ராஜீவ் காந்திக்கு திமுகவில் புதிய பதவி

சமீபத்தில் திமுகவில் இணைந்த வழக்கறிஞர் ராஜீவ்காந்திக்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் திமுகவில் இணைந்த வழக்கறிஞர் ராஜீவ்காந்திக்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
ராஜீவ் காந்திக்கு திமுகவில் புதிய பதவி

நாம் தமிழர் கட்சியில் மாநில இளைஞர் ஒருங்கிணைப்பாளராகவும், ஊடகபிரிவு பிரதிநியாகவும் இருந்தவர் ராஜீவ்காந்தி வழக்கறிஞரான இவர், கடந்த செப்டம்பர் மாதம் திடீரென கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,

Advertisment

அது ஒரு பேரின்ப கனாக்காலம்...!!

அனைவருக்கும் நன்றி

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுகிறேன்

Advertisment
Advertisements

என தெரிவித்திருந்தார்.

நாம் தமிழர் கட்சியில் ஏற்பட்ட உட்கட்சி பூசல்தான் இதற்கு காரணம் என கூறப்பட்டது. ஆனால் ராஜீவ்காந்தி இதற்கு எந்த விளக்கமும் அளிக்கவில்லை. அதனைத் தொடர்ந்து எந்த கட்சியிலும் சேராமல் இருந்து அவர், கடந்த வாரம் திமுக தலைவர் ஸ்டாலின், இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். இது தொடர்பாக ராஜீவ்காந்தி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த தேர்தலுக்காக திமுக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் ராஜீவ்காந்திக்கு திமுக செய்திக்தொடர்பு இணைச்செயலாளர் பதவி அளித்துள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: