'ரேபிட் டெஸ்ட் கருவி வாங்கியதில் முறைகேடு' - ஐஇ தமிழ் நேரலையில் தமிழன் பிரசன்னா
தமிழன் பிரசன்னா நமது ஐ.இ. தமிழ் ஃபேஸ்புக் நேரலையில், ஊரடங்கு பற்றியும் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் மற்றும் கொரோனா நிவாரணங்கள் பற்றியும் பேசுகிறார். அவரிடம் வாசகர்கள் ஐ.இ தமிழ் ஃபேஸ்புக் நேரலையில் கம்மெண்ட் செய்து கேள்விகளை எழுப்பி உரையாடலாம்.
ரேபிட் டெஸ்ட் கருவி வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளது என ஐஇ தமிழ் நேரலையில் நேயர்களுடன் உரையாடிய திமுகவின் தமிழன் பிரசன்னா குற்றம் சாட்டியுள்ளார்.
Advertisment
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்துவருகிறது. பலரும் வீடுகளில் சும்மா முடங்கி இருக்காமல், வீட்டில் இருந்தபடியே அவரவர்களுக்கு பிடித்த பொழுது போக்கு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஐ.இ தமிழ் வாசகர்களை அவர்களுக்கு விருப்பமான சினிமா நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோர்களுன் இணைக்கும் பாலமாக செயல்பட்டு வருகிறது.
அப்படி இதுவரை நடிகைகள் ரோகினி, லஷ்மி ராமகிருஷ்ணன், இயக்குனர் சீனு ராமசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி, சமையல் கலைஞர் செஃப் தாமு ஆகியோர் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வாசகர்களுடன் ஃபேஸ்புக் நேரலையில் தினமும் ஒரு ஆளுமை என உரையாடினர்.
அந்த வரிசையில், திமுகவின் செய்தித் தொடர்பு இணை செயலாளர் தமிழன் பிரசன்னா இன்று மாலை 6.30 மணிக்கு ஐ.இ. தமிழ் ஃபேஸ்புக் பக்கத்தில் நேரலையில் வாசகர்களுடன் உரையாடினார்.
திமுகவின் நாவன்மை மிக்க பேச்சாளராக வலம் வருபவர் தமிழன் பிரசன்னா. தொலைக்காட்சி விவாதங்களில் திமுகவின் நிலைப்பாட்டை திராவிட இயக்க கொள்கை ரீதியாக ஆணித்தரமாக முன்வைத்து விவாதிப்பவர். ஆளும் கட்சி மீது தர்க்க ரீதியாகவும் விமர்சனங்களை முன்வைப்பவர். திமுகவில் கவனிக்கப்படும் அடுத்தகட்ட கட்சி நிர்வாகிகளில் ஒருவராக திகழ்ந்துவருகிறார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"