அதிமுக பொதுக்குழு வழக்கு குறித்து சட்டப்போராட்டத்துடன் இனி மக்களை சந்திக்கும் நிகழ்வும் நடைபெறும் என்று ஒ.பி.எஸ் அணியின் ஆதரவாளர் பண்ரூட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஒ.பன்னீர்செல்வம் பங்கேற்காத நிலையில், எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். மேலும் ஒ.பி.எஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து ஒ.பி.எஸ் தரப்பில் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யபட்டது. இதில் முதல்முறை ஒபிஎஸ்க்கு ஆதரவாக தீர்ப்பு அளிக்கப்பட்டதும், அதனை எதிர்த்து இபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது இபிஎஸ் தரப்புக்கு சாதகமாகவும் தீர்ப்பளிக்கப்பட்டது. இதனிடையே சென்னைய உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஒபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.
இந்த மனு மீதான விசாரணை முடிந்து கடந்த வாரம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதில் ஜூலை மாதம் நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று அறிவித்து ஒபிஎஸ் தரப்பு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு ஒ.பி.எஸ் தரப்புக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ள நிலையில், நாங்களை மக்களை சந்திதக்க உள்ளோம் என்று ஒ.பி.எஸ் கூறியிருந்தார்.
இதனிடையே அரசியலில் விதிகளை தீர்மானிப்பது மக்கள் தான். இனி சட்டப்போராட்டத்துடன் மக்களை சந்திக்கும் போராட்டமும் நடைபெறும் என்று ஒ.பி.எஸ் அணியின் ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார். தந்தி டிவியின் கேள்விக்கு என்ன பதில் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர்,
நீதிமன்றத்தின் தீர்ப்பு எங்களுக்கு பின்னடைவாக இருப்பதாக நாங்கள் கருதவில்லை. அதேபோல் சட்டப்போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது என்று சொல்ல முடியாது. அரசியல் என்பது வெறும் சட்டதை மட்டும் பொறுத்தது அல்ல. இனி மக்களை சந்தித்து அரசியல் தான் செய்ய வேண்டுமே தவிர உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றம் என்று சென்றுகொண்டிருந்தால் ஒன்றும் நடக்காது. இந்த 6 மாத காலத்தில் நீதினமன்றத்தில் சென்றதை விட மக்கள் மன்றத்திற்கு அதிகம் சென்றிருக்கலாம். நாங்கள் நீதிமன்றத்தை அதிகமாக நம்பிவிட்டோம். அதன் பலனை இப்போது அனுபவிக்கிறோம்.
மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை மிகுந்த மாற்று அரசியலை வெளிப்படுத்த நாங்கள் முயற்சிக்கிறோம். இதை நிச்சயம் நாங்கள் கொண்டு வருவோம் என்ற நம்பிக்கை உள்ளது. ஒபிஎஸ் பாஜகவை மட்டும் நம்பவில்லை. நம்பக்கூடாதவர்களையும் நம்பினார். ஆனால் பாஜக ஒபிஎஸ்-ஐ கைவிட்டுவிட்டார்கள். சும்மா ஓபிஎஸ்-இடம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் இபிஎஸ் ஆதரிக்க முடிவு செய்துவிட்டார்கள்.
அதனால் பாஜகவை நம்பக்கூடாது. அறத்தின் அடிப்படையில் அவர்கள் முடிவு செய்திருந்தால் ஒபிஎஸ்-ஐ தான் ஆதரித்திருக்க வேண்டும். ஆனால் இவர்கள் நவீன ராமர்கள். வாலியுடன் கூட்டணி சேர்கிறார்கள். சுக்ரீவனை விட்டுவிட்டார்கள். நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே உள்ளது. இனிமேல் ஒபிஎஸ் பலமாகி எப்படி வருவார் அதனால் இபிஎஸ்-ஐ வைத்துதான் தேர்தலை சந்திக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார்கள் என்று கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/