வெப்பச் சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு:
சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் அதிகபட்சமாக 36டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியசும் வெப்பம் பதிவாகும் என கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் 4 சென்டி மீட்டரும் மதுரை விமான நிலையம், திருவள்ளூர் மாவட்டம் பூண்டியில் தலா 3 சென்டி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.