Advertisment

இ.பி.எஸ்-க்கு போட்டியே இல்லை: மொத்தம் 221 மனுக்கள்; அத்தனையும் அவர் பெயரில்!

எடப்பாடி பழனிச்சாமி ஒரு வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில் மற்ற 221 வேட்பு மனுக்களும் எடப்பாடி பழனிச்சாமி சார்பில் மற்றவர்கள் தாக்கல் செய்துள்ளனர்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
aiadmk EPS

அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கிய நிலையில், மொத்தமாக 222 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ந் தேதி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஒ.பி.எஸ் இல்லாமல் நடத்தப்பட்ட பொதுக்குழுவில் ஈ.பி.எஸ் இடைக்கால பொதுச்செயலாளராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற முறையில் கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக கூறி ஒ.பி.எஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதனிடையே பொதுக்குழு மற்றும் இடைக்கால பொதுச்செயலாளர் தேர்வு செய்யக்கட்தற்கு எதிராக ஒ.பி.எஸ் தரப்பு தொடப்பட்ட வழக்கில், பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று அறிவித்த உச்சநீதிமன்றம் ஒ.பி.எஸ் மனுவை தள்ளுபடி செய்தது.

ஆனாலும் கட்சி பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித:து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இது குறித்து வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்த இருப்பதாகவும் மார்ச் 26-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், அதற்கான வேட்புமனு தாக்கல் இன்று (மார்ச் 19) தொடங்கியது.

ஆனாலும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒ.பி.எஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி பொதுச்செயலாளர் தேர்தலுக்கான பணிகளை தொடரலாம் என்றும், வரும் மார்ச் 24-ந் தேதி வரை தேர்தல் முடிவுகள் வெளியிட வேண்டாம் என்று உத்தரவிட்டார்.

மேலும் கடந்த ஜூலை 101-ந் தேதி தாக்கல் செய்யப்பட்ட தீர்மானங்கள் தொடர்பான உத்தரவு வரும் மார்ச் 24-ந் தேதி பிறப்பிக்கப்படும் என்றும் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து இ.பி.எஸ் தரப்பில் பொதுச்செயலாளர் தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், மொத்தம் 222 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதில் எடப்பாடி பழனிச்சாமி ஒரு வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில் மற்ற 221 வேட்பு மனுக்களும் எடப்பாடி பழனிச்சாமி சார்பில் மற்றவர்கள் தாக்கல் செய்துள்ளனர். இதன் மூலம் கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி போட்டியின்றி தேர்வு செய்ய அதிக வாய்ப்புள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment