/tamil-ie/media/media_files/uploads/2023/06/Alagappa-Unversity.jpg)
அழகப்பா பல்கலைகழகம்
காரைக்குடியில் அழகப்பா பல்கலைகழகத்தில் பகுதி நேரமாக படித்து எம்.ஃபில் பட்டம் பெற்றது செல்லாது என தணிக்கை குழு தெரிவித்ததால், 300-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் சான்றிதழை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் 2016, 2017, 2018 ஆகிய வருடங்களில் அரசு ஊழியர்கள் 300க்கும் மேற்பட்டோர் பகுதிநேர எம்.பில்(M.phil) பட்டப்படிப்பில் பயின்றனர். இந்த எம்.பில்., பட்டம் பெற்ற அரசு ஊழியர்கள் தங்கள் துறைகளில் பட்டங்களை அரசிடம் ஒப்படைத்த நிலையில், அதனை அரசு துறையினர் தனிக்கை குழுவிற்கு அனுப்பினர். இந்த பட்டங்களை பரிசோதித்த தனிக்கை குழு இந்த சான்றிதழ் செல்லாது எனஅறிவித்துள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2023/06/image-31.png)
இதனால் அதிர்ச்சியடைந்த அரசு ஊழியர்கள் பல்கலை கழகத்தை தொடர்பு கொண்டு புகார் அளித்த நிலையில், இந்த புகாரின் மீது பல்கலைக்கழகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பல்கலைகழகத்தை கண்டித்து எம்.பில்., படித்து முடித்த 300-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் இன்று அழகப்பா பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டு சான்றிதழ் ஒப்படைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பல்கலை கழத்தில் பரபரப்பு நிலவுகின்றது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us