/tamil-ie/media/media_files/uploads/2018/03/download-3.jpg)
நடிகர் ரஜினிகாந்துக்கு கிடைக்கும் விளம்பரம் எங்களுக்கு கிடைப்பதில்லை என, பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செவ்வாய்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, “மக்களை சார்ந்துதான் அரசியல் இருக்க வேண்டும். அதனை அனைவரும் உணர்ந்திருக்கின்றனர். ரஜினிகாந்தின் பேச்சும் அதனை சார்ந்துதான் இருக்கிறது. ”, என கூறினார்.
இன்றைய அரசியல் தலைவர்கள் சரியாக செயல்படுவதில்லை என்ற ரஜியின் குற்றச்சாட்டை தான் முழுமையாக ஏற்றுக்கொள்ள மாட்டேன் என தெரிவித்த தமிழிசை, அவரவர்கள் அவரவர் வேலைகளை பார்த்துக் கொண்டிருப்பதாகவும், ஒவ்வொரு பிரச்சனையையும் ஒவ்வொரு ரீதியில் அணுக வேண்டும் என கூறினார். குறிப்பிட்ட பிரச்சனையை எப்படி தீர்ப்பது என ரஜினியிடம் கேட்டால், அவருக்கே அதற்கான பதில் தெரியாது என தெரிவித்தார்.
மேலும், நடிகர் ரஜினிகாந்துக்கு கிடைக்கும் விளம்பரம் எங்களுக்கு கிடைப்பதில்லை எனவும், திரைத்துறையினருக்கு ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் தருவதாகவும் தமிழிசை தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.