/tamil-ie/media/media_files/uploads/2022/04/93_27.jpg)
முதல்வரை வேந்தராக வைத்து தமிழகத்தில் புதிய சித்த மருத்துவ பல்கலைகழகம் தொடங்கப்படும் என்று தமிழக சட்டசபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சித்த மருத்துவம், யுனானி யோகா, ஆயுர்வேதம், ஹோமியோபதி மற்றும் இயற்கை மருத்துவம் உள்ளிட்ட துறைகளுக்கு தனி பல்கலைகழகங்கள் அமைக்கப்படும் என்று தமிழக சட்டசபையில் புதிய சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது
இந்திய மருத்துவ முறைகளுக்காக சித்த மருத்துவ பல்கலைகழகம் அமைக்க முதலில் ரூ 2 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று தமிழக சட்டசபையில். கடந்’த 2021-22-ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்தபோது அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து இன்று நடைபெற்ற மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின மானிய கோரிக்கையின் போது இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னைக்கு அருகில். இந்திய மருத்துவ முறைகளுக்காக சித்த மருத்துவ பல்கலைகழகம் தொடங்கப்படும் என்று நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், முதல்வரை வேந்தராக கொண்டு தொடங்கப்படும் புதிய சித்த மருத்துவ பல்கலைகழகம் தொடர்பான சட்டமசோதாவை தாக்கல் செய்ததை தொடர்ந்து இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாடு இயல் இசை கவின் கலை பல்கலை கழகங்களை தவிர மற்ற அனைத்திற்கும் ஆளுனரே வேந்தராக செயல்பட்டு வரும் நிலையில், தற்போது தொடங்கப்பட உள்ள சித்த மருத்துவ பல்கலைகழகத்திற்கு முதல்வர் வேந்தராகவும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் இணை வேந்தராகவும் இருப்பார்கள் என்று மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும், பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா அனைத்திற்கும் முதலமைச்சர் தலைமை வகித்து பட்டங்கள், பட்டயங்கள் மற்றும் பிற கல்வி சிறப்பு பட்டங்கள் அனைத்தையும் வழங்குவார் என்றும் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் சித்த மருத்துவக் கல்லூரிகள், யுனானி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், ஹோமியோபதி மருத்துவ கல்லூரிகள் அனைத்தும் புதிய பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் இந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.