/tamil-ie/media/media_files/uploads/2023/03/download-3.jpeg)
கடந்த மூன்று நாட்களாக அம்பத்தூர் யூனிட்டில் இருந்து பால் வேன்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்படுகிறது (வழக்கமாக அதிகாலை 4 மணிக்கு புறப்படும் என்று கூறப்படுகிறது). சில கடைகளில் விநியோகஸ்தர்கள் பழைய ஆவின் பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னையில் ஆவடி, அம்பத்தூர், கொரட்டூர், அண்ணாநகர், பூந்தமல்லி உள்ளிட்ட மேற்குப் பகுதிகளில் வியாழக்கிழமை பால் உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாலும், அம்பத்தூர் உற்பத்தி ஆலையில் இயந்திரக் கோளாறு காரணமாகவும் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டது என்று கூறப்படுகிறது.
மேற்கு புறநகர்ப் பகுதிகளில் எழுந்த விமர்சனங்களுக்கு பதிலளித்த தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு (TNCMPF) அம்பத்தூர் யூனிட்டில் இயந்திரங்களை முறையாக பராமரிக்காத இரண்டு உதவி பொது மேலாளர்களை சஸ்பெண்ட் செய்தது.
TNCMPF உயர் அதிகாரிகள் வந்த பிறகு, சில பால் வேன்கள் சோழிங்கநல்லூர், மாதவரம் மற்றும் காக்களூர் உற்பத்தி அலகுகளுக்கு திருப்பி விடப்பட்டன, இதன்பிறகு இந்த பண்ணைகளில் இருந்து அதிகப்படியான பால் தேவை உள்ள பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்டது.
இதற்கிடையில், வியாழக்கிழமை, தமிழ்நாடு பால் வியாபாரிகள் நலச் சங்கத்தைச் சேர்ந்த எஸ்.ஏ.பொன்னுசாமி செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்து, பால் கொள்முதலில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை ஈடுகட்ட, பால் உற்பத்திக்கு கொழுப்பு நீக்கப்பட்ட பால் பவுடர் (SMP) மற்றும் வெண்ணெய் ஆகியவற்றைப் பயன்படுத்த அறிவுறுத்தினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.