ரொம்ப பெரிய தப்பு... இல்லாதவர்களை பார்த்து சிரிக்கும் ஆள் நான் இல்ல: யூடியூபர் இர்ஃபான் விளக்கம்

ரம்ஜான் பண்டிகையில் மக்களுக்கு பரிசுப்பொருட்கள் கொடுத்த இர்பான், மக்களிடம் கோபமாக பேசிவிட்டு, சிறிது தூரம் சென்றவுடன், அவர்களை கேலி கிண்டல் செய்து தனது மனைவியுடன் சிரித்து மகிழ்ந்துள்ளார்.

ரம்ஜான் பண்டிகையில் மக்களுக்கு பரிசுப்பொருட்கள் கொடுத்த இர்பான், மக்களிடம் கோபமாக பேசிவிட்டு, சிறிது தூரம் சென்றவுடன், அவர்களை கேலி கிண்டல் செய்து தனது மனைவியுடன் சிரித்து மகிழ்ந்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Youtube Irfan

ரம்ஜான் பண்டிகையின் போது பொதுமக்களுக்கு பரிசுப்பொருட்கள் வழங்கிய நிகழ்வில் நான் செய்த்து தவறு தான். நான் அவ்வாறு செய்திருக்க கூடாது என்று யூடியூப்பர் இர்பான விளக்கம் அளித்து மன்னிப்பு கோரியுள்ளார்.

Advertisment

யூடியூப்பில் வீடியோ வெளியிட்டு, சமூகவலைதளங்களில் மூலம் பிரபலமான இவர், விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றிருந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு செய்துகொண்ட இவர், தனது மனைவி கர்ப்பமாக இருக்கும்போது, குழந்தையின் பாலினம் தொடர்பான தகவல்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார். ஆனால் அந்த சமயத்தில் அவர் மன்னிப்பு கேட்டுக்கொண்டதால், அவர் மீதான நடவடிக்கை நிறுத்தப்பட்டது.

அதேபோல் தனக்கு குழந்தை பிறந்தபோது, அந்த குழந்தையின் தொப்புள் கொடியை இவர் அறுத்ததும், அது தொடர்பான வீடியோ பதிவையும் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார். தமிழ்நாடு மருத்துவ சட்டத்தின்படி இது தவறானது என்று மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில், பயிற்சி பெற்ற மருத்துவர்கள் தான் இதை செய்ய வேண்டும் என்றும், தொப்புள் கொடியை இர்பான வெட்டுவது தனிநபர் உரிமையை மீறும் செயல் என்றும், மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.

இதனிடையே கடந்த ரம்ஜான் தினத்தில், மக்களுக்கு, பரிசு பொருட்களை கொடுப்பதற்காக, தனது மனைவியுடன் காரில் புறப்பட்டு சென்ற இர்பான், காரில் இருந்தபடியே மக்களுக்கு உடை மற்றும் பணம் கொடுத்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் தங்களுக்கு பொருட்கள் கிடைக்காமல் போய்விடுமோ என்ற பதற்றத்தில், இர்பான கொடுக்கும் பொருட்களை வேகமாக அவரிடம் இருந்து வாங்கியுள்ளனர்.

Advertisment
Advertisements

இதன் காரணமாக கோபமான இர்பான் அவர்களிடம் கடுமையான வார்த்தைகளை பேசியுள்ளார். இதை வீடியோவாக பதிவு செய்த அவர், மக்களிடம் கோபமாக பேசிவிட்டு, சிறிது தூரம் சென்றவுடன், அவர்களை கேலி கிண்டல் செய்து தனது மனைவியுடன் சிரித்து மகிழ்ந்துள்ளார். இதையும் வீடியோவாக பதிவு செய்த அவர், தனது தளத்தில் பதிவிட்டுள்ளார். இர்பானின் செயலுக்கு நெட்டிசன்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்திருந்தனர்.

இது குறித்து அப்போதே மன்னிப்பு கேட்டிருந்த இர்பான தற்போது மீண்டும் தனது தவறுக்கு விளக்கம் அளித்துள்ளார், இதில், நான் செய்தது தவறு தான். நான் அவ்வாறு செய்திருக்க கூடாது. ரம்ஜான் பண்டிகையின்போது, மக்களுக்கு பரிசுப்பொருட்கள் வழங்கிய நிகழ்வில், நான் நடந்துகொண்ட விதம் தவறுதான். இல்லாதவர்களை பார்த்து சிரிக்கும் ஆள் நான் இல்லை. என்ன இருந்தாலும் நான் அவ்வாறு செய்திருக்க கூடாது. இது குறித்து நான் அன்றே பேசியிருந்தால் அது தவறாக சென்றிருக்கும் என்றும் கூறியுள்ளார்.

Youtube

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: