/tamil-ie/media/media_files/uploads/2021/04/high.jpg)
தமிழகத்தில் மருத்து பதற்றநிலை ஏதும் ஏற்படவி்லலை என்று கூறியுள்ள தமிழக அரசு, தமிழகத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், பொதுமக்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மேலும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளில் நோயாகளிகள் எண்ணிக்கை கனிசமாக உயர்ந்து வரும் நிலையில், தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் ஆக்ஸிஜன் வெளி மாநிலத்திற்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகவும், தமிழகத்தில் பல மருந்துவமனைகளில் வெண்டிலேட்டர்கள் பற்றாக்குறை இருப்பதாகவும் தகவல் வெளியானது.
இந்த தகவலை அடிப்படையாக வைத்து சென்னை உயர்நீதிமன்றம் பொதுநல வழக்காக தானாக முன்வந்து விசாரணை நடத்தியது. தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழக அரசு சார்பில் இன்று விளக்கம் அளிக்கப்பட்டது. இதில், தமிழகத்தில் ஆக்ஸிஜன் மற்றும் வெண்டிலேட்டாகள் பற்றாக்குறை இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும் தமிழகத்தில் மருத்துவ பதற்றநிலை ஏதும் ஏற்படவில்லை என்றும், சிகிச்சைக்கு தேவையான அளவு ஆக்ஸிஜன் கையிருப்பு இருப்பதாகவும், "ரெம்டெசிவர், ஆக்சிஜன், கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை இல்லை" எனவும், தமிழகத்தில், 1,167 டன் ஆக்சிஜன் இருப்பு உள்ளது என்றும் பதில் அளித்துள்ள தமிழக அரசு, ஆந்திரா, தெலுங்கானாவுக்கு 45 டன் ஆக்சிஜன் அனுப்பியதால் எந்த பாதிப்பும் இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.