மத்திய அரசு முன்பு நாங்க கைகட்டி நின்றது இதற்குத்தான்: கே.பி முனுசாமி

உலக தலைவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மிகப்பெரிய தலைவர் நரேந்திர மோடி தான் இந்த நாட்டின் பிரதமராக மீண்டும் வரவேண்டும் என கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

உலக தலைவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மிகப்பெரிய தலைவர் நரேந்திர மோடி தான் இந்த நாட்டின் பிரதமராக மீண்டும் வரவேண்டும் என கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
kp-munusamy

கே.பி.முனுசாமி

மத்திய அரசின் நிதியை தவறாமல் பெறவே பாஜகவிடம் கைகட்டி நின்றதாக அதிமுகவின் துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

Advertisment

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பிறகு தமிழகத்தில் 4 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக மத்திய பாஜக அரசுடன் அதிகமான நெருக்கம் காட்டியது. தொடர்ந்து சட்டமன்ற நடைபெற்ற நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து.

இந்த கூட்டணி குறித்து தமிழக அரசியலில் பெரும் சலசலப்பு எழுந்த நிலையில், அதிமுக தற்போது மோடி அமித்ஷாவின் கையில் தஞ்சமடைந்துள்ளது. அவர்கள் சொல்வது போலத்தான் அதிமுக நடந்துகொள்ளும் என்று எதிர்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தனர். ஆனால் இதையெல்லாம் கண்டுகொள்ளாத அதிமுக தொடர்ந்து பாஜகவுடன் நெருக்கம் காட்டி வந்தது.

இதனிடையே கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த அதிமுகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. கொங்கு மண்டலத்தில் மட்டுமே அதிமுக சராரியான வாக்குகள் பெற்ற நிலையில், தமிழகத்தின் மற்ற அனைத்து பகுதிகளிலும் பெரும் சறுக்களை சந்தித்து. இந்த தோல்விக்கு பின் அதிமுக பாஜக தலைவர்கள் மாறி மாறி குறை சொல்ல தொடங்கினர்.

Advertisment
Advertisements

இதனிடையே தங்களது ஆட்சி காலத்தில் மத்திய அரசின் நிதியை பெறவே அதிமுக பாஜகவிடம் கைகட்டி நின்றதாக அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், நாங்கள் வெளிப்படையாக சொல்கிறோம். இந்த நாட்டை மீண்டும் ஆள்வதற்கு ஒரு தகுதியான தலைவர் உலக தலைவர், உலக தலைவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மிகப்பெரிய தலைவர் நரேந்திர மோடி தான் இந்த நாட்டின் பிரதமராக மீண்டும் வரவேண்டும்.

நாங்கள் தைரியமாக சொல்கிறோம். ஒட்டி பிஜேபி கைக்கட்டி நிற்கிறோம் என்று சொல்வார்கள். கைக்கட்டி நிற்கிறோம் எப்போ என்றால் இந்த ஆட்சியில் இருந்த போது இந்த ஆட்சிக்காக மக்களுக்காக கொண்டு வருகின்ற திட்டங்களில் மத்திய அரசால்ஒதுக்கப்பட்ட நிதியை தவறாமல் பெற வேண்டும் என்பதற்காகத்தான். மக்களுக்காக நின்றோம். எங்களுக்காக நிற்கவில்லை. என்று கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: