/tamil-ie/media/media_files/uploads/2021/04/anaimuthu.jpg)
பெரியார் சிந்தனைகளை தொகுத்து தமிழ் சமுதாயத்திற்கு வழங்கிய பெரியார் இயக்க போராளி வே. ஆனைமுத்து (96) அவர்கள் இன்று மரணமடைந்தார்.
கடந்த 1925-ம் ஆண்டு பெரம்பலூர் அருகில் உள்ள முருக்கன்குடி என்ற சிற்றூரில் பிறந்தவர் வே.ஆனைமுத்து. 1944-ம் ஆண்டு வேலூரில் நடைபெற்ற தந்தை பெரியாரின் சொற்பொழிவை கேட்டு சுயமரியாதை கொள்கைகளை பின்பற்றி வந்தார். தொடர்ந்து அண்ணாமலை பல்கலை கழகத்தில் இடைநிலைக்கல்வி, திராவிட நாடு பல்லவநாடு, அணில் குமரன், ஆகிய இதழ்களில் கட்டுரைகளையும் பாடல்களையும் எழுதியுள்ளார்.
தொடர்ந்து பெரியாரின் கொள்கைகளை தொகுத்து வழங்கிய அவர், 1949-ம் ஆண்டு முதல் பெரியாரின் கொள்கைப்பரப்பும் பணியில் ஈடுபட்டு வநதார். இது தொடர்பாக பல நூலகளையும் கட்டுரைகளையும் எழுதியுள்ள அவர், கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கபட்டு புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவர் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு தமிழகத்தில் பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் பலர் சமூகவலைதளங்களில் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.