ஊடகங்கள் முடக்கம் எமர்ஜென்சி காலகட்டத்தை ஞாபகப்படுத்துகிறது: எல்.முருகன் கருத்து

புதிய தலைமுறை, ஜனம் தொலைக்காட்சி போன்ற ஊடகங்களை முடக்கும் நோக்கத்தில் அரசு கேபிள் இருந்து தொலைக்காட்சிகள் மறைக்கப்பட்டது எமர்ஜென்சி காலகட்டத்தை ஞாபகப்படுத்துவதாக இருக்கிறது.

புதிய தலைமுறை, ஜனம் தொலைக்காட்சி போன்ற ஊடகங்களை முடக்கும் நோக்கத்தில் அரசு கேபிள் இருந்து தொலைக்காட்சிகள் மறைக்கப்பட்டது எமர்ஜென்சி காலகட்டத்தை ஞாபகப்படுத்துவதாக இருக்கிறது.

author-image
WebDesk
New Update
L Muruga

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள முகாம் அலுவலகத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அவர்களை புதிதாக பாஜக சார்பில் பொறுப்பு வழங்கப்பட்ட நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அதனை தொடர்ந்து நீலகிரி மற்றும் கோவை மாவட்ட நிர்வாகிகளுடன் கட்சி சார்ந்த ஆலோசனைகளை மத்திய அமைச்சர் எல்.முருகன் ஈடுபட்டார். அதனை தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

Advertisment

அதில் செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ஆளுநர் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு அரசியல் செய்வதாகவும் ஆளுநரை பொறுத்தவரை திமுக செய்யும் ஊழல்களுக்கு தடையாக இருப்பதால் அவரிடம் வேண்டுமென்றே தவறான கோப்புகளை அனுப்பி பிரச்சனை செய்வதாக கூறினார்.

கரூர் சம்பவத்தைப் பொறுத்தவரை அது ஒரு துயர சம்பவம் அதில் எந்த அரசியல் கருத்தும் கூறுவதற்கு விருப்பமில்லை, இது சம்பந்தமாக என்டிஏ அமைத்த குழு அறிக்கை அளித்துள்ளதாக தெரிவித்தார். மேலும் புதிய தலைமுறை, ஜனம் தொலைக்காட்சி போன்ற ஊடகங்களை முடக்கும் நோக்கத்தில் அரசு கேபிள் இருந்து தொலைக்காட்சிகள் மறைக்கப்பட்டு வருகிறது. இந்த போக்கு எமர்ஜென்சி காலகட்டத்தை ஞாபகப்படுத்துவதாக இருக்கிறது.

அவர்களுக்கு சாதகமாக செயல்பட்டால் தப்பில்லை உண்மையை பேசினால் அவர்கள் மீது வன்மத்தை திணிப்பதாக ஒடுக்கு முறையை கையாள்வதாகவும் தெரிவித்தார்.

Advertisment
Advertisements
L Murugan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: