/indian-express-tamil/media/media_files/2024/12/20/vizc4ZORn2DlhtUo28Dp.jpeg)
கோவை குண்டுவெடிப்பு குற்றவாளியின் இறுதி ஊர்வலத்திற்கு அரசு அனுமதி அளித்ததாக பாஜக மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் கருப்பு தின பேரணி எனும் கண்டனக் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது.
கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த கண்டனப் பேரணியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக மாநில பொருளாளர் எஸ் ஆர் சேகர், இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியன் மற்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள்
பலர் கலந்து கொண்டனர். இதில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியபடி பேரணியாக சென்றனர். அப்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உட்பட அனைவரையும் போலீசார் கைது செய்து வாகனத்தில் அழைத்துச் சென்றனர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.