New Update
/tamil-ie/media/media_files/uploads/2018/10/tt.jpg)
சபரிமலை விவகாரம் தமிழிசை கருத்து
முடிவான நம்பிக்கை..இது தீர்க்கக்கூடிய நம்பிக்கையல்ல. தீர்க்கமான தீவிரமான நம்பிக்கை என ட்வீட்
சபரிமலை விவகாரம் தமிழிசை கருத்து
சபரிமலை விவகாரம் தமிழிசை கருத்து :கேரளாவில் இருக்கும் சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களின் வழிபாட்டிற்கும் உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். இதனைத் தொடர்ந்து 17ம் தேதி சபரிமலையின் நடை மகரவிளக்கு பூஜைக்காக திறக்கப்பட்டது.
சபரிமலை ஐயப்பனை தரிசப்பதற்காக நிறைய பெண்கள் முற்பட்டனர். ஆனால் ஐயப்ப பக்தர்களின் போராட்டங்களை தொடர்ந்து அந்த பெண்கள் திருப்பு அனுப்பபட்டனர். அது தொடர்பான செய்திகளைப் படிக்க
ஐயப்பன் கோவிலின் பாரம்பரியத்தை காப்பது தான் முக்கியம் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருக்கிறார்.
ஐய்யப்பன் கோயிலின் பன்னெடுங்காலமாக பழக்கப்பட்டுவரும்......பண்பாடு..பாதுகாக்கப்பட வேண்டும்.... அங்கு...பெண்பாடு முக்கியமில்லை...பழக்கப்பட்டுவரும்...பண்பாடுதான் முக்கியம்...இது மூடநம்பிக்கையல்ல...முடிவான நம்பிக்கை..இது தீர்க்கக்கூடிய..நம்பிக்கையல்ல...தீர்க்கமான..தீவிரமான நம்பிக்கை.
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) 19 October 2018
கோவிலுக்குள் பெண்களின் அனுமதி மறுக்கப்படுவது மூட நம்பிக்கையில்லை. அது முடிவான நம்பிக்கை என்று தன்னுடைய ட்விட்டரில் ட்வீட் செய்திருக்கிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு ஐயப்ப பக்தர்கள் மீது நடத்தப்பட்ட காவல்துறை தடியடி குறித்தும் அவர் ட்வீட் செய்திருக்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.