தமிழகத்தில் 21 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தலைமை செயலகத்தில் இருந்து அறிக்கை வெளியாகியுள்ளது. இதில் தஞ்சாவூர், தென்காசி, சிகங்கை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு புதிய எஸ்.பி.க்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திர ரெட்டி வெளியிட்டுள்ள உத்தரவில்,
மத்திய அரசு பணியில் இருந்து திரும்பிய கருணாசாகர் போலீஸ் நலப்பிரிவு டிஜிபி –ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார். போலீஸ் நலப்பிரிவு டிஜிபியாக இருந்த சைலேஷ் குமார் யாதவ் தற்போது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மைலாப்பூர் துணை கமிஷனராக இருந்த ரோகித் நாதன் ராஜகோபால் தற்போது சென்னை அண்ணா நகர் துணை கமிஷனராக பொறுப்பேற்க உள்ளார். மாநில குற்ற ஆவண காப்பக எஸ்.பியாக இருந்த மேகலினா ஐடேன் தென் மண்டல பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்
மதுரை தலைமை துணை கமிஷனராக இருந்த வனிதா தற்போது பெண்கள், மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு துணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார். அதேபோல் சேலம் தலைமை துணை கமிஷனராக இருந்த ராதாகிருஷ்ணன் தற்போது சென்னை மாநகர தலைமை துணை கமிஷனராக பதவியேற்க உள்ளார்.
இந்நிலையில், சாம்சன் தென்காசி எஸ்.பி.யாகவும், தென்காசி எஸ்.பி.யாக இருந்த செந்தில்குமார் - அமலாக்கத்துறை எஸ்.பியாகவும் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அமலாக்கத்துறை எஸ்.பியாக இருந்த., மகேஷ்வரன் - சென்னை தலைமை பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தஞ்சாவூர் எஸ்.பி.யாக ஆஷிஸ் ராவத் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே தங்சாவூர் எஸ்.பி.யாக இருந்த முத்தரசி சிபிசிஐடி எஸ்.பி.யாக பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் போலீஸ் பயிற்சி கல்லூரி எஸ்.பி.யாக இருந்த செல்வராஜ் தற்போது சிவகங்கை மாவட்டத்தின் புதிய எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். தலைமை டிஐஜி மனோகர் சென்னை மேற்கு சட்டம் ஒழுங்கு இணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.
தலைமை டிஐஜி அபிஷேக் தீக்சித் நியமிக்கப்பட்டுள்ளதார். கடலூர், விருதாசலம் சப்டிவிசன் ஏஎஸ்பியாக இருந்த அங்கித் ஜெயின் தற்போது மத்திய மண்டல பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார். திருநெல்வேலி நாங்குநேரி சப் டிவிசன் எஸ்பி. ரஜத் சதுர்வேதி தற்போது சென்னை மைலாப்பூர் துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி, விளாத்திக்குளம் சப்டிவிசன் ஏஎஸ்பி ஸ்ரேயா குப்தா மாநில குற்றப்பிரிவு ஆவண காப்பக எஸ்.பி.யாகவும், விழுப்புரம் திண்டிவனம் சப் டிவிசன் ஏஎஸ்பி அபிஷேக் குப்தா திருப்பூர் வடக்கு துணை கமிஷனராகவும், ஈரோடு மாவட்டம் பெருந்துரை சப்டிவிசன் ஏஎஸ்பி கவுதம் கோயல் தற்போது மதுரை துணை கமிஷனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஏஎஸ்பி அர்விந்த் மதுரை வடக்கு துணை கமிஷனராகவும், திண்டுக்கல் புறநகர் ஏஎஸ்பி அருண் கபிலன் - சென்னை தி நகர் துணை கமிஷனர் ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“