விமான நிலையத்தில் பாஜக-வுக்கு எதிராக கோஷம் எழுப்பிய தமிழிசை மகன்!

குடும்பப் பிரச்னை காரணமாக தனது மகன் பாஜக-வுக்கு எதிராக கோஷம் எழுப்பியதாக விளக்கமளித்தார். 

குடும்பப் பிரச்னை காரணமாக தனது மகன் பாஜக-வுக்கு எதிராக கோஷம் எழுப்பியதாக விளக்கமளித்தார். 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tamilisai soundararajan nomination

விமான நிலையத்தில் பாஜக-வுக்கு எதிராக கோஷம் எழுப்பிய தமிழிசை மகனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Advertisment

நேற்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துக் கொண்டிருந்தார் பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன்.

அப்போது உடன் இருந்த அவரது மகன் சுகநாதன் பாஜக-வுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார். உடனே அங்கிருந்த தமிழிசையின் பாதுகாவலர்கள், சுகந்தனை தடுத்து அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழிசை, குடும்பப் பிரச்னை காரணமாக தனது மகன் பாஜக-வுக்கு எதிராக கோஷம் எழுப்பியதாக விளக்கமளித்தார்.

Advertisment
Advertisements

தொடர்ந்து பேசிய அவர், அதிமுக தலைமை குறித்து ராஜன் செல்லப்பா பேசியது உட்கட்சி விவகாரம். இதைப் பற்றி நான் கருத்து கூறுவது சரியாக இருக்காது, என்றார்.

தமிழிசையின் மகன் பாஜக-வுக்கு எதிராக கோஷம் எழுப்பியது, பாஜக-வினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே அந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்து, சோபியா போல், தற்போது உங்கள் மகன் மீது நடவடிக்கை எடுப்பீர்களா எனக் கேள்வி எழுப்பி வருகிறார்கள் நெட்டிசன்கள்.

Bjp Dr Tamilisai Sounderrajan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: