அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் ஸ்ரீபெரும்புதூர் ஏரோஹப் செயல்படும்- தமிழ்நாடு அரசு

அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் வாரத்தில் ஸ்ரீபெரும்புதூர் ஏரோஹப் விண்வெளிப் பூங்கா செயல்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் வாரத்தில் ஸ்ரீபெரும்புதூர் ஏரோஹப் விண்வெளிப் பூங்கா செயல்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
tidco

ஏரோஹப் விண்வெளிப்பூங்கா

தமிழ்நாடு அரசு சார்பில்,  ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சிப்காட்டில்,  விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில் பூங்காவின் ஒரு பகுதியாக, அங்குள்ள சிப்காட் ஏரோ ஸ்பேஸ் பூங்காவில் உள்ள ஏரோஹப்  திட்டம் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

Advertisment

இந்த சிப்காட் ஏரோ ஸ்பேஸ் பூங்காவில் உள்ள ஏரோஹப் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் செயல்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. விண்வெளி மற்றும் பாதுகாப்பு கண்டுபிடிப்புகளுக்கு ஏரோஹப் திட்டம் உதவும் என்றும் இந்த வளாகத்தில் கிட்டத்தட்ட 28 ஏவியோனிக் நிறுவனங்கள் அமைய உள்ளதாகவும் கூறியுள்ளது.

இந்த ஏரோஹப் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில் பூங்காவின் ஒரு பகுதியாகும். இந்த பூங்கா மொத்தம் 250 ஏக்கர் பரப்பளவில் சாலைகள், மழைநீர் வடிகால், மின்சாரம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

வடிவமைப்பு, பொறியியல் மையம், மேம்பட்ட ஏவியோனிக்ஸ் வளாகம், திறன் மேம்பாடு மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான வசதிகள் இங்கு உள்ளது. ஏரோஹப் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில் பூங்காவின் ஒரு பகுதி என்றும் அரசு தெரிவித்துள்ளது. 

Advertisment
Advertisements

இந்த திட்டம் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படும். முதற்கட்டமாக ரூ. 250 கோடி மதிப்பீட்டில் 5.54 லட்சம் சதுர அடியில் கட்டப்பட்டு வருவதாகவும் டிட்கோ இணையதளத்தில் உள்ள தகவலின்படி, கட்டுமானப் பணிகள் ஜூன் 2022க்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போதுதான் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Government

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: