Advertisment

1.5 கோடி கட்டணம் பாக்கி: தமிழகத்தில் 3700 அரசு பள்ளிகளில் இணையதள சேவை துண்டிக்கப்பட வாய்ப்பு!

தமிழகத்தில் உள்ள 3700 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில், பிஎஸ்என்எல்-ன் பிராட்பேண்ட் சேவையான பாரத் ஃபைபர் (எஃப்டிடிஹெச்) இணைப்பு வழங்கப்பட்டது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
BSNL School

பி.எஸ்.என்.எல் - பள்ளி கல்வித்துறை

தமிழகத்தில் பள்ளிகளில் இணையதள சேவை பெறும் பள்ளிகளில், மொத்த கட்டண நிலுவைத்தொகை ரூ1.5 கோடியை கடந்துள்ளதால், தமிழகம் முழுவதும் உள்ள 3700-க்கு மேற்பட்ட அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கான இணைய இணைப்பு துண்டிக்கப்பட வாய்ப்புள்ளது.

Advertisment

தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில், உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கப்பட்டு, 10-20 கணிணிகள், மற்றும் புரோஜக்டர்கள் வைக்கப்பட்டுள்ளது. இநத கணிணி மற்றும் புரோஜக்டர்கள் இயங்குவதற்காக பள்ளிகளில், பிராண்ட்பேண்ட் சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த சேவையில் இணையத்தின் வேகம் குறைவாக இருந்ததால், அரசு பள்ளிகளில் 100எம்.பி.பி.எஸ் வேகம் கொண்ட பிராண்ட்பேண்ட் இணைதள சேவையை, ரூ1500 கட்டணத்திற்குள் அமைத்துக்கொள்ள பள்ளிகல்வித்துறை அனுமதி வழங்கியது.

இதனையடுத்து தமிழகத்தில் உள்ள 3700 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில்,  பிஎஸ்என்எல்-ன் பிராட்பேண்ட் சேவையான பாரத் ஃபைபர் (எஃப்டிடிஹெச்) இணைப்பு வழங்கப்பட்டது. சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட இந்த இணைப்புகளுக்கான கட்டணத்தை பள்ளிகள் முறையாக செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக பள்ளிகளில் இருந்து வர வேண்டிய இணைய சேவை கட்டணத்திற்கான நிலுவைத்தொகை ரூ1.5 கோடியாக அதிகரித்துள்ளது.

இந்த நிலுவைத்தொகை காரணமாக பள்ளிகளில், இணைதள சேவையை உடனடியக நிறுத்த பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பள்ளி கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “அரசு உயர்நிலை, மேல்லைப் பள்ளிகளின் உயர் தொழில் நுட்ப ஆய்வகங்களில் உள்ள பிராட்பேண்ட் சேவைக்கான நிதியானது சமக்ர சிக்க்ஷா திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. ஆனால், இதற்கான சேவை கட்டணம் ரூ. 1.5 கோடி நிலுவையில் உள்ளதாகவும், அதை உடனே கட்டவில்லை எனில் சேவை துண்டிக்கப்படும் எனவும் பிஎஸ்என்எல் நிறுவனம் கடிதம் மூலமாக தெரிவித்துள்ளது. 

Advertisment
Advertisement

எனவே , அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு உடனே தொகையை செலுத்த அறிவுரைகள் வழங்க வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Bsnl Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment