தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாகவும் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் இயக்குநர் பேட்டி :
சென்னையில் இன்று வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது.
வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு காற்றழுத்த தாழ்வு நிலையால் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்” எனத் தெரிவித்தார்.