/tamil-ie/media/media_files/uploads/2022/12/Tamilisai.jpg)
கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன், கோட்டகம் ஸ்ரீகிருஷ்ணசுவாமி திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே கோட்டகம் ஸ்ரீ கிருஷண்சுவாமி திருக்கோவில் நிர்வாகம் சார்பில் அமைக்கபட்ட திருமண மண்டபத்தை தெலங்கானா மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுனர் தமிழிசை சௌந்தராஜன் திறந்துவைத்தார்.
முன்னதாக கோட்டகம் ஸ்ரீகிருஷ்ணசுவாமி திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
அப்போது அவரிடம் செய்தியாளர்களை கேள்வியெழுப்பினார்கள். அதற்கு அவர் பதிலளிக்கையில், “பெண்களுக்காக மிகப்பெரிய கொள்கையை வகுத்து கொடுத்தவர் பாரதி. ஜி20 மாநாடு குறித்து ஆலோசனை கூட்டத்தில் பாரத பிரதமர் ஜி20 உலக மாநாட்டில் இந்தியா தலைமை தாங்கும் செய்தியை கிராமந்தோறும் எடுத்துரைக்க வேண்டுமென்று கூறினார்.
தமிழ்நாட்டில் 4 இடங்களிலும் ஹைதராபாத்தில் 6 இடங்களிலும் புதுவையில் 1 இடத்திலும் என மொத்தம் 200 மாநாடுகள் நடைபெறவுள்ளன.
இந்த மாநாட்டில் இளைஞர்கள் தங்கள் படைப்புகளை காட்சி படுத்த முடியும் . ஆளுனராக இருப்பதால் மதம்சார்ந்து பேசமுடியாது. நான் அனைத்து மத நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வாழ்த்துக்களை சொல்கிறேன்.
ஆனால், தமிழகத்தை ஆள்பவர்கள் ஏன் தீபாவளி ,விநாயகர் சதுர்த்தி விழாக்களுக்கு வாழ்த்து கூறுவதில்லை என்ற விடைகிடைக்காமல் உள்ளது” என்றார்.
தொடர்ந்து, சென்னை மேயர் பிரியா முதல்வரின் வாகனத்தில் தொங்கியபடி சென்றது குறித்து செய்தியாளர் கேள்வியெழுப்பினார்கள்.
அப்போது, பாரதி பிறந்த மண்ணில் பெண்கள் மதிக்கபடவேண்டும். சென்னை மேயர் விருப்பப் பட்டுதான் முதல்வரின் வானத்தில் தொங்கியபடி சென்றாரா என்பது தெரியாததால் இது குறித்து கூற நான் விரும்பவில்லை.
இந்நிகழ்ச்சியில் நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் காந்தியும் பங்கேற்றார்.
செய்தியாளர் த.இ. தாகூர்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.