Advertisment

பள்ளி மாணவிகள் குறித்து அவதூறு : பா.ஜ.க நிர்வாகி சவுதாமணி சென்னையில் கைது

பாஜக நிர்வாகி சவுதாமணி, ஆசிரியையாகவும், செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றியவர். பெண் தொழில் முனைவோராக உள்ளார்.

author-image
WebDesk
New Update
Southam Mani
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக எழுந்த புகாரில், பாஜக மாநில செயற்குழு உறுப்பினரான சவுதாமணி, திருச்சி சைபர் கிரைம் போலீசாரால் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் திருச்சி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

சமூக வலைத்தளத்தில் பள்ளி சிறுமிகள் மது குடிப்பது போன்று வீடியோ வெளியிட்டு திராவிட மாடல் ஆட்சியில் மதுப்புழக்கம் போதைப்பொருள் புழக்கம் அதிகமாக இருப்பதாக அவதூறு கருத்து பரப்பிய பா.ஜ.க மாநில செயற்குழு உறுப்பினர் சவுதாமணி மீது திருச்சி தி.மு.க மத்திய மாவட்ட ஐடி பிரிவினர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமாரிடம் புகார் மனு அளித்தனர்.

இந்த புகாரின் பேரில் குழந்தைகள் மது குடிப்பது போன்ற புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த பா.ஜ.க நிர்வாகி சவுதாமணி மீது ஆறு (504, 505, 153, 66E IT, 74, 77) பிரிவுகளின் கீழ் சைபர் க்ரைம் போலீசார் வழக்கு பதிவு செய்த திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் சவுதாமணி சென்னயில் இன்று(06.03.2024) கைது செய்துள்ளனர்.

முன்னதாக, பாஜக நிர்வாகி சவுதாமணி, ஆசிரியையாகவும், செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றியவர். பெண் தொழில் முனைவோராக உள்ளார். இவர் பாஜக மாநில செயற்குழு உறுப்பினராக இருந்து வருகிறார். கடந்த 2017ஆம் ஆண்டு அப்போதைய பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தவர் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Trichy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment