/indian-express-tamil/media/media_files/2025/09/25/tamilnadu-bjp-ele-2025-09-25-17-06-08.jpg)
2026 தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியுடன் போட்டியிடும் பா.ஜ.கவுக்கு தேர்தல் பொறுப்பாளராக, பா.ஜ.க எம்.பி பைஜெயந்த் பாண்டா நியமிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் வரும் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்காக, அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தயாராகி வரும் நிலையில், தி.மு.க., அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள், தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். மேலும், புதிதாக கட்சி தொடங்கிய த.வெ.க தலைவர் விஜய் கடந்த 2-வாரங்களுக்கு முன்பு திருச்சியில் தனது முதல் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.
தி.மு.க அதன் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளது தற்போது முடிவாகியுள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதே கட்சியில், அங்கம் வகித்த அமமுக, கட்சி கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ள நிலையில், ஒ.பன்னீர்செல்வமும், பா.ஜ.க கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ளார். ஆனாலும், கூட்டணியில் அவர்களை சேர்க்க, முயற்சி நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே கடந்த இரு தினங்களுக்கு முன்பு டெல்லி சென்ற தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன், அதிமுக தலைவர்களை சந்தித்து வரும் நிலையில், அடுத்த சில நாட்களில் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனியே தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்காக பா.ஜ.க தேர்தல் பொறுப்பாளராக பா.ஜ.க எம்.பி பைஜெயந்த் பாண்டா நிமயனம் செய்யப்பட்டுள்ளார். தேர்தல் இணை பொறுப்பாளராக மத்திய இணை அமைச்சர் முரளிதர் மொஹோல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல் பீகார் மாநில பா.ஜ.க தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் நியமிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.