/indian-express-tamil/media/media_files/E0DXIdSfwsfN4tkGGgWP.jpg)
திருச்சி, மதுரை மாநகராட்சி துணை ஆணையர் உள்பட மாநகராட்சிகளில் பணிபுரியும் 25 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் மாநகராட்சிகளில் தற்போது பணியாற்றி வரும் உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யும் நடவடிக்கை தொடர்ந்து வருகிறது. இதில் கடந்த வாரம் மதுரை மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் 3 பேர் உள்பட தமிழகம் முழுவதும் மாநகராட்சிகளில் 17 சுகாதார அலுவலர்கள் (Sanitary officer) அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர்.
அதன் தொடர்ச்சியாக தற்போது மாநகராட்சி ஆணையர்கள், துணை இயக்குனர்கள், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் உள்பட மாநகராட்சி அதிகாரிகள் 25 பேர் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த இடமாற்றத்தில் திருச்சி மாநகராட்சி துணை ஆணையர்கள் நாராயணன், செல்வ பாலாஜி மற்றும் தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி, மதுரை மாநகராட்சி துணை ஆணையாளர் கே.சரவணன் உள்ளிட்டோர் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மேற்கண்ட பணியிட மாற்றத்திற்கான உத்தரவை தமிழக அரசின் முதன்மை செயல் அலுவலர் கார்த்திகேயன் பிறப்பித்துள்ளார்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us