/tamil-ie/media/media_files/uploads/2023/08/Puducherry.jpg)
Puducherry
பாபு ராஜேந்திரன் புதுச்சேரி
கோடநாடு கொலை கொள்ளை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி புதுச்சேரி ஓ.பி.எஸ் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்*
கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் உண்மையான குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தியும், விசாரணையை துரிதப்படுத்த வேண்டியும், மெத்தன போக்குடன் செயல்படும் தமிழக அரசு மற்றும் காவல்துறை கண்டித்தும் சாரம் நான்கு முனை சந்திப்பில் புதுச்சேரி அதிமுக ஓ.பி.எஸ் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஓபிஎஸ் அணி மாநில செயலாளர் முன்னாள் எம்எல்ஏ ஓம் சக்தி சேகர் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஓம் சக்தி சேகர்
கோடநாடு கொலை கொள்ளை நடந்து இரண்டு ஆண்டுகள் ஆகின்ற நிலையில் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை குற்றவாளிகள் காவல்துறைக்கு தெரிந்தே அவர்களை தப்ப விடுகிறார்கள் எனவே தமிழக அரசு இனியும் காலம் கடத்தாமல் துரிதமாக செயல்பட்டு கோடநாடு கொலை கொள்ளை சம்பந்தப்பட்ட அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.