சென்னை ஐஐடி வளாகத்தில் மேலும் ஒரு மாணவர் தற்கொலை : போலீஸ் விசாரணை

விடுதி அறையில் மாணவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து கடிதங்கள் ஏதேனும் இருக்கிறதா என்று போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

விடுதி அறையில் மாணவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து கடிதங்கள் ஏதேனும் இருக்கிறதா என்று போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
IIT-Madras

சென்னை ஐஐடி

சென்னை ஐஐடியில் படித்து வந்த மத்திய பிரதேசத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் ஐஐடியில் 2-ம் ஆண்டு பி.டெக் படித்து வந்தவர் கேதார் சுரேஷ். மத்திய பிரதேசத்தை சேர்ந்த இவர்,  சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்த நிலையில், இன்று காலை இவர் தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்காலை செய்துகொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் விடுதி அறையில் மாணவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து கடிதங்கள் ஏதேனும் இருக்கிறதா என்று போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் சென்னை ஐஐடியில் பிடெக் 3-ம் ஆண்டு படித்து வந்த ஆந்திராவை சேர்ந்த புஷ்பக் என்ற மாணவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், தற்போது மேலும் ஒரு மாணவர் தற்கொலை செய்துகொணடது ஐஐடி வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment
Advertisements

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: