/tamil-ie/media/media_files/uploads/2023/06/Tamilisai.jpg)
சென்னை ஐ.சி.எஃப் ரயில் தொழிற்சாலையை தமிழிசை சௌந்தரராஜன் பார்வையிட்டார்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று சென்னை ஐ.சி.எஃப் ரயில் தொழிற்சாலையை பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ரயில்வே துறை அதிகாரிகளின் கடுமையான உழைப்பினாலும் பிரதமர் நரேந்திர மோடி வழிகாட்டுதல் மற்றும் மத்திய ரயில்வே துறை அமைச்சரின் ஊக்கத்திநாலும் மிகச் சிறப்பாக இந்த ரயில்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
எல்லா நகரங்களையும் இணைக்கும் 'வந்தே பாரத் ரயில்' மக்கள் அதிகமாக விரும்பி பயணிக்கிறார்கள். விமானங்களில் பயணித்துக் கொண்டு இருந்தவர்கள் கூட இதன் வசதிகளை உணர்ந்து ரயிலில் பயணம் செய்கிறார்கள்.
இதில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு இருக்கிறது. இதில் பயணம் செய்யும் மக்கள் நேரடியாக ஓட்டுநருடன் உரையாடலாம், சாப்பிடுவதற்கு மேசை கொடுக்கப்பட்டிருக்கிறது. அவசர காலத்தில் வண்டியை உடனே நிறுத்துவதற்கு சுவிட்ச் கொடுக்கப்பட்டிருக்கிறது.
மொபைல் போன்களை சார்ஜ் செய்ய வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது, கழிப்பறைகள் மிக
சுகாதாரமான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
மேலும் மாற்றுத்திறனாளிகள் கழிப்பறை பயன்படுத்துவதற்கான வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. எனவே 'வந்தே பாரத்' ரயில் இவர்களின் தீவிர முயற்சியினால் சிறப்பாக கட்டமைக்கப்பட்டு வருகிறது.
பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் இருந்து 71 ஆயிரம் பெட்டிகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான ரயில் பெட்டிகள் தயாரித்த இடமாக மாறி இருக்கிறது. மேலும், இவை நேபாளம், இலங்கை போன்ற வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது” என்றார்.
செய்தியாளர் பாபு ராஜேந்திரன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.