/tamil-ie/media/media_files/uploads/2021/11/Tamilnadu-IPS.jpg)
Tamilnadu IPS Officers Transfer Update : தமிழகத்தில் 11 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 12 அதிகரிகள் இடமாற்றம் செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த மே மாதம் ஆட்சி பொறுப்பேற்ற திமுக அரசு அரசு அலுவலகங்களில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் நிலையில், ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட பல அரசு அதிகரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது தமிழகத்தில் 11 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 12 அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2021/11/0001.jpg)
அந்த வகையில், கோவை மாநகர காவல் ஆணையர் தீபக் தாமோர், ஊழல் தடுப்பு பிரிவு இணை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டள்ளார். சென்னை போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் பிரதிப் குமார், கோவை மாநகர காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நெல்லை மாவட்ட எஸ்.பி மணிவண்ணன், சென்னை புளியந்தோப்பு துணை ஆணையராகவும், புளியந்தோப்பு துணை ஆணையராக இருந்த ராஜேஷ்கண்ணா, வேலூர் மாவட்ட எஸ்.பியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
/tamil-ie/media/media_files/uploads/2021/11/0002.jpg)
திருச்சி எஸ்பியாக மூர்த்தி சிபி சிஐடி பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக சுஜித்குமார் திருச்சி மாவட்ட எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், நெல்லை எஸ்பியாக சரவணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us