Advertisment

காவிரியில் இதுவரை புதுவைக்கு வந்த நீரின் அளவு 0.5 டி.எம்.சி மட்டுமே: தமிழிசை புகார்

காரைக்காலுக்கு 7 டி.எம்.சி நீர் வரவேண்டும் ஆனால் 0.5 டி.எம்.சி தான் வந்திருக்கிறது. இதனால் காவிரி நீர் மிகக்குறைந்த அளவே வந்துள்ளது கவலையளிக்கின்றது என்று ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
ko

தமிழிசை

காரைக்காலுக்கு 7 டி.எம்.சி நீர் வரவேண்டும் ஆனால் 0.5 டி.எம்.சி தான் வந்திருக்கிறது. இதனால் காவிரி நீர் மிகக்குறைந்த அளவே வந்துள்ளது கவலையளிக்கின்றது என்று ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Advertisment

 காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துணை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சபாநாயகர் செல்வம், அமைச்சர் சந்திரபிரியங்கா, மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டார்கள். தொடர்ந்து காரைக்கால் மாவட்ட விவசாயிகளை தமிழிசை சௌந்தர்ராஜன் சந்தித்தார். அப்போது விவசாயிகள் காவிரி நீர் வராத காரணத்தால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஆளுநரிடம் விவசாயிகள் தெரிவித்தனர். இதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் உறுதி அளித்தார்.

  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன்:-  காரைக்காலுக்கு 7 டி.எம்.சி தண்ணீர் வரவேண்டும். இந்நேரம் 2.5 டிஎம்சி தண்ணீர் வந்திருக்க வேண்டும் ஆனால் 0.5 டிஎம்சி தான் வந்திருக்கிறது. இதனால் காவிரி நீர் மிகக்குறைந்த அளவே வந்துள்ளது கவலையளிக்கின்றது எனவும் நமக்கு தேவையான டி.எம்.சி தண்ணீரை பெற வலியுறுத்தி வருகிறோம். மேலும் இதுகுறித்து மத்திய அரசிடம் மேலும் அழுத்தம் கொடுக்க உள்ளேன். அதே நேரம் விவசாயிகள் பாதிக்காதவாறு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என்று தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment