Advertisment

தமிழ்நாட்டில் பா.ஜ.க. எங்கே? மோடி முன்னிலையில் பேசிய தமிழருவி மணியன்

தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி எங்கே என்ற நிலை மாறி எங்கும் பாரதிய ஜனதா உள்ளது என காமராஜர் மக்கள் கட்சி நிறுவனர் தமிழருவி மணியன் கூறினார்.

author-image
WebDesk
New Update
tamilaruvi manian, gandhian people's movement, தமிழருவி மணியன், காந்திய மக்கள் இயக்கம், திமுக, திமுக எம்பி கௌதம் சிகாமணி சொத்துக்கள் முடக்கம், ரஜினிகாந்த், tamilaruvi manian questions raised, dmk mp gautham sigamani property seized by ed, rajinikanth, dmk, ponmudi son gautham sigamani, பொன்முடி மகன் கௌதம் சிகாமணி

தமிழ்நாட்டில் எங்கும் தாமரை உள்ளது என திருப்பூர் பாஜக பொதுக்கூட்டத்தில் தமிழருவி மணியன் உரையாற்றினார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Tiruppur | Tn Bjp | Lok Sabha Election | தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை, என் மண் என் மக்கள் என்ற பெயரில் மாநிலம் முழுக்க 234 தொகுதிகளிலும் நடைபயணம் மேற்கொண்டார்.

இந்த நடைபயணத்தின் நிறைவு விழாவான இன்று திருப்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார்.

இந்தக் கூட்டத்தில் பேசிய தமிழருவி மணியன், “தமிழ்நாட்டில் பாஜக எங்கே இருக்கிறது என்ற நிலை மாறி எங்கும் இருக்கிறது என்ற நிலை உள்ளது.

பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்பதற்காக,  ஒழுக்கமும் நேர்மையும் உண்மையும் சார்ந்த ஆயிரக்கணக்கான தொண்டர்களைக் கொண்டுள்ள காமராஜர் மக்கள் கட்சி பாடுபடும்” என்றார்.

இந்தக் கூட்டத்தில் பேசிய மோடி, “நான் கடந்த காலங்களில் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு யாத்திரை தொடங்கினேன். அப்போது என் மனதில் இரண்டு விஷயங்கள் நினைவில் இருந்தது.

ஒன்று லால் சவுக்கில் இந்திய தேசியக் கொடி பட்டொளி வீசி நிரந்தரமாக பறக்க வேண்டும். மற்றொன்று, சட்டப்பிரிவு 370 நீக்கப்பட வேண்டும் என்பதாகும். இது இரண்டும் பின்னர் நிறைவேற்றப்பட்டது” என்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tn Bjp Tiruppur Lok Sabha Election
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment