'தமிழின் முற்போக்குச் சிந்தனை முகம்': ராஜ் கௌதமன் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்

தமிழின் முன்னணி முற்போக்குச் சிந்தனை முகமான ராஜ் கௌதமன் மறைவு தமிழ்ச் சமூகத்துக்கான பேரிழப்பாகும் என ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

தமிழின் முன்னணி முற்போக்குச் சிந்தனை முகமான ராஜ் கௌதமன் மறைவு தமிழ்ச் சமூகத்துக்கான பேரிழப்பாகும் என ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
New Project - 2024-11-13T153505.626

தமிழ் இலக்கியம் மற்றும் பண்பாட்டு ஆய்வாளர்  ராஜ் கௌதமன் (74)  இன்று உயிரிழந்தார். இவரது  மறைவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

Advertisment

அவர் வெளியிட்ட பதிவில், "தமிழ் இலக்கியம் மற்றும் பண்பாட்டு ஆய்வாளராக விளங்கிய பேராசிரியர் ராஜ் கௌதமன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன். அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒடுக்கப்பட்டோர் பார்வையில் சமூக வரலாற்று ஆய்வுகள், படைப்பு, தன்வரலாறு விமர்சனம், மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில் விரிவான பங்களிப்புகளை வழங்கிய தமிழின் முன்னணி முற்போக்குச் சிந்தனை முகமான ராஜ் கௌதமன் அவர்களது மறைவு என்பது தமிழ்ச் சமூகத்துக்கான பேரிழப்பாகும்.

Advertisment
Advertisements

அவரை இழந்து வாடும் அவரது இணையர் பேராசிரியர் க.பரிமளம், அவரது தங்கை எழுத்தாளர் பாமா உள்ளிட்ட குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தமிழ் அறிவுப்புலத்தைச் சேர்ந்த தோழர்கள் என அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us: