Advertisment

கடைசியில் ஒரே அடி... வில்லன் அவுட் : ஒ.பி.எஸ் குறித்து வைத்தியலிங்கம் அதிரடி

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்த ஒ.பன்னீர்செல்வம், கட்சியின் சின்னம், கொடி மற்றும் லெட்டர் பேர்டு ஆகிவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
OPS Vaithiyalingam

ஒ.பி.எஸ். - வைத்தியலிங்கம்

சினிமாவில் ஹீரோ வில்லனிடம் தொடர்ந்து அடி வாங்கி வந்தாலும் கடைசியாக ஒரே அடியில் ஹீரோ வில்லனை சாய்த்துவிடுவார். அதேபோல் ஒபிஸ் – இபிஎஸ் விவகாரத்தில் நடக்கும் என்று ஒபிஎஸ் அணியின் வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

Advertisment

தமிழகத்தில் கடந்த முறை ஆட்சியில் இருந்த அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து ஒபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணிகள் தனித்தனியாக பிரிந்தது. இதில் இபிஎஸ் அணியில் பெரும்பான்மை இருந்ததால், கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். இதனை எதிர்த்து ஒபிஎஸ் தரப்பு மனுதாக்கல் செய்திருந்தாலும் அதில் இபிஎஸ் தரப்புக்கு சாதகமாகவே தீர்ப்பு வழங்கப்பட்டது.

மேலும் இந்த தீர்ப்பை எதிர்த்து ஒபிஎஸ் தரப்பு பலமுறை மேல்முறையீடு செய்தாலும், அதில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதனிடையே தான் பொதுச்செயலாளராக பதவியேற்றுக்கொண்ட எடப்பாடி பழனிச்சாமி, ஒபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அனைவரையும் கட்சியிவல் இருந்து நீக்குவதாக உத்தரவிட்டார். இதனையடுது்து அவர்கள் கட்சி தொடர்பான எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடவும் தடை விதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்த ஒ.பன்னீர்செல்வம், கட்சியின் சின்னம், கொடி மற்றும் லெட்டர் பேர்டு ஆகிவற்றை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதுிபதி, ஒபிஎஸ் தரப்பினர் கட்சியின் சின்னம் மற்றும் லெட்டர் பேர்டை பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டார். இது குறித்து ஒபிஎஸ் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே இன்று செய்தியாளர்களை சந்தித்த ஒபிஎஸ் அணியின் வைத்தியலிங்கம், மேல்முறையீடு மனு தொடர்பாக தீர்ப்பு வந்தவுடுன் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும். அதிமுக வேட்டி கூட கட்டக்கூடாது என்று சொல்கிறார்கள். இது முற்றிலும் தவறானது. அதிமுக கரை வேட்டி கட்டுவது அவரவர் தனிப்பட்ட உரிமை. இதை தவறு என்று யாரும் சொல்ல முடியாது.

மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு வரும் வரை அதிமுகவின் லெட்டர் பேர்டு மற்றும் கொடியை பயன்படுத்த முடியாது. சினிமாவில் ஹீரோ வில்லனிடம் அடி வாங்கிக்கொண்டிருப்பான் கடைசியாக ஒரே அடி வில்லன் அவுட் ஆகிவிடுவான். அந்த கதை நடக்கும். அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் நல்லா இருக்கனும். அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். மீண்டும் தமிழகத்தில் புரட்சி தலைவர் புரட்சி தலைவர் ஆட்சி வரவேண்டும். அதை நிறைவேற்ற வேண்டிய எண்ணத்தில் ஒபிஎஸ் இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

O Panneerselvam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment