/tamil-ie/media/media_files/uploads/2023/07/Thamizhisai.jpg)
புதுவை துணைநிலை ஆளுனர்
பாபு ராஜேந்திரன் புதுச்சேரி
மருத்துவ மாணவர்ச் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, ” பதில் அளித்த துணை நிலை ஆளுநனர் தமிழிசை சௌந்திரராஜன், முதலமைச்சர் தலைமையில் அமைச்சர்கள் கலந்தாலோசித்து மாணவர்கள் நலன் பெறும் வகையில் தயாரிக்கப்பட்ட கோப்பு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது” என்று தெரிவித்தார்.
புதுச்சேரி அரசு சார்பில் கார்கில் வெற்றி தினம் இன்று(26-07-2023) கடைப்பிடிக்கப்பட்டது. இந்த நாளில் புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள போர்வீரர்கள் நினைவிடத்தில் துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். முன்னதாக, துணைநிலை ஆளுநருக்கு காவலர் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர். ந.ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர். செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலர் ராஜுவ் வர்மா, காவல்துறை தலைமை அதிகாரி. ஸ்ரீநிவாஸ், அரசு துறைச் செயலர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.