோள்
மாநிலம் முழுவதும் உள்ள 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை 2, 3-ம் ஆண்டு பயிலும் மாணவர்கள் மற்றும் முதுகலை 2-ம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடத்த கல்லூரிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் ஆன்லைனில் பாடங்கள் நடத்தும் பணி இன்று தொடங்கியுள்ளது.
ஒவ்வொரு வகுப்புக்கும் பிரத்யேக வாட்ஸ் அப் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, அதில் பாடங்கள் பற்றிய தகவல்கள், கால அட்டவணை உள்ளிட்டவை புதுப்பிப்பு செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது. அனைத்து மாணவர்களும் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்று, பாடங்களை கற்பதை உறுதி செய்யும் வகையில், மாணவர்களை தனித்தனியாக அழைத்து அவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்பதை பேராசிரியர்கள் உறுதி செய்து வருவதாகவும் கூறியுள்ளது.
ஊரடங்கால் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், மீண்டும் கல்லூரிகள் திறக்கப்படும் வரை ஆன்லைன் மூலமாகவே பாடங்கள் தொடர்ந்து நடத்தப்படும் என்றும் கல்லூரிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரியில் ஆட்சி அமைத்திடும் சூழலை உருவாக்குவோம் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதுச்சேரி மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. புதுச்சேரி மாநில மக்கள் நீதி மய்யம் கட்சியின் பல்வேறு பிரிவின் புதிய நிர்வாகிகளின் பட்டியலை கமல்ஹாசன் அறிவித்தார். பின்னர் புதுச்சேரி மாநிலத்த்தில் கட்சியை வலுப்படுத்துவது குறித்து அவர் ஆலோசனை மேற்கொண்டார்.
புதுக்கோட்டை- 86
நெல்லை- 85
தென்காசி- 75
திண்டுக்கல்- 75
கிருஷ்ணகிரி- 67
க.குறிச்சி- 66
சேலம்- 66
சிவகங்கை- 64
ராமநாதபுரம்- 62
திருப்பூர்- 45
திருப்பத்தூர்- 44
நாமக்கல்- 43
நீலகிரி -37
நாகை- 32
அரியலூர்- 20
பெரம்பலூர் -19
கரூர்-19
தஞ்சை-18
திருவாரூர்- 18
ஈரோடு - 13
தர்மபுரி - 4
தமிழகத்தில் புதிதாக 5,609 பேருக்கு கொரோனா பாதிப்பு
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.
சென்னையில் மேலும் 1,021 பேருக்கு கொரோனா பாதிப்பு
சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,588 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
இன்று மட்டும் 109 பேர் உயிரிழப்பு
- தமிழக சுகாதாரத் துறை
மயிலாடுதுறை திமுக எம்.பி திருவிடைமருதூர் செ.ராமலிங்கத்திற்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 2 எம்.பி. 1 எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அயோத்தியில் ராமர் கோயில் அடிக்கல் நாட்டும் விழாவுக்கு 175 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ராமர் கோயில் அடிக்கல் நாட்டும் விழாவிற்கு பிரதமர் மோடி ஆகஸ்ட் 5ம் தேதி நண்பகல் 12:30 மணிக்கு வருவார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்மொழிக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழக முதல்வருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், அவர் கூறுகையில், “ஆனால், பிறபாதிப்புகள் பற்றி தமிழகஅரசின் நிலை குறித்து எதுவும் இல்லை. உடனே சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தை நடத்த வேண்டும். தேசிய கல்விக் கொள்கையை முற்றாக மறுதலிக்கவேண்டும். அதனை திரும்பப்பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த செவிலியர் அர்ச்சனாவின் உடலை கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்ய அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால், வருவாய் துறை அதிகாரிகள் அப்பகுதி மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
‘ஜிம்’களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. உடற்பயிற்சி கூடத்தின் நுழைவுவாயிலில் சானிடைசர் கண்டிப்பாக இருக்க வேண்டும். முகக் கவசம் அணிந்தவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். கட்டுப்பாட்டு பகுதிகளில் உடற்பயிற்சி கூடங்களை திறக்க அனுமதி இல்லை என்று குறிப்பிட்டுள்ளது.
மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி: மாதந்தோறும் மின்கட்டண கணக்கீடு செய்வது குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தப்படும். டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகள் நாளை பரிசீலனை செய்யப்படும் என்று கூறினார்.
பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பரோல் கோரி தாய் அற்புதம்மாள் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம், ராஜீவ்காந்தி கொலை வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட பன்னோக்கு விசாரணை முகமை செயல்பாட்டில் உள்ளதா? என்று கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், ஏற்கனவே பரோல் வழங்கப்பட்டதற்கான அரசு மற்றும் நீதிமன்ற உத்தரவுகளை தாக்கல் செய்ய பேரறிவாளன் தரப்புக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மும்மொழிக்கொள்கையை எதிர்த்தது போன்றே புதிய கல்விக்கொள்கையில் மாநிலத்தின் உரிமைகளை பறிக்கும் அம்சங்களையும் பழனிசாமி அரசு அனுமதிக்கக்கூடாது என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரம் பரவிவருவது நல்லதல்ல என்று சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. மேலும், குண்டர்கள், கிரிமினல்கள், அரசியல்வாதிகள் துப்பாக்கி உரிமம் வைத்திருப்பது சரியல்ல என்றும் துப்பாக்கி கலாச்சாரத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு புதிய கல்வி கொள்கை குறித்து ஆராய அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்கள் அடங்கிய குழுவை அமைக்கிறது. இருமொழிக் கொள்கையை மட்டுமே தமிழகம் தொடர்ந்து பின்பற்றும் என முதலமைச்சர் ஏற்கனவே அறிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதுச்சேரி மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இதில் மநீம தலைவர் கமல்ஹாசன் புதுச்சேரி மாநில மக்கள் நீதி மய்யம் கட்சியின் பல்வேறு பிரிவின் புதிய நிர்வாகிகளின் பட்டியலை அறிவித்தார். பின்னர் புதுச்சேரி மாநிலத்த்தில் கட்சியை வலுப்படுத்துவது குறித்து அவர் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, புதுச்சேரியில் ஆட்சி அமைக்கும் சூழலை உருவாக்குவோம் என கமல்ஹாசன் கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்தார்.
இயக்குனர் பாரதிராஜா, திரைப்பட தயாரிப்பாளர்களுக்காக ‘திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம்’ என்ற பெயரில் புதிய சங்கத்தை தொடங்கியுள்ளார். இன்று முதல் உறுப்பினர் சேர்க்கை தொடங்கவுள்ளதாக பாரதிராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பாஜக கட்சித் தலைமை மீது வருத்தத்தில் இருப்பது உண்மை தான். ஆனால், கட்சி மாறப் போகிறேன் என்ற செய்தியில் உண்மை இல்லை என்று பாஜக மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
இதற்கிடையே நயினார் நாகேந்திரனுக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் உள்ளதாகவும், வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்-அஸ்ட்ரா ஜெனெகா நிறுவனம் உருவாக்கிய கொரோனா தடுப்பூசி COVISHIELD-ன் 2ம் மற்றும் 3ம் கட்ட மருத்துவ பரிசோதனைகளை நடத்த, புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்திற்கு, இந்திய மருந்து தலைமை கட்டுப்பாட்டாளர் ஒப்புதல் அளித்துள்ளார்.
இருமொழிக்கொள்கையில் உறுதியாக இருக்கும் முதலமைச்சர் பழனிசாமிக்கு வைரமுத்து பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழ் உணர்வாளர்கள் சார்பில் முதலமைச்சருக்கு நன்றி எனவும் வைரமுத்து. தெரிவித்துள்ளார்.
இருமொழிக் கொள்கையில்
உறுதிகாட்டியிருக்கும்
தமிழ்நாட்டு முதலமைச்சர்
பழனிச்சாமியைப் பாராட்டுகிறேன்;
தமிழ் உணர்வாளர்கள் சார்பில்
நன்றி தெரிவிக்கிறேன்.
கோரிக்கை வைக்க உரிமையிருந்த எனக்கு
நன்றி சொல்லும் கடமையுமிருக்கிறது.#NewEducationPolicy2020 #TNGovt #தமிழ் #twolanguagepolicy— வைரமுத்து (@Vairamuthu) August 3, 2020
அடுத்த 24மணி நேரத்தில் தமிழகத்தில் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.தெற்கு ஆந்திரா மற்றும் கர்நாடகா பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் மழைக்கு வாய்ப்பு எனவும், கோவை,நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு-சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தற்போதைய சூழலில் சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்க இயலாது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சின்னத்திரை படப்பிடிப்பு நடைபெற உள் அரங்கு போதுமானது எனவும் கூறியுள்ளார். சினிமா திரைப்பட படப்பிடிப்புக்கு திரைத்துறையினர் அனுமதி கோரியிருந்தனர். இந்நிலையில், சினிமா படப்பிடிப்பு வெளிப்புறங்களில் நடைபெறும் போது மக்கள் கூட்டம் கூட வாய்ப்பு இருப்பதால் அனுமதி தர இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மக்களவை தொகுதி எம்.பி. கார்த்தி சிதம்பரம் தனக்கு கரோனா உறுதியாகியுள்ளதாக ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'இப்போதுதான் எனது கரோனா பரிசோதனை முடிவு வந்தது. எனக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
I have just tested positive for #Covid. My symptoms are mild and as per medical advice I am under home quarantine. I would urge all those who have recently been in contact with me to follow medical protocol.
— Karti P Chidambaram (@KartiPC) August 3, 2020
மும்மொழிக் கொள்கையை நிராகரித்த முதல்வர் பழனிசாமிக்கு நன்றி . மொழிக்கொள்கையை மட்டுமல்ல; கல்விக் கொள்கையையே தமிழக அரசு எதிர்க்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.
#NEP2020 பெயரால் வரும் மும்மொழித்திட்டத்தை எதிர்த்துள்ள @CMOTamilNaduவுக்கு நன்றி!
மொழிக்கொள்கை மட்டுமல்ல- கல்விக் கொள்கையே பல தவறுகளுடன் கல்வி உரிமையைப் பறிப்பது என திமுக கூட்டணித் தலைவர்கள் கடிதம் எழுதியுள்ளோம். அதன் அடிப்படையிலும் முதல்வர் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும்! pic.twitter.com/WIimFHlUe6
— M.K.Stalin (@mkstalin) August 3, 2020
தமிழகத்தில் இன்று முதல் விலையில்லா பாட புத்தகங்கள் மற்றும் புத்தகப் பைகள் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகள், முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் ஆகியோருக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்
மும்மொழிக் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார். மும்மொழி திட்டத்தை அகற்றி 1968-ல் அண்ணா நிறைவேற்றிய தீர்மானத்தை குறிப்பிட்டு முதலமைச்சர் அறிக்கை வெளியிட்டுள்ளார். முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா இந்தி திணிப்பை ஆணித்தரமாக எதிர்த்து வந்தனர். புதிய கல்விக் கொள்கையை மாநிலங்கள் தங்கள் கொள்கைக்கேற்ப செயல்படுத்த அனுமதிக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
@CMOTamilNadu statement on National education policy
#NEP2020 pic.twitter.com/BRrGWzhOVo
— Stalin SP (@Stalin__SP) August 3, 2020
100% கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சைகை மூலமாக பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இன்று முதல் தனியார் தொலைக்காட்சிகள் பாடங்கள் ஒளிப்பரப்பு செய்யப்படவுள்ள நிலையில், அமைச்சர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
சென்னையில் விடிய விடிய கொட்டி தீர்த்த மழை… வங்க கடலில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி!
இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கையின்படி தங்க பத்திரம் திட்டத்தின் கீழ், இன்று முதல் முதலீடு செய்யலாம். ஒரு தனிநபர் குறைந்தபட்சம் ஒரு கிராம் முதல் அதிகபட்சம் நான்கு கிலோ வரை வாங்கலாம். ஒரு கிராம் 5 ஆயிரத்து 334 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த முதலீட்டுத் தொகைக்கு 2 புள்ளி 5 சதவீத ஆண்டு வட்டி, 6 மாதத்திற்கு ஒரு முறை வழங்கப்படும். 8 ஆண்டுகள் கழித்து அன்றைய 24 கேரட் தங்கத்தின் விலைக்கு நிகரான முதிர்வுத் தொகை வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் மிகப் பழமையான பண்டிகைகளில் ஒன்றான ரக்சா பந்தன் விழா இன்று கொண்டாடப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights