Advertisment

2026-ல் வலுவான கட்சியுடன் கூட்டணி: உறுதி அளித்த இ.பி.எஸ்; மீண்டும் பா.ஜ.கவுடன் இணையுமா?

தேர்தல் தோல்வி குறித்து தொகுதி வாரியாக ஆலோசனையில் ஈடுபட்டுள்ள எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, 2026 தேர்தலில் வலுவான கட்சியுடன் கூட்டணி அமைப்பதாக உறுதி அளித்தள்ளார்.

author-image
WebDesk
New Update
eps nagai

நாடாளுமன்ற தேர்தல் தோல்வி குறித்து தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம், கட்சி தொண்டர்கள் தோல்விக்கு பலமற்ற கூட்டணியே காரணம் என்று கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisment

அதிமுகவில் முதல்வர் மற்றும் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மரணத்திற்கு பின், எடப்பாடி பழனிச்சாமி, ஒ.பன்னீர்செல்வம் கூட்டணியில் இருந்தபோதும், ஒ.பன்னீர்செல்வம் தனியாக பிரிந்தபோதும், அதிமுக சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் படுதோல்வியை சந்தித்தது. அதிலும் குறிப்பாக கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், ஆளும் கட்சி அந்தஸ்துடன், பா.ஜ.க கூட்டணியில் களமிறங்கிய அதிமுக, எடப்பாடி பழனிச்சாமியின் கொங்கு மண்டலத்தில் மட்டும் வெற்றியை தக்க வைத்தது.

அதன்பிறகு கருத்து வேறுபாடு காரணமாக பா.ஜ.க கூட்டணியில் இருந்து விலகிய அதிமுக, சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில், தேமுதிக கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில், அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவிய அதிமுக, பல இடங்களில் 3- மற்றும் 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டது. மேலும் ஒரு சில தொகுதிகளில் நாம் தமிழர் கட்சியை விடவும் குறைவான வாக்குகளை பெற்றிருந்தது.

அதிமுகவின் இந்த தோல்வி குறித்து அரசியல் தலைவர்கள், அரசியல் விமர்சகர்கள் என பலரும் கடுமையாக விமர்சித்த நிலையில், தேர்தல் தோல்வி குறித்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொகுதி வாரியாக ஆலோசனை கூட்டம் இன்று தொடங்கியது. வரும் 19-ந் தேதி வரை இந்த கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே முதல்நாள் கூட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், ஆகிய தொகுதிகளின் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில், ஒ.பி.எஸ்-ஐ மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு இபிஎஸ் எந்த பதிலும் கூறாத நிலையில், மக்களவை தேர்தலில் வலுவான கூட்டணி கட்சிகள் இல்லை என்று சில நிர்வாகிகள் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரச்னை உள்ள இடங்களை கண்டறிந்து சரி செய்யுமாறு நிர்வாகிகளை இபிஎஸ் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

மேலும் 2026- சட்டசபை தேர்தலில் வலுவான கூட்டணி அமைக்கப்படும் என்று இபிஎஸ் உறுதி அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதே சமயம் நிச்சயமாக பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்பதை இபிஎஸ் திட்டவட்டமாக தெரிவித்ததாகவும் அதிமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Ops Eps Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment