2025 - 2026 ஆம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட் வருகிற மார்ச் 14 ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், 2025- 2026 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மார்ச் 14ஆம் தேதி காலை 9.30 மணிக்கு தாக்கல் செய்யப்படும் என கூறினார். மேலும் பேசிய அவர் தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்வார் என்றும் கூறினார்.
நிதிநிலை அறிக்கையை தொடர்ந்து மார்ச் 15 ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய உள்ளதாகவும் மேலும் பேரவை கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடக்கும் என்பது அலுவலக ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் எனவும் சபாநாயகர் அப்பாவு கூறினார்.