/indian-express-tamil/media/media_files/bldCuUeZ81qjanVjFS46.jpg)
ஈரோடு எம்.பி கணேசமூர்த்தியின் மரணத்துக்கு வைகோ பதில் சொல்ல வேண்டும் என தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.
Tamilisai Soundararajan | Lok Sabha Election |தென்சென்னை பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் இன்று (மார்ச் 28, 2024) செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “ஈரோடு ம.தி.மு.க எம்.பி. கணேச மூர்த்தியின் மரணம் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. வாரிசு அரசியல் ஜனநாயகத்தை படுகொலை செய்துவிடும் என பிரதமர் தொடர்ந்து சொல்லிக் கொண்டு வருகிறார்.
வாரிசு அரசியல் ஜனநாயகத்தை படுகொலை செய்துவிடும். இந்த வாரிசு அரசியலுக்கு ஈரோடு எம்.பி. படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் வைகோ, மு.க. ஸ்டாலினை குற்றஞ்சாட்டுவேன். வைகோ எதற்காக தி.மு.க-வில் இருந்து வெளியேறினார்.
அனுபவம் வாய்ந்த ஒரு எம்.பி. உயிரிழந்துள்ளார். எதற்காக வைகோ தனது மகனுக்கு சீட் கொடுத்தார்? ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தற்கொலை செய்துள்ளார்.
இதற்கு வைகோ, மு.க. ஸ்டாலின் பதில் அளிக்க வேண்டும். திமுகவிலும் வாரிசு அரசியல் இருக்கிறது. உதயநிதிக்கு கிடைக்கும் அங்கீகாரம் சாதாரண தொண்டனுக்கு கிடைக்கவிலலை” என்றார்.
முன்னதாக, “இந்திய வரலாற்றிலேயே பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தமிழ்நாட்டில்தான் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்” என்றார்.
தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.க-வுக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தத் தொகுதியில் வைகோவின் மகன் துரை வைகோ போட்டியிடுகிறார்.
தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்.19ஆம் தேதி நடைபெறுகிறது. முடிவுகள் ஜூன் 4ஆம் தேதி அறிவிக்கப்படுகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.